வியாழன், 24 பிப்ரவரி, 2011

விக்கிலீக்ஸ்:கத்தாஃபியின் ஊழல்கள்

லிபியா நாட்டின் ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபி மற்றும் அவரது குடும்ப அங்கத்தினரின் ஊழல்கள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் ஆகியன வெளிவரத் துவங்கியுள்ளன.

அதிகாரத்தைக் கைப்பற்ற கத்தாஃபியின் பிள்ளைகளுக்கிடையே நடைபெறும் போட்டிகளையும், ஊழலையும் விக்கிலீக்ஸ் நேற்று முன்தினம் வெளியிட்டது.

புரட்சி அமெரிக்காவிலும், மேற்கத்திய நாடுகளிலும் பரவும் - அஹ்மத் நஜாத்


டெஹ்ரான்,பிப்.24:மேற்காசியாவிலும், வட ஆப்பிரிக்காவிலும் ஆச்சரியப்படத்தக்க வகையில் உருவான மக்கள் புரட்சி அமெரிக்காவிலும், மேற்கத்திய நாடுகளிலும் பரவு காலம் வெகுதூரத்தில் இல்லை என ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார்.


நாட்டு மக்களை அடக்கி ஒடுக்குவதில் அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் பிரசித்திப் பெற்றவையாகும். அமெரிக்கா ஆதரவு பெற்ற அடக்குமுறை ஆட்சியாளர்களுக்கெதிராகத்தான் தற்போதைய எழுச்சிப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

1979-ஆம் ஆண்டில் ஈரானில் அமெரிக்க ஆதரவுப் பெற்ற மன்னர் ஆட்சியை மண்ணைக் கவ்வச் செய்த புரட்சியைத்தான் இன்றைய புரட்சியாளர்கள் முன்மாதிரியாக காண்கிறார்கள் என அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார்

யெமனில் ஏழு எம்.பிக்கள் அதிபரின் கட்சியை விட்டு விலகினர்


யெமன் நாட்டின் ஏகாதிபத்தியவாதி அலி அப்துல்லாஹ் ஸாலிஹிற்கு எதிராக மக்கள் எழுச்சி கொளுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருக்கும் வேளையில் அரசின் நடவடிக்கையை கண்டித்து ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 7 பேர் கட்சியிலிருந்து ராஜினாமாச் செய்துள்ளனர். இத்துடன் அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் கட்சியிலிருந்து விலகும் எம்.பிக்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

புதன், 16 பிப்ரவரி, 2011

மத்திய கிழக்கில் ஒரு பார்வை


1.துனிசியா: பின் அலி ஆட்சி அகற்றம். ஊர் அடங்கு உத்தரவு நீக்கம். அவசரகால சட்டம் நடைமுறையில். மக்கள் போராட்டத்தை தடுக்க தேசிய கவுன்சில் அமைக்கத் திட்டம். நகரங்களில் ஆளுநர்கள் மாற்றம் மற்றும் வதந்திகளை கிளப்பி குழப்பம் உண்டாக்கும் நபர்களை கைது செய்ய அல்லது சுடுவதற்கு அனுமதி.

வியாழன், 10 பிப்ரவரி, 2011

மிரட்டும் சுலைமான், அடம் பிடிக்கும் முபாரக், அசராத மக்கள்


கெய்ரோ,பிப்:எகிப்து சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் பதவி விலகக்கோரி அந்நாட்டு மக்கள் நடத்திவரும் எழுச்சிமிகு போராட்டம் 16-வது நாளை தாண்டிவிட்டது. ஆனால், பதவியை விட்டு விலகாமல் அடம்பிடித்து வருகிறார் ஹுஸ்னி முபாரக். எகிப்தின் முக்கிய எதிர்கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் முபாரக் பதவி விலகியே தீரவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

எகிப்தின் மக்கள் திரள் போராட்டத்திற்கு துருக்கி, ஈரான் ஆதரவு, கவலையில் இஸ்ரேல்

அங்காரா,பிப்.2:எகிப்தின் மண்ணில் புயலாக வீசும் மக்கள் திரள் போராட்டத்தினால் முப்பது ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்திவந்த ஹுஸ்னி முபாரம் மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

முபாரக்கை ஆட்சியை விட்டு அகற்றியே தீருவோம் என்ற உறுதியுடன் தஹ்ரீர் சதுக்கத்தில் பெருந்திரளாக கூடியிருக்கும் லட்சக்கணக்கான எகிப்திய மக்களுக்கு துருக்கியும், ஈரானும் ஆதரவளித்துள்ளன.

எகிப்து நாட்டில் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கிற்கு எதிரான மக்கள் போராட்டம் துவங்கி ஒருவாரம் கழிந்தபிறகும் மெளனம் சாதித்து வந்த துருக்கி பிரதமர் ரஜன் தய்யிப் உருதுகான் தற்போது எகிப்திய மக்களுக்கு தனது பரிபூரண ஆதரவை தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஸ்திரத்தன்மையும், பாதுகாப்பும் நிலைப்பெற வேண்டுமானால் மக்களின் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டுமென பாராளுமன்றத்தில் நடத்திய உரையில் அவர் தெரிவித்தார்.

எகிப்திற்கு நன்மையை ஏற்படுத்தும் காரியங்களை செய்யுங்கள். மக்களை திருப்தி படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என முபாரக்கிடம் உருதுகான் தெரிவித்துள்ளார்.

எகிப்து சுமூகமான சூழலுக்கு மாறினால் தான் கெய்ரோவுக்குச் செல்லப்போவதாக அவர் அறிவித்துள்ளார். அதேவேளையில், போராட்டம் அமைதியான வழியில் நடத்த வேண்டுமெனவும், நாட்டின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டுமெனவும் அவர் எகிப்து நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எகிப்திலும், துருக்கியிலும் விரைவில் சீர்திருத்தம் வரவேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். அத்துடன் அமைதியும், பாதுகாப்பும் தேவை. ஜனநாயக்த்திற்கான போராட்டங்களுக்கு துருக்கி என்றுமே ஆதரிக்கும் என உருதுகான் அறிவித்தார்.

எகிப்தில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராடிவரும் மக்களுக்கு ஈரானும் தனது பரிபூரண ஆதரவை தெரிவித்துள்ளது. உலகில் சுதந்திரத்திற்காக போராடக் கூடியவர்களுடன் நாங்கள் இருப்போம். மகத்தான நாடான எகிப்தில் புரட்சிக்கு நாங்கள் எங்களுடைய ஆதரவை பிரகடனப்படுத்துகிறோம் என ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் ஸாலிஹி தெரிவித்துள்ளார்.

எகிப்தின் புரட்சி இஸ்லாமிய மேற்காசியா உருவாக உதவும் என நம்புவதாக ஈரான் தெரிவித்தது. அதேவேளையில் அரபுலகத்தை அதிரவைத்துள்ள போராட்டத்தில் அமெரிக்கா தலையிடுவதாக ஸாலிஹி குற்றஞ்சாட்டினார்.

பிராந்தியத்தில் மாற்றம் தேவை. மக்கள் ஆதரவு இல்லாத ஆட்சி கவிழவேண்டும். மேற்கத்திய சக்திகளின் கட்டுப்பாட்டிலுள்ள அரசுகள் கவிழ்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை நிரூபிக்கின்றனர் துனீசியா மற்றும் எகிப்து நாட்டு மக்கள் என ஸாலிஹி தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் எகிப்தில் ஈரானில் ஏற்பட்ட புரட்சிபோல நிகழ்ந்துவிடுமோ என்ற கவலையில் இஸ்ரேல் உள்ளது. அராஜகங்கள் நிறைந்த சூழலில் ஒரு கட்டமைக்கப்பட்ட இஸ்லாமிய சக்திக்கு நாட்டின் கட்டுப்பாட்டை தங்கள் வசம் கொண்டுவர இயலும். ஈரானில் அதுதான் நடந்தது. மற்ற சில இடங்களிலும் அதுதான் சம்பவித்தது என நேற்று முன்தினம் ஜெர்மனி சான்ஸ்லர் ஆஞ்சலா மெர்க்கலுடன் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

தங்களின் உற்றத் தோழனான முபாரக் தனிமைப்படுத்தப்படுவதை இஸ்ரேல் கவலையுடன் பார்க்கிறது.முபாரக்கிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்காதீர்கள் என இஸ்ரேல் அமெரிக்காவுடனும், மேற்கத்திய நாடுகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்கு அழுத்தம் கொடுக்க பல்வேறு நாடுகளில் செயல்படும் தங்களது தூதரக பிரதிநிதிகளுக்கு உத்தரவிட்டுள்ளது இஸ்ரேல்.

சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கிற்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ள மக்களின் மீது பிரயோகிக்க அந்நாட்டு அதிபர் ஹுஸ்னி முபாரக்கிற்கு ஆயுதங்களை இஸ்ரேல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆயுதங்களுடன் இஸ்ரேலிருந்து புறப்பட்ட விமானம் கெய்ரோ சர்வதேச விமானநிலையத்தில் கடந்த சனிக்கிழமை வந்துள்ளதாக இண்டர்நேசனல் நெட்வர்க் ஃபார் ரைட் அண்ட் டெவல்ப்மெண்டை மேற்கோள்காட்டி பிரஸ் டி.வி தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் தடைச் செய்யப்பட்டுள்ள வாயுக்கள் அடங்கிய ஆயுதங்கள் எகிப்திற்கு வந்துள்ளன. போராட்டத்தை தணியச்செய்ய முபாரக் நடத்திய முயற்சிகளை மக்கள் புறக்கணித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
எகிப்தின் சினாய் தீவில் பன்னாட்டு படையினருக்கும், கண்காணிப்பாளர்களுக்கும் கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக அமெரிக்க விமானப்படை ரெஜிமண்ட் அந்நாட்டிற்கு அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்து-இஸ்ரேல் ஒப்பந்தத்தில் நிபந்தனைகள் பேணப்படுகிறதா? என்பதை உறுதிச் செய்வதற்கான சர்வதேச அமைதிப்படைதான் எம்.எஃப்.ஒ.

அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான எகிப்து நாட்டு சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் நிலைமை மக்கள் திரள் போராட்டத்தைத் தொடர்ந்து மோசமாக உள்ளது. இச்சூழலில்தான் அமெரிக்காவின் விமானப்படை யூனிட் எகிப்திற்கு செல்வது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

திங்கள், 31 ஜனவரி, 2011

அல் பராதியை எகிப்தின் தலைவராக முன்னிறுத்தும் பணியை அமெரிக்கா செய்து வருவதாகவும் ஈரான் கூறியுள்ளது.

எகிப்தின் அதிபராக கடந்த 30 ஆண்டுகளாகப் பதவி வகித்து வரும் ஹோஸ்னி முபாரக் பதவி விலகக் கோரி நடைபெற்று வரும் மக்கள் புரட்சி 7ஆம் நாளாகத் தொடர்கிறது.

எகிப்தில் நிலவி வரும் வேலை வாய்ப்பின்மை மற்றும் ஏழ்மையால் அதிருப்தியில் இருந்த மக்கள் அண்டை நாடான துனீசியாவில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து வீதிக்கு வந்து போராட்டத்தில் குதித்தனர். கடந்த 24 ஆம் தேதி ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக ஆரம்பித்த இந்த மக்கள் புரட்சி, இன்றும் ஏழாவது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.

யெமன் நாட்டில் போராட்டம் உச்சக்கட்டம்


ஸன்ஆ,ஜன.31:யெமன் நாட்டின் சர்வாதிகாரி அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் ராஜினாமாச் செய்யக்கோரி நடைபெறும் மக்கள் திரள் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. தலைநகரான ஸன்ஆவில் எகிப்து நாட்டு தூதரகத்தை நோக்கி பேரணியாக புறப்பட்ட புரட்சியாளர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். ஆனால் எவரும் காயமடைந்ததாக தகவல் இல்லை.

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

எகிப்தில் சர்வாதிகார அரசுக்கெதிரான மக்கள் திரள் போராட்டம்

ஆட்சிமாற்றத்தை கோரி ஊரடங்கு உத்தரவை மீறியும்,பாதுகாப்புப் படையினருக்கு சவால் விட்டும் ஆறாவது நாளாக களமிறங்கிய எகிப்து நாட்டு மக்கள் கெய்ரோவின் கட்டுப்பாட்டை தங்கள் வசம் கொண்டுவந்துள்ளனர்.

ராணுவ உடையை களைந்துவிட்டு ராணுவ வீரர்களும் மக்களோடு போராட்டத்தில் கலந்துகொண்டனர். போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கு இடையே நடந்த மோதலில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 150 ஐ தாண்டியுள்ளது. நான்காயிரத்திற்கும் அதிகமானோருக்கு காயமேற்பட்டுள்ளது. போலீஸ் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய வேளையிலும் மக்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை.

திங்கள், 3 ஜனவரி, 2011

மேற்கத்திய நாடுகளின் உளவு விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்

தெஹ்ரான்,ஜன:வளைகுடா நாடுகளில் மேற்கத்திய நாடுகளுக்காக உளவு வேலைப் பார்த்த இரண்டு ஆளில்லா விமானங்களை ஈரானின் புரட்சிப் படையினர் சுட்டு வீழ்த்தியதாக மூத்த கமாண்டர் அறிவித்துள்ளார்.

கடந்த சில காலங்களுக்கிடையே பல விமானங்களையும் சுட்டு வீழ்த்தியுள்ளதாக பார்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

செவ்வாய், 28 டிசம்பர், 2010

ஈரான் அணுசக்தி நாடு - அஹ்மத் நஜாத் பிரகடனம்

டெஹ்ரான்,டிச.29:ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகளை தாண்டி அந்நாடு அணுசக்தி நாடாக மாறியுள்ளது என ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் பிரகடனப்படுத்தியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் நிர்பந்தத்தாலும், பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டும் ஈரானுக்கெதிராக ஐ.நா தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், அவர்கள் அனைவரின் முயற்சிகளையெல்லாம் தோற்கடித்து ஈரான் அணு சக்தி நாடாக மாறியுள்ளது என கரஜில் தெற்கு நகரத்தில் கூடியிருந்த மக்களிடையே அஹ்மத் நஜாத் பிரகடனப்படுத்தினார்.

செவ்வாய், 21 டிசம்பர், 2010

சவூதி அரேபியாவுடனான நல்லுறவுக்கு முன்னுரிமை


டெஹ்ரான்,டிச.20:சவூதி அரேபியாவுடனான நல்லுறவுக்கு நான் முன்னுரிமை அளிப்பேன் என ஈரானின் புதிய வெளியுறவு அமைச்சர் அலி அக்பர் ஸலாஹி தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்திப் பற்றிய அச்சம் வளைகுடா பகுதியில் நிலவுவதை கருத்திக்கொண்டே இம்முடிவு எனக் கருதப்படுகிறது.
முக்கிய நட்பு நாடான துருக்கியுடனான உறவை பலப்படுத்தவும், ஐ.நாவில் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகளான சீனா மற்றும் ரஷ்யாவுடனான உறவை மேம்படுத்தவும் முன்னுரிமை அளிக்கப்போவதாக அலி அக்பர் ஸலாஹி தெரிவித்தார்.

இந்தியர்களின் மரணத்தண்டனை ரத்து

தோஹா,டிச.21:கத்தர் நாட்டில் இரண்டு இந்தியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரணத் தண்டனையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்துச் செய்தது.

கேரள மாநிலத்தைச்சார்ந்த மணிகண்டன் மற்றும் உண்ணிகிருஷ்ணன் ஆகியோரின் மரணத் தண்டனையை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு கத்தரில் இந்தோனேஷியாவைச் சார்ந்த இளம்பெண் கொலை வழக்குத் தொடர்பாக இருவரும் தண்டனை விதிக்கப்பட்டனர். இவர்களிருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீஸ் கூறியிருந்தது.
கடந்த 2006 ஆம் ஆண்டு இவர்களிருவருக்கும் மரணத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

சனி, 18 டிசம்பர், 2010

எங்கள் உயிர் உள்ளவரை இஸ்ரேலை ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டோம்


லெபனான்,டிச.18:"நாங்கள் உயிருடன் இருக்கும்வரை இஸ்ரேலை ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டோம். மேலும் ஃபலஸ்தீனின் ஒரு இஞ்ச் நிலத்தைக்கூட விட்டுக் கொடுக்கமாட்டோம்" என லெபனான் ஹிஸ்புல்லாஹ் போராளி இயக்கத்தின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் தெரிவித்துள்ளார்.

புதன், 8 டிசம்பர், 2010

இஸ்ரேல் குடியேற்ற நிர்மாணத்தை முடக்குவதற்கான முயற்சி தோல்வியைத் தழுவியதாக அமெரிக்கா

வாஷிங்டன்,டிச.9:மேற்காசியாவின் அமைதிக்கான முக்கிய காரணியான ஃபலஸ்தீனின் மேற்குகரையில் இஸ்ரேல் குடியேற்ற நிர்மாணத்தை தடுத்து நிறுவதற்கான தங்களுடைய முயற்சி தோல்வியைத் தழுவியதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பி.ஜெ.க்ரவ்லி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். ஆனால், தங்களுடைய முயற்சியிலிருந்து முற்றிலும் இதுவரை பின்வாங்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
விக்கிலீக்ஸ் அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை வெளியிட்ட சூழலில் அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மட்டத்தில் குழப்பம் ஏற்பட்டதன் காரணமாக பேச்சுவார்த்தையை ஒத்திவைத்துள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யஹூத் பாரக் தெரிவித்துள்ளார்.

வடகொரியா பிரச்சனையும் அமெரிக்காவிற்கு தலைவேதனையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் கூறினார். ஆனால் இதனை மறுத்துள்ள பி.ஜெ.க்ரவ்லி தங்களுடைய செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என தெரிவித்தார்.

இரு பிரிவினர்களுக்கிடையே பேச்சுவார்த்தை துவங்குவதற்கு குடியேற்ற நிர்மாணத்தை தற்காலிமாக முடக்கும் மெரிட்டோரியம் தொடர்வதுதான் ஒரே வழி. ஆனால், எங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றிக்கிடைக்கவில்லை. ஆனாலும், இரு பிரிவினர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தை தொடரும் என பி.ஜெ.க்ரவ்லி தெரிவித்தார்.

அமெரிக்காவின் தீர்மானத்தை படித்த பிறகே பதில் அளிக்க இயலும் என ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸின் செய்தித் தொடர்பாளர் மாஇன் ராஷித் அரீக்கத் தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் ஆன்லைன் இணையதளத்திற்கு மாற்றாக புதிய இணையதளம்


கெய்ரோ,டி.9:கத்தர் நாட்டைச் சார்ந்த நிதி உதவியாளர்களுக்கும் இஸ்லாம் ஆன்லைன் இணையதள இதழின் ஆசிரியர் குழுவிற்கும் இடையே பல மாதங்கள் தொடர்ந்த மோதலுக்கு பின்னர் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லான் ஆன்லைன் இணையதளத்தை உருவாக்கிய ஆசிரியர்குழு மாற்று இணையதளமாக ஆன் இஸ்லாம் டாட் நெட் (onislam.net) என்ற இணையதளத்தை கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி துவக்கியுள்ளது.

ஈரானுடனான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை

ஜெனீவா,டிச.8:சுவிட்சர்லாந்து தலைநகரான ஜெனீவாவில் உலக வல்லரசு நாடுகளுடனான ஈரானின் முதல் கட்ட பேச்சுவார்த்தை நிறைவுப்பெற்றது.

பேச்சுவார்த்தையின் அடுத்தக்கட்டம் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நடைபெற இருக்கிறது. அணுசக்தித் தொடர்பான முக்கிய விஷயங்களில் பூரணமான பேச்சுவார்த்தை நடந்ததாக பேச்சுவார்த்தைக்கு தலைமை வகித்த ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறை தலைவர் பரோணஸ் ஆஷ்டன் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஒன்றும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஐ.நா விதித்துள்ள தடையை நீக்க ஈரான் கோரிக்கை விடுத்தது. அடுத்த ஆண்டு ஜனவரி கடைசியில் நடைபெறவிருக்கும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை சாதாரண விஷயங்களும், பரஸ்பர ஒத்துழைப்பும் நிகழ்ச்சி நிரலாக இருக்கும் என ஈரான் அதிகாரியை மேற்கோள்காட்டி பிரான்சு நாட்டு செய்தி நிறுவனம் கூறுகிறது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்சு, பிரிட்டன் ஆகியவற்றின் பிரதிநிதிகளும், ஜெர்மன் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

ஈரானின் பிரதிநிதியாக மூத்த அணுசக்தி மத்தியஸ்தர் ஸஈத் ஜலீல் பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டார்.



செவ்வாய், 7 டிசம்பர், 2010

விக்கிலீக்ஸ்:போராளிகளின் பொருளாதார பின்னணி சவூதி அரேபியா - அமெரிக்கா

 வாஷிங்டன்,டிச.7:அல்காயிதா, தாலிபான், லஷ்கர்-இ-தய்யிபா உள்ளிட்ட போராளி அமைப்புகளுக்கு முக்கியமான பொருளாதார பின்னணி சவூதி அரேபியா என அமெரிக்கா கருதுகிறது.

இதனை விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க வெளியுறவுக் கொள்கை ரகசியச் செய்தியில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் சவூதி அரேபியாவை இத்தகைய அமைப்புகளின் உறைவிடமாக எழுதியுள்ளார்.

ஹஜ், ரமலான் வேளைகளில் இவ்வமைப்புகள் சவூதி அரேபியாவிலிருந்து நிதி திரட்டுவதாகவும் அந்த ஆவணங்களில் காணப்படுகிறது. அல்காயிதாவுக்கு நிதி சேர்வதை தடுக்க அமெரிக்கா முயலும் வேளையில் சவூதிஅரேபியா இவ்விவகாரத்தில் பெரிய அளவில் விருப்பம் காண்பிக்கவில்லை எனவும், அல்காயிதாவை ஆதரிக்கும் லஷ்கருக்கும், தாலிபானுக்கும் நிதி தாராளமாக கிடைப்பதாகவும் ஹிலாரி குறிப்பிடுகிறார்.

அதேவேளையில், அமெரிக்காவின் நிர்பந்தம் மூலம் அல்காயிதாவின் பொருளாதார வரவை தடுப்பதில் ஓரளவு வெற்றிப் பெற்றிருப்பதாகவும் ஹிலாரி ஆறுதல் கொள்கிறார்.

புனித யாத்ரீகர்கள் போர்வையில் ஹஜ்ஜிற்கு வருவதால் சவூதி அரேபியாவிற்கு இவ்விவகாரத்தில் உறுதியான நடவடிக்கைகள் எடுப்பது சிரமமாகும் எனவும் அந்த ஆவணங்களில் காணப்படுகிறது.

ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை துவங்கியது

 ஜெனீவா,டிச.7:ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக ஈரானுக்கும் உலகின் வல்லரசு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்து தலைநகரமான ஜெனீவாவில் துவங்கியது.

ஒரு வருடத்திற்கு பிறகு முதன்முறையாக உலகநாடுகள் ஈரானுடன் பேச்சுவார்த்தை இவ்விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துகின்றன.

ஐரோப்பிய யூனியனின் பிரதிநிதி காதரின் அஷ்டன் தலைமை வகிக்கும் இப்பேச்சுவார்த்தையில் பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.

ஈரானின் பிரதிநிதியாக மூத்த அணுசக்தி மத்தியஸ்தர் ஸஈத் ஜலீல் பங்கேற்கிறார். அணுசக்தி திட்டத்தில் முக்கிய காரணியான செறியூட்டப்படாத யுரேனியத்தை உள்நாட்டில் நிர்மாணிப்பதில் தாங்கள் வெற்றிப் பெற்றிருப்பதாக ஈரான் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தது.

ஈரான் அணு ஆயுதங்களை நிர்மாணிப்பதாக கூறும் மேற்கத்திய நாடுகளின் குற்றச்சாட்டிற்கு அந்நாடு மறுப்புத் தெரிவித்திருந்தது.

அணு ஆயுதங்களின் காலம் கடந்துவிட்டது - அஹ்மத் நஜாத்

டெஹ்ரான்,டிச.7:அணு ஆயுதங்களின் காலம் கழிந்துவிட்டதாகவும், அமெரிக்க ஆப்கன், ஈராக் நாடுகளை ஆக்கிரமித்து நடத்திய போர்களில் அணு ஆயுதங்களை பயன்படுத்தாதது இதனை தெளிவுப்படுத்துவதாகவும் ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் டெஹ்ரானில் ஒரு மாநாட்டில் உரையாற்றும் பொழுது குறிப்பிட்டார்.

மேற்கத்திய சக்திகளிடம் ஏராளமான அணுகுண்டுகள் உள்ளன. பின்னர் ஏன் அவர்கள் கடந்த மூன்று வருடங்களாக ஈரான் அணுஆயுதம் நிர்மாணிக்கு விவகாரத்தில் கவலை கொள்கின்றனர்?என நஜாத் கேள்வி எழுப்பினார்.

மேற்கத்திய சக்திகளுக்கு ஏதோ சிறப்பான திறமைகளும், பதவிகளும் உண்டு என சிலர் கருதுகின்றனர். ஆனால், பொருளாதார நெருக்கடியை சந்தித்த பொழுது என்ன நடந்தது என்பதை நாம் கண்டோம் எனவும் நஜாத் கூறினார்.

கடந்த வாரம் ஈரான் அணு விஞ்ஞானிகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்த நஜாத், 'ஈரானின் செயல்பாடுகளைக் குறித்து அமெரிக்கா அஞ்சுகிறது. எங்களின் செயல்பாடுகளில் மிரண்டுபோன அமெரிக்கா அணுசக்தி விஞ்ஞானிகளை கொலைச் செய்கிறது' என குற்றஞ்சாட்டினார்

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

கத்தரில் உலகக்கோப்பை கால்பந்து: ஒபாமாவின் அறிக்கைக்கு எதிராக டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி

தோஹா,டிச.6:2022 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நாடாக கத்தர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை நடத்தும் நாடுகளுக்கிடையேயான போட்டியில் அமெரிக்காவை பின் தள்ளிவிட்டு கத்தர் தேர்வுச் செய்யப்பட்டது தவறான தீர்மானம் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

வளைகுடா ஒத்துழைப்பு கூட்டமைப்பின்(ஜி.சி.சி) முக்கியத்துவம் வாய்ந்த உச்சிமாநாடு இன்று

அபுதாபி,டிச.6:வளைகுடா ஒத்துழைப்பு கூட்டமைப்பின்(ஜி.சி.சி) அங்க நாடுகளின் 31 வது உச்சிமாநாடு இன்று அபுதாபியில் யு.ஏ.இ அதிபர் ஷேக் கலீஃபா பின் ஸயீத் அல் நஹ்யானின் தலைமையில் துவங்கும்.

இரண்டு தினங்களாக நடைபெறும் இந்த உச்சிமாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என ஜி.சி.சியின் பொதுச் செயலாளர் அப்துல் றஹ்மான் ஆதிய்யா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

மாறுபட்ட தீர்மானங்கள் இம்மாநாட்டில் எடுக்கப்படும் என ஆதிய்யா தெரிவித்தார். ஜி.சி.சி நாடுகள் நடைமுறைப்படுத்தப்போகும் ஒரே நாணயம், கஸ்டம்ஸ், பொதுசந்தை, ஜி.சி.சி நாடுகளை இணைக்கும் ரெயில்வே, சக்தி, சுதந்திர வியாபாரம் உள்ளிட்ட திட்டங்களின் முன்னேற்றத்தைக் குறித்து விவாதிக்கப்படும்.

அபுதாபியில் எமிரேட்ஸ் பேலஸ் ஹோட்டலில் வைத்து இம்மாநாடு நடைபெறுகிறது. ஒரே நாணயம் திட்டத்திலிருந்து விலகி நின்ற யு.ஏ.இ இத்திட்டத்தில் சம்மதம் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானின் அணுசக்தி திட்டம், ஈரான் கைப்பற்றிய யு.ஏ.இயின் மூன்று தீவுகள், ஈராக், ஃபலஸ்தீன் உள்ளிட்ட விவகாரங்கள் இம்மாநாட்டில் விவாதிக்கப்படும்.

சவூதி அரேபியா, யு.ஏ.இ, ஒமான், பஹ்ரைன், குவைத், கத்தர் ஆகிய நாடுகளின் கூட்டமைப்புதான் ஜி.சி.சி.

ரியாத்:லிஃப்ட் கீழே விழுந்ததில் 7 பேர் மரணம்

 ரியாத்,டிச.5:சவூதி அரேபியா தலைநகர் ரியாதில் வஸீம் சாலையில் அமைந்துள்ள அப்துல்லாஹ் ஃபினான்சியல் சிட்டியில் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்த கட்டிடம் ஒன்றில் லிஃப்ட் கீழே விழுந்ததில் இந்தியர் உட்பட 7 பேர் மரணித்துள்ளனர்.

கிங் அப்துல்லாஹ் ஃபைனான்சியல் சிட்டியில் முதலாவது வாசலில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவர்களில் நான்கு பேர் பாகிஸ்தானைச் சார்ந்தவர்களாவர். இரண்டுபேர் இந்தியாவைச் சார்ந்தவர்கள். ஒருவர் பங்களாதேஷைச் சார்ந்தவராவார்.

விக்கிலீக்ஸ்:கத்தர் ஆபத்தான நாடு - அமெரிக்காவுக்கு மொஸாத் அளித்த எச்சரிக்கை

தோஹா,டிச.5:கத்தர் ஆபத்தான நாடு என அமெரிக்காவுக்கு மொஸாத் எச்சரிக்கை அளித்ததாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஜூலை 12 ஆம் தேதி அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் உயர் அதிகாரிகளுடனான சந்திப்பின்போது மொஸாதின் முன்னாள் தலைவர் மீர் தாகன் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

சனி, 4 டிசம்பர், 2010

அண்டை நாடுகளின் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் - ஈரான்

 மனாமா,டிச.5:ஈரான் நம்மீது தாக்குதல் நடத்திவிடுமோ என்ற பயம் அரபு நாடுகளுக்கு தேவையில்லை என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் மனுஷஹர் முத்தகி அறிவித்துள்ளார்.
ஈரான் அண்டை நாடுகளை தாக்குவதற்கான வாய்ப்புள்ளதாக அண்மையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளித்துள்ளார் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்.

வெள்ளி, 3 டிசம்பர், 2010

அமெரிக்க-இஸ்ரேல் உறவை வெளிக்கொணர விக்கிலீக்ஸ் தயாராகவேண்டும் - அரபுநாட்டு மக்கள்

 தோஹா,டிச.4:இஸ்ரேலின் நிர்பந்தங்களுக்கு அமெரிக்கா அடிபணிவதைக் குறித்த விபரங்களை வெளியிட்டால் மட்டுமே விக்கிலீக்ஸின் நம்பகத் தன்மையை உறுதிச்செய்ய இயலும் என அரபு நாட்டுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அத்தகையதொரு அதிர்ச்சி தகவலுக்காக தாங்கள் காத்திருப்பதாக அரபு நாட்டு மக்கள் தெரிவிப்பதாக பெனின்சூலா செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்தால்... - அஹ்மத் நஜாத் எச்சரிக்கை

டெஹ்ரான்,டிச.4:ஈரான் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்தால் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளை சட்டத்தின் முன்னால் நிறுத்துவோம் என ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மத் நஜாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் இரண்டு ஈரான் அணுசக்தித்துறை விஞ்ஞானிகள் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இதுக்குறித்து தெரிவித்துள்ளார் நஜாத்.

அமெரிக்க சிறையில் முஸ்லிம் சிறைக்கைதியை சித்திரவதைச் செய்யும் காட்சி வெளியானது

வாஷிங்டன்,டிச.4:சிறை அதிகாரிகளின் முன்னிலையில் சக கைதியொருவர் முஸ்லிம் சிறைக் கைதியை கொடூரமாக தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அசோசியேட் ப்ரஸ்ஸிற்கு கிடைத்த வீடியோ காட்சிகள் அமெரிக்க சிறையில் உள்ளத்தை அதிர்க்குள்ளாக்கும் விதமாக நடத்தப்படும் சித்திரவதையை வெளியுலகுக்கு வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.

செவ்வாய், 30 நவம்பர், 2010

விக்கிலீக்ஸ்: குவாண்டனாமோ சிறைக் கைதிகளை ஏற்றுக்கொள்ளுங்கள் - உலக நாடுகளிடம் அமெரிக்கா கெஞ்சல்

வாஷிங்டன்,டிச.1:குவாண்டனாமோ சிறைக் கொட்டடியை இழுத்து மூடுவதாக அறிவித்த அமெரிக்கா, அதேவேளையில் அங்கு அடைக்கப்பட்டிருந்த சிறைக் கைதிகளை என்னச் செய்வது? என்று தெரியாமல் குழம்பிப் போயுள்ளதாகவும், இவர்களை ஏற்றுக்கொள்ளுமாறு உலகின் பல்வேறு நாடுகளை கெஞ்சிக் கேட்டதாகவும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ரகசிய ஆவணங்கள் கூறுகின்றன.

விக்கிலீக்ஸ்:அஜன்ஜாவுக்கு எதிராக உளவுவேலைப் பார்த்ததாக வழக்கு தொடர அமெரிக்கா முடிவு

வாஷிங்டன்,டிச.1:சட்டவிரோதமாக அரசு ரகசிய ஆவணங்களை வெளியிட்டதன் பேரில் விக்கிலீக்ஸ் இணையதள ஸ்தாபகர் ஜூலியன் அஸன்ஜாவுக்கு எதிராக உளவுவேலைப் பார்த்ததாக வழக்கு தொடர அமெரிக்கா முடிவுச் செய்துள்ளது.

திங்கள், 29 நவம்பர், 2010

ஈரான் அணுசக்தி விஞ்ஞானி குண்டுவெடிப்பில் படுகொலை

டெஹ்ரான்,நவ.30:ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்த குண்டுவெடிப்பில் ஈரான் அணுசக்தி விஞ்ஞானி கொல்லப்பட்டார்.

டெஹ்ரானில் ஷாஹித் பெஹெஸ்தி பல்கலைக்கழகத்தில் மாஜித் ஷஹரியார்தான் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட அணுசக்தி விஞ்ஞானியாவார்.

காஸ்ஸா மீது தாக்குதல் நடத்துவதை முன்னரே அப்பாஸிற்கு தெரிவித்திருந்தது இஸ்ரேல்

விக்கிலீக்ஸ்:
டெல்அவீவ்,நவ.30:இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஃபலஸ்தீன் காஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதல் குறித்து முன்னரே ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் உள்ளிட்ட ஃபத்ஹ் தலைவர்களுக்கும், எகிப்திற்கும் தகவலை இஸ்ரேல் தெரிவித்திருந்தது என விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசிய தூதரக ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் ராணுவ அமைச்சர் யஹூத் பாரக் அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிக் குழுவிடம் தெரிவித்த விபரங்கள்தான் இதில் அடங்கியுள்ளன.

ஆபரேசன் காஸ்ட் லீட் என்றழைக்கப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலைக் குறித்து எகிப்து மற்றும் ஃபத்ஹ் தலைவர்களுடன் விவாதிக்கப்பட்டதாகவும், ஹமாஸை தோற்கடித்தால் காஸ்ஸாவின் கட்டுப்பாட்டை ஏற்பதற்கு விருப்பமுண்டா? என விசாரித்ததாகவும் பாரக் கூறுகிறார். ஆனால், இருவரும் வாக்குறுதியை மீறியதாக 2009 ஜூன் மாதம் இரண்டாம் தேதி நடத்தப்பட்ட உரையாடலில் கூறப்பட்டுள்ளது. இதனைக் குறித்து இஸ்ரேல் பதிலளிக்கவில்லை

உலகத் தலைவர்களுக்கு அமெரிக்கா சூட்டிய பெயர்கள்

நவ,30:* ஐரோப்பிய தலைவர்களில் வலிமையற்றவர், முட்டாள், திறமையற்றவர் என, இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியை ரோமில் உள்ள அமெரிக்க தூதர் குறிப்பிடுகிறார்.

* லிபியா தலைநகர் டிரிபோலியில் உள்ள அமெரிக்க தூதரகம், லிபியா அதிபர் கடாபி, தனது உக்ரேனிய நாட்டு நர்ஸ் பெண் ஒருவருடன் எப்போதும் திரிவதாகவும், மிக உயரமான கட்டடங்களில் தங்குவதற்கு அவர் பயப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

* ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகம், ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினை 'ஆல்பா டாக்' என்று குறிப்பிடுகிறது. மேலும், இத்தாலி அதிபருக்கும் அவருக்கும் இடையில் உள்ள நெருக்கத்தைப் பற்றியும் விமர்சிக்கிறது.

* வடகொரிய அதிபர் கிம் ஜாங் இல், 'வயதான பேர்வழி' என்றும், ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத், 'ஹிட்லர்' என்றும் விமர்சிக்கப்படுகின்றனர்.

* தென்னாப்ரிக்காவின் வெளியுறவு அமைச்சர், ஜிம்பாப்வே அதிபருடன் ஒப்பிடப்பட்டு 'பித்துப்பிடித்த வயதானவர்' என்று கூறப்படுகிறார்.

*ஆப்கான் அதிபர் கோமாளி என்றழைக்கப்படுகிறார்.

விக்கிலீக்ஸ் வெளியிட்டது அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள்

வாஷிங்டன்/லண்டன்,நவ.29:அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள், தூதரக நடவடிக்கைகள் உள்ளிட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த ரகசிய ஆவணங்களை வெளியிட்டு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது விக்கிலீக்ஸ் இணையதளம்.

ஞாயிறு, 28 நவம்பர், 2010

ஈராக் விமானநிலையப் பணியாளரை அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது

பாக்தாத்,நவ.29:ராணுவ அணிவரிசைக்கு அருகே வாகனத்தை ஓட்டிச் சென்ற ஈராக் விமானநிலைய பணியாளரை அமெரிக்க ராணுவம் அநியாயமாக சுட்டுக் கொன்றுள்ளது.

தங்களை தாக்கவருகிறார் என தவறாக புரிந்துக் கொண்டதன் விளைவாகவே அவரை சுட்டதாக சமாதானம் கூறுகிறது அமெரிக்க ராணுவ வட்டாரம்.

பாக்தாத் சர்வதேச விமானநிலையத்தில் பணியாற்றும் கரீம் உபைத் பர்தான் என்பவர்தான் சுட்டுக் கொல்லப்பட்ட நபராவார். ராணுவ அணிவரிசைக்கு அருகே வாகனத்தை ஓட்டிவரும் பொழுது கரீம் ஹெட்லை போடுவது, வேகத்தை குறைப்பது போன்ற கட்டளைகளை கவனிக்காமலிருந்ததுதான் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தக் காரணம் என அமெரிக்க,ஈராக் ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

:ஈரானை தாக்க வேண்டுமென அரபு நாடுகள் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்ததாக தகவல்

நவ.29:ஈரான் மீது தாக்குதல் நடத்தி அந்த விஷப் பாம்பின் தலையை அறுக்கவேண்டும் எனவும் அரபு நாடுகள் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்தது, ஐ.நா தலைமையின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணிக்க அமெரிக்க அரசுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் உத்தரவிட்டது உள்ளிட்ட மிக ரகசியமான ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு அமெரிக்க தூதரகங்கள் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அனுப்பிய 251287 செய்திகளில் 200ஐ விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. இதுத்தொடர்பான மேலும் விபரங்கள் விரைவில் வெளியாகும்

விக்கிலீக்ஸ்:பிரிட்டனிலும் பீதி

 லண்டன்,நவ.28:விக்கிலீக்ஸ் இணையதளம் புதிதாக வெளியிடவிருக்கும் ரகசிய ஆவணங்களால் பிரிட்டன் அதிகாரிகள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

தங்களின் தனிப்பட்ட தொடர்புகளைக் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த சில விபரங்கள் வெளிவர வாய்ப்பிருப்பதாக பிரிட்டன் பிரதமர் டேவிட் காமரூனிடம் லண்டனில் அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார். இதற்காக அவர் டவுனிங் ஸ்ட்ரீட்டிற்கு வருகைத் தந்தார்.

லண்டனில் அமெரிக்க தூதரகம் வாஷிங்டனிற்கு அனுப்பிய சில விபரங்களையும் விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்டன் ப்ரவுனின் தனிப்பட்டத் தன்மை, பொதுத் தேர்தலில் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக் குறித்து அமெரிக்காவின் மதிப்பீடு, லோக்கர்பி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் லிபியாவுக்கு சென்றதுத் தொடர்பாக நடந்த ரகசிய பேச்சுவார்த்தைகள் ஆகியன வெளியாகும் என பீதியில் ஆழ்ந்துள்ளது பிரிட்டன்.

அமெரிக்காவும், பிரிட்டனும் இணைந்து பிரான்சுக்கு எதிராக நடத்திய முயற்சிகள் இதில் வெளியாகும் எனத் தெரிகிறது.

துருக்கியில் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள குர்து இனத்தவருக்கு அமெரிக்கா அளித்த உதவியும் விக்கிலீக்ஸ் வெளியிடும் ஆவணங்களில் அடங்கும் என வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆவணங்கள் வெளியானால் பல நாடுகளும் அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் சூழல் ஏற்படும் என அஞ்சி அமெரிக்கா பல நாடுகளுடன் அவசரமாக தொடர்புக்கொண்டு வருகிறது

அல்காயிதாவுடன் தொடர்பு:சவூதியில் 149 பேர் கைது

ரியாத்,நவ.28:கடந்த எட்டு மாதங்களுக்கிடையே அல்காயிதா இயக்கத்துடன் தொடர்புடைய 149 பேரை கைதுச் செய்துள்ளதாக சவூதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோர்களுக்கெதிரான தாக்குதல் திட்டங்களை முறியடித்து விட்டதாகவும் சவூதி உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் மன்சூர் இப்னு துர்க்கி தெரிவித்துள்ளார்.

சனி, 27 நவம்பர், 2010

சோமாலியா:ஒருவருடத்தில் கொல்லப்பட்ட சிவிலியன்கள்

மொகாதிஷு,நவ.27:போராளிகளுக்கும் அரசுப் படையினருக்கும் இடையே மோதல் நிகழ்ந்து வரும் சோமாலியா தலைநகரான மொகாதிஷுவில் இந்த ஆண்டு கொல்லப்பட்ட சாதாரண மக்களின் எண்ணிக்கை 2100 ஆகும்.

தலைநகரின் பக்கார சந்தையை நோக்கி ஆப்பிரிக்கா யூனியன் ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில்தான் 80 சதவீத சிவிலியன்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதனை லைஃப் லைன் ஆப்ரிக்கா ஆம்புலன்ஸ் சர்வீஸ் இயக்குநர் அலி மூஸ் தெரிவிக்கிறார்.

155 சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியாருக்கு ஏழு ஆண்டு சிறை

பெர்லின்,நவ.27:பாலகர்களை பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் கத்தோலிக்க பாதிரியாருக்கு ஜெர்மன் நீதிமன்றம் ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

155 சிறுவர்களை இவர் பாலியல் கொடுமைச் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. 50 வயது பாதிரியாரான இவர் காஸ்ஸல் நகரத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் பணியாற்றி வந்தார்.

புகைபிடிப்பவர்கள் வெளியிடும் புகையினால் மரணிப்பவர்கள் ஆறு லட்சம் பேர்

வாஷிங்டன்,நவ.27:புகைப்பிடிப்பவர்கள் வெளிவிடும் புகையினால் உலகில் ஆண்டிற்கு ஆறு லட்சம்பேர் மரணிக்கின்றார்கள் என உலக சுகாதாரமையம் புள்ளிவிபரம் வெளியிட்டுள்ளது.

இவ்வாய்வு 192 நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவோர் குழந்தைகளாவர். குழந்தைகளுக்கு நிமோனியா, ஆஸ்துமா போன்ற நோய்கள் உருவாக இது காரணமாகிறது.

ஃபலஸ்தீன்:யெர்ஸா கிராமத்தில் மஸ்ஜிதை இடித்துத் தள்ளிய இஸ்ரேல்

ஃபலஸ்தீன் மேற்குகரையில் யெர்ஸா கிராமத்தில் அமைந்திருந்த மஸ்ஜித் ஒன்றை இஸ்ரேலிய ராணுவம் இடித்து தள்ளியது.

ராணுவ புல்டோஸரை பயன்படுத்தி மஸ்ஜிதையும் இதர 10 கட்டிடங்களையும் ராணுவம் இடித்துத் தள்ளியது. இக்கட்டிடங்களும், மஸ்ஜிதும் ராணுவ பிராந்தியத்தில் கட்டப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.

மிகவும் பழமையான மஸ்ஜிதையும், அதனுடன் இணைந்து கட்டப்பட்டிருந்த கட்டிடத்தையும் இடித்து தள்ளிய இஸ்ரேலிய ராணுவம் அத்துடன் ஆடுகளை வளர்ப்பதற்காக பயன்படுத்திய 10 இதர கட்டிடங்களையும் இடித்துத் தள்ளியுள்ளது.

ராணுவ பிராந்தியத்தில் அனுமதியில்லாமல் கட்டப்பட்ட 10 கட்டிடங்களை இடித்துள்ளதாக இஸ்ரேலிய உள்துறை அமைச்சகம் கூறுகிறது.

இஸ்ரேலின் பூரண கட்டுப்பாட்டிலிலுள்ள மேற்குகரையின் சி பிராந்தியத்தில் அமைந்துள்ளது யெர்ஸா கிராமம். இங்கு எதனை கட்டவேண்டுமானாலும் இஸ்ரேலின் அனுமதியை பெறவேண்டும். கட்டிட நிர்மாணத்திற்கான 95 சதவீத மனுக்களையும் நிராகரிப்பதுதான் இஸ்ரேலின் வழக்கம்.

இதற்கிடையே மேற்குகரையில் யத்தா கிராமத்தில் 18 பேர் வசிக்கும் வீடு ஒன்றை இஸ்ரேல் ராணுவம் இடித்துத் தள்ளியுள்ளது. இதற்கான காரணம் கூறப்படவில்லை.

போலி தாலிபான் கமாண்டரை பேச்சுவார்த்தை நடத்த அனுப்பியது

ஆப்கானிஸ்தான் அரசுடன் முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தாலிபான் கமாண்டர் எனக்கூறி போலியான நபரை அனுப்பியவர்கள் பிரிட்டீஷ் அதிகாரிகள் என ஆப்கன் அதிபர் ஹமீத் கர்ஸாயியின் பணிப் பிரிவுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

தாலிபானின் மூத்த தலைவரான முல்லா முஹம்மத் மன்சூர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட இந்நபர் ஆப்கான் அதிகாரிகளுடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியதோடு ஆயிரக்கணக்கான டாலர் பணத்தை சுருட்டிச் சென்றுவிட்டார்.

இவர் பாகிஸ்தானின் குவாட்டா பகுதியில் கடை நடத்தும் நபராவார் என பின்னர் தெரியவந்தது.

பிரிட்டன் தூதரக அதிகாரிகள்தான் இவரை தாலிபான் கமாண்டர் எனக்கூறி கர்ஸாயிடம் அனுப்பியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆனால், இதனைக் குறித்து பதில் கூற பிரிட்டன் தூதரகம் மறுத்துவிட்டது.

அதேவேளையில் பிரிட்டன் உளவு நிறுவனமான எம்.ஐ6 தான் போலி தாலிபான் கமாண்டரை அனுப்பியதாக டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானைச் சார்ந்த அந்த நபரின் வாய்ஜாலத்தில் உளவுத்துறை அதிகாரிகள் வீழ்ந்துவிட்டார்கள் என கருதப்படுகிறது. தாலிபானுடன் சமரசம் சாத்தியமாக்கலாம் என வாக்குறுதி அளித்த இந்நபர் பணத்தை கைப்பற்றியுள்ளார். இவரைப் பற்றி விபரங்களை பரிசோதிப்பதில் அமெரிக்காவும் உதவியதாக கருதப்படுகிறது.

இச்சம்பவத்தில் ஏற்பட்ட அபத்தத்திற்கு பிரிட்டன் மட்டும் காரணமல்ல எனவும் மற்றவர்களுக்கும் இதில் பங்குண்டு என காந்தஹாரில் அமெரிக்க பிரதிநிதி பில் ஹாரிஸ் கூறுகிறார்.

வெள்ளி, 26 நவம்பர், 2010

தொன்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி:

 அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து நடத்த திட்டமிட்டிருக்கும் கூட்டு கடற்படை ராணுவ பயிற்சி இப்பிராந்தியத்தை போரின் விளிம்பிற்கு கொண்டு செல்லும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை துவங்கவிருக்கும் கூட்டு ராணுவ பயிற்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்க விமானந்தாங்கி கப்பலான யு.எஸ்.எஸ் வாஷிங்டன் உள்ளிட்ட கப்பல்கள் கொரிய கடற்பகுதியை நோக்கி விரைந்துக் கொண்டிருக்கின்றன.
வடகொரியா மற்றும் தென்கொரியாவுக்கிடையே நேற்று முன்தினம் நடந்த பீரங்கித் தாக்குதல் இப்பிராந்தியத்தில் போர்சூழலை உருவாக்கியது. இத்தாக்குதலில் இரண்டு ராணுவத்தினரும், இரண்டு சிவிலியன்களும் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே ராஜினாமாச் செய்த தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் கிம்ரேயங்குக்கு பதிலாக முன்னாள் கூட்டுப்படை கட்டளைப் பிரிவு பிரதிநிதி தலைமை அதிகாரியாக பணியாற்றிய லீஹீவோன் புதிய பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

யோன்பியோங் தீவில் வடகொரியா நடத்திய தாக்குதலுக்கு உடனடியாக பதிலடிக் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சர் கிம்ரேயங் ராஜினாமாச் செய்திருந்தார்.

வடகொரியாவுக்கெதிரான போர் பயிற்சி நடத்த திட்டமிட்டுள்ள முட்டாள்தனமான முடிவு பிராந்தியத்தை போரின் விளிம்பிற்கு கொண்டு செல்வதாக வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கெ.சி.என்.எ செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளையில் யோன்பியோங் தீவில் நேற்றும் பீரங்கி சப்தம் கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனைக் குறித்து விசாரித்து வருவதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வடகொரியாவின் எல்லைக்கு அருகில் நடந்த குண்டுவெடிப்பின் சப்தமாக இது இருக்கலாம் என பி.பி.சி கூறுகிறது. தென்கொரியாவின் போர் பிரியர்கள் கோபத்தை தூண்டினால் இனிமேலும் தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

குவைத்-ஈராக் எல்லை முடிவுக்கு வந்தது

ஈராக் மற்றும் குவைத் நாடுகளுக்கிடையே பல ஆண்டுகளாக நிலவி வந்த எல்லைத் தகராறுக்கு பரிகாரம் ஏற்பட்டுள்ளது.தகராறு தொடர்பாக இருநாடுகளும் ஒப்பந்தம் செய்துள்ளதாக குவைத் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அரப் வேர்ல்ட் துறை தலைவர் ஜாஸிம் அல் முபாரக்கி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின்படி இருநாடுகளும் எல்லையில் 500 மீட்டர் இடத்தை ஆளில்லா நிலமாக ஒதுக்கும். ஈராக்கி விவசாயிகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என அல்ஸெயாஸாஹ் தின இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

எல்லையில் வசிக்கும் விவசாயிகளுக்காக ஈராக்கின் உள்புறம் குவைத் 50 வீடுகளை நிர்மாணித்து வழங்கும். இரு நாடுகளும் ஒதுக்கும் 500 மீட்டர் இடத்தில் எல்லை போலீசாரின் செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

இருநாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகங்களின் கமிஷனுகளுக்கிடையே சமீபத்தில் நடந்த சந்திப்பின்போது இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஈராக்கின் குவைத் ஆக்கிரமிப்பிற்கு பிறகு 1993 ஆம் ஆண்டு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானத்தில் இரு நாடுகளின் எல்லையை நிர்ணயித்திருந்தது.

ஈராக் கைப்பற்றிய சில பிரதேசங்கள் குவைத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. இருநாடுகளும் நிபந்தனைகளை கடைப்பிடிக்காததால் பிரச்சனைகள் நிலவி வந்தன.

விக்கிலீக்ஸ் வெளியிடப்போகும் ரகசிய ஆவணங்கள்: பீதியில் அமெரிக்கா



வாஷிங்டன்,நவ.27:விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிடவிருக்கும் ரகசிய ஆவணங்கள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதன், 24 நவம்பர், 2010

ஆப்கன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலி தாலிபான் கமாண்டர்

வாஷிங்டன்,நவ.24:மூத்த தாலிபான் கமாண்டர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ஆப்கான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர் போலி என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சனி, 20 நவம்பர், 2010

39 சதவீத அமெரிக்கர்களுக்கு திருமணம் புளித்துப் போய்விட்டது

வாஷிங்டன்,நவ.20:அமெரிக்கா திருமணத்தை மறந்துவிடுமா? என்றதொரு கேள்வி எழுந்துள்ளது.

இந்த சந்தேகத்திற்கு காரணம், சமீபத்தில் டைம் இதழுடன் இணைந்து அமெரிக்காவில் வியூ ரிசர்ச் செண்டர் நடத்திய ஆய்வில் 39 சதவீத அமெரிக்கர்களுக்கும் திருமணம் புளித்துப்போன பழங்கஞ்சியாக மாறிவிட்டது தெரியவந்துள்ளது.

தாரிக் அஸீஸை தூக்கிலிடக் கோரும் உத்தரவில் கையெழுத்திடமாட்டேன் -

பாக்தாத்,நவ.20:முன்னாள் ஈராக் அதிபர் சதாம் ஹுசைனின் வலங்கரமாக செயல்பட்ட கிறிஸ்தவ சமூகத்தைச் சார்ந்த தாரிக் அஸீஸை தூக்கிலிடக் கோரும் ஈராக் அரசின் உத்தரவில் கையெழுத்திட மாட்டேன் என அந்நாட்டு அதிபர் ஜலால் தலபானி அறிவித்துள்ளார்.

ஈரானுக்கெதிரான ஐ.நா தீர்மானம் - வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளாத இந்தியா

ஐ.நா,நவ.20:ஈரான், மியான்மர் மற்றும் வடகொரியாவில் நடைபெறுவதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களை கண்டிப்பதற்காக ஐ.நா வின் மனித உரிமை அமைப்பு தயாராக்கிய தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்கவில்லை.

சனி, 13 நவம்பர், 2010

ஈராக்கின் புதிய அரசு உருவாக்கம்: கட்சிகள் சம்மதம்

 பாக்தாத்,நவ.12:தேர்தல் முடிவடைந்து 8 மாதங்கள் கழித்து புதிய அரசை உருவாக்க ஈராக் அரசியல் கட்சிகள் ஒப்பந்தம் மேற்கொண்டன.

ஷியா பிரிவு தலைவரான நூரி அல் மாலிகி பிரதமராக தொடர்வார். சுன்னி பிரிவினருக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படும். சுன்னி தலைவர் இயாத் அல்லாவி தேசிய கொள்கை வகுக்கும் கமிட்டியின் தலைவராக பதவி வகிப்பார். அதிபராக குர்து இனத்தைச் சார்ந்தவர் பதவி ஏற்பார். இந்த ஒப்பந்தம் ஈராக் மக்களின் வெற்றி எனக்கூறிய பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தராக பணியாற்றிய குர்துகளின் உள்ளூர் தலைவரான மஸ்ஊத் பர்ஸானி இறைவனுக்கு நன்றி தெரிவித்தார்.

முன்னாள் பிரதமரும் சுன்னி பிரிவு தலைவருமான அல்லாவியின் ஆதரவு கிடைத்தது மூலம் நூரி அல் மாலிக்கிக்கு பிரதமராக தொடரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏதேனும் பிரிவு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றதா? திருப்தியாக உள்ளதா? என்பதை பரிசோதிக்கவும் தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒப்பந்தம் அனுமதியளித்துள்ளது.

குர்து தலைவரும் தற்போதைய அதிபரான ஜலால் தலபானி அதே பதவியில் தொடர்வார் எனத் தெரிகிறது. சபாநாயகரையும், துணை சபாநாயகரையும் பாராளுமன்றம் கூடி தேர்ந்தெடுக்கும். அமைச்சரவை உறுப்பினர்களை தீர்மானிக்க ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அரசு உருவாக்கத்தில் ஈரான் முக்கிய பங்கு வகித்ததாக மாலிக்கியின் எதிராளிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். பாராளுமன்றத்தில் 40 இடங்களைக் கொண்ட ஷியா போராளி பிரிவு தலைவர் முக்ததா அல்ஸத்ர் அரசு உருவாக மாலிக்கியை ஆதரிப்பதாக கடந்த மாதம் இறுதியில் அறிவித்ததைத் தொடர்ந்து அரசு உருவாக்கம் எளிதானது

புஷ்ஷை விசாரணைச் செய்யவேண்டும்: ஆம்னஸ்டி இண்டர்நேஷனல்

லண்டன்,நவ.12:சிறைக்கைதிகளை சித்திரவதைச் செய்ய அனுமதி வழங்கிய அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் w புஷ்ஷை விசாரணை செய்யவேண்டும் என சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் ரகசிய சிறைகளில் அடைக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தும் வேளையில் வாட்டர் போர்டிங் என்றழைக்கப்படும் தண்ணீரில் முகத்தை கட்டி ஆழ்த்தி மூச்சுமுட்டச் செய்யும் சித்திரவதைச் செய்தலுக்கு அனுமதியளித்ததாக ஜார்ஜ் w புஷ் சமீபத்தில் வெளியிட்ட டிவிசன் பாயிண்ட் என்ற நினைவுக் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 11 ஆம் தேதிக்கு பிறகு ஆறு தினங்கள் கழித்து அமெரிக்காவிற்கு வெளியே சி.ஐ.ஏ ரகசிய சிறைக் கொட்டடிகளை நிர்மாணித்தது.

பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற பெயரில் சி.ஐ.ஏ சிறைக் கைதிகளுக்கெதிராக மனித உரிமை மீறல்களை கட்டவிழ்த்துவிட்டதாக ஆம்னஸ்டி குற்றஞ்சாட்டுகிறது. கடந்த மாதம் எட்டாம் தேதி ஒரு நேர்முகத்தில் ஜார்ஜ் w புஷ் இதனை ஒப்புக்கொண்டிருந்தார்.

சித்திரவதைக்கெதிரான ஐ.நா கன்வென்சனின் தீர்மானத்தின் படி புஷ்ஷையும், அவரது கூட்டாளிகளையும் விசாரணைச்செய்ய வேண்டுமென ஆம்னஸ்டி கோரியுள்ளது. புஷ்ஷே இதனை ஒப்புக்கொண்டதால் சர்வதேசச் சட்டத்தின்படி விசாரணை மேற்கொள்ள இயலும் என ஆம்னஸ்டி விளக்கமளித்துள்ளது

ஜி-20 உச்சிமாநாடு:சியோலில் ஆயிரக்கணக்கானோர் கண்டனப் போராட்டம்

சியோல்,நவ.12: ஜி-20 உச்சிமாநாட்டிற்கு வருகைத் தந்த உலகத் தலைவர்களுக்கெதிராக ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. தங்களின் நீண்டகால கோரிக்கைகளைக் குறித்து அரசு பாராமுகமாக உள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர். வளர்ச்சி தொடர்பான சச்சரவுகளையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

ஃபிடல் காஸ்ட்ரோவைக் கொலைச் செய்யும் வீடியோ கேமிற்கெதிராக கியூபா

ஹவானா,நவ.12:ஃபிடல் காஸ்ட்ரோ அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கியூபாவின் 84 வயது கம்யூனிச தலைவர்.

வியாழன், 11 நவம்பர், 2010

இஸ்ரேலின் அடாவடி:ஹமாஸ் எம்.பி கைது

ரமல்லா,நவ.11:ஃபலஸ்தீனின் மேற்குகரையில் ஹமாஸ் இயக்கத்தைச் சார்ந்த எம்.பி ஒருவரை இஸ்ரேல் ராணுவம் கைதுச் செய்துள்ளது.

ஃபலஸ்தீன் சட்டமியற்றும் கமிட்டியின் பொதுச் செயலாளர் மஹ்மூத் ரமாஹினை அவருடைய வீட்டிலிருந்து பிடித்துச் சென்றனர் இஸ்ரேலிய ராணுவத்தினர்.

ஈரானையும், சிரியாவையும் தாக்குவதற்கு திட்டமிட்டோம்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் w புஷ்

வாஷிங்டன்,நவ.11:அமெரிக்க வரலாற்றில் போர்வெறியர் என புகழாரம் சூட்டப்பட்ட அந்நாட்டு முன்னாள் அதிபரான ஜார்ஜ் w புஷ், தன்னால் சாதிக்க முடியாதுபோன தாக்குதல்கள் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.

புதன், 13 அக்டோபர், 2010

ஈரான் அதிபர் நஜாதிற்கு லெபனானில் வரவேற்பு

பெய்ரூத்,அக்.14:ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நஜாத் லெபனானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டில் நஜாதிற்கு உற்சாக வரவேற்பை அளித்தனர் லெபனான் மக்கள்.

ஞாயிறு, 9 மே, 2010

ஈரான் ஏற்பாடு செய்த விருந்தில் அமெரிக்கா பங்கெடுத்தது


ஐ.நா:ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினர்களாகயிருக்கும் 15 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முன்ஷஹர் முத்தகி அளித்த விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்காவின் பிரதிநிதியும் பங்கேற்றார்.

சர்ச்சைக்குரிய அணுசக்தித் திட்டத்தை காரணம் கூறி அதிக தடையை ஈரானின் மீது விதிக்க முயற்சி எடுத்துவரும் எதிரி நாடான அமெரிக்கா இவ்விருந்தில் பங்கேற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இரண்டு மணிநேரம் நீண்ட இவ்விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்கா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுடன் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினரல்லாத நாடுகளான போஸ்னியா, ஆஸ்திரியா, பிரேசில், லெபனான், மெக்ஸிகோ, துருக்கி, உகாண்டா, ஹெர்சகோவினா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

ஐ.நாவின் சீன தூதர் லீ பாஇடோங், ஜப்பான் தூதர் யூகியோ தகாஷு, அமெரிக்க துணை தூதர் அலீஜ் ஆண்ட்ரோ வோல்ஃப் ஆகிய நிரந்தர பாதுகாவுன்சில் நாடுகளின் பிரதிநிதிகள் இவ்விருந்தில் பங்கேற்றனர்.

விருந்தில் பரிமாறப்பட்ட உணவு மிக நன்றாக இருந்ததாக அமெரிக்க பிரதிநிதி விருந்து நிகழ்ச்சிக்கு பிறகு தெரிவித்தார். பேச்சுவார்த்தை ஒன்றும் நடத்தவில்லை என்றும், பொதுவான விஷயங்களைக் குறித்து பேசியதாகவும் ஜப்பான் பிரதிநிதி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

அணு ஆயுதத்தை கைவசம் வைத்துள்ள இஸ்ரேலுக்கு எதிராக ஒரு வார்த்தை பேசாத அமெரிக்காவின் நடவடிக்கையை ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத் நேற்று முன்தினம் கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வெள்ளி, 7 மே, 2010

மேற்குலக நாடுகளின் அழுத்தங்களை எதிர்கொள்ளும் ஆற்றல் ஈரானுக்கு உண்டு

நியூயார்க்கில் அஹமதி நிஜாத்
நியூயார்க்:ஐ.நா.வின் மேலதிக தடைகள் ஈரானைத் தடுத்து நிறுத்தாதென அந்நாட்டு ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நிஜாத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நியூயார்க்கில் 90 நிமிட செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்திய அஹமதி நிஜாத் 'புதிய தடைகள் விதிக்கப்படுமானால் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு மீண்டும் ஒருபோதும் சீர்செய்ய முடியாத அளவுக்குப் பாதிக்கப்படுமென எச்சரித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி ஒபாமாவின் உறுதிமொழிகள் தொடர்பில் ஏமாற்றம் வெளியிட்ட அஹமதி நிஜாத் முந்தைய அமெரிக்க நிர்வாகத்தின் கொள்கையை கைவிடப் போவதாக ஒபாமா வழங்கிய உறுதிமொழிகளை நாம் வரவேற்றிருந்தோம்.

ஆனால், ஒன்றுமே நடக்கவில்லை. இதுவரையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லையென தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்; 'தடைகளால் ஈரானை நிறுத்த முடியாது. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் அழுத்தங்களை எதிர்கொள்ளும் ஆற்றலை ஈரான் பெற்றிருக்கிறது.

நான் தடைகளை வரவேற்காத அதேவேளை அதற்குப் பயப்படவும் இல்லை' எனத் தெரிவித்துள்ளார்.

ஈரானில் அணு நிகழ்ச்சித் திட்டத்திற்கெதிராக நான்காவது சுற்றுத் தடைகளை விதிப்பது குறித்து அமெரிக்காவும் ஏனைய ஐந்து வல்லரசு நாடுகளும் ஆராய்ந்து வருகின்றன. அடுத்த சில வாரங்களுக்குள் இது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு முயற்சிப்பதாக கூறப்படும் மேற்குலக நாடுகளின் குற்றச்சாட்டுகளை நிராகரித்து வரும் ஈரான் தனது அணு நிகழ்ச்சித் திட்டம் முற்றிலும் சக்தி தேவைக்கானது கூறி வருகிறது.

புதன், 5 மே, 2010

நியூயார்க் பாலத்தில் நின்ற மர்ம லாரியில் வெடிகுண்டு பீதி.


நியூயார்க்: நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ராபர்ட் கென்னடி பாலத்தில் மர்ம லாரி ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றதால் அந்தப் பாலம் மூடப்பட்டது. தற்போது அந்த லாரியில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை இரவு அந்த லாரியை பாலத்தில் நிறுத்தி விட்டு ஒரு நபர் இறங்கி ஓடியதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர். இதனால் பீதி ஏற்பட்டது. லாரியிலிருந்து காஸ் வாசனையும் வந்து கொண்டுள்ளது.

மர்ம லாரியைத் தொடர்ந்து பாலம் மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தீயணைப்புப் படையினரும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்துள்ளனர்.முதல் கட்ட விசாரணையில், லாரியில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனால் பீதி சற்று அகன்றுள்ளது. இந்த பாலம் முன்பு திர்பாரோ பாலம் என்று பெயர் அழைக்கப்பட்டது. மன்ஹாட்டன், பிரான்க்ஸ், க்வீன்ஸ் ஆகிய பகுதிகளை இது இணைக்கிறது. சமீபத்தில், டைம்ஸ் சதுக்கப் பகுதியில் கார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மர்ம லாரியால் நியூயார்க் நகரில் மீண்டும் பீதி ஏற்பட்டுள்ளது.

ஹிஜாப்:முஸ்லிம் மாணவியை உடனடியாக பள்ளிக்கூடத்தில் சேர்க்க கேரள அரசு உத்தரவு



.
திருவனந்தபுரம்:ஹிஜாப் அணிந்த காரணத்தினால் பள்ளிக்கூடத்தை விட்டு நீக்கிய 9-ஆம் வகுப்பு பயிலும் நபாலா என்ற முஸ்லிம் மாணவியை உடனடியாக பள்ளிக்கூடத்தில் சேர்த்து படிக்க அனுமதிக்க வேண்டும் என்று கேரள மாநில அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.
இச்சம்பவத்தைக் குறித்து விசாரணை நடத்திய கல்வித்துறை துணை இயக்குநர் ஆரம்ப விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ததாக பொது கல்வி இயக்குநர் எ.பி.எம்.முஹம்மது ஹனீஷ் தேஜஸிடம் தெரிவித்தார்.

இச்சம்பவத்தைக் குறித்து சரியான விளக்கத்தைப் பெற பள்ளிக்கூட நிர்வாகத்துடன் தொடர்புடைய முக்கிய நபர்களை காண முடியவில்லை என்றும், அவர்களிடமிருந்து கிடைத்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என்றும் துணை இயக்குநரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இச்சம்பவத்தைக் குறித்த விரிவான விசாரணை தொடரும்.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்
Read more... Posted by புதிய தென்றல் at 9:50 PM , Links to this post , 0 comments
Labels: ஹிஜாப்
ஹிஜாப் அணிந்ததை அடுத்து மேலும் ஒரு மாணவி நீக்கம்: தொடரும் கிறிஸ்தவ மிஷனரி பள்ளிக்கூடங்களின் மதத்துவேஷம்.
கொல்லம்:ஹிஜாப் அணிந்ததால் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேற்றப்பட்ட நபாலா என்ற 9-ஆம் வகுப்பு முஸ்லிம் மாணவியைத் தொடர்ந்து ஆலப்புழா கிறிஸ்தவ மிஷனரி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பள்ளிக்கூடத்தின் நிர்வாகிகள் மீண்டும் ஒரு முஸ்லிம் மாணவிக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கி பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர்.

பூணப்புரா செண்ட் அலோசியஸ் பள்ளிக்கூடத்தில் பயின்ற மாணவி ஹாஜிராவை பள்ளிக்கூட நிர்வாகிகள் ஹிஜாப் அணிந்த காரணத்திற்காக பள்ளிக்கூடத்தை விட்டு நீக்கியுள்ளனர்.
ஒன்றாம் வகுப்பு முதல் செண்ட் அலோசியஸ் பள்ளிக்கூடத்தில் படித்து வந்த ஆஸியாவும் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது பள்ளிக்கூடத்தை விட்டு நீக்கப்பட்டுள்ளார். இவருடைய தந்தை தனது மகளின் படிப்பு நின்றுவிடக் கூடாது என்பதற்காக பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் சிஸ்டர் மேரி மாத்யூவை அணுகிய பொழுது மதத்துவேசமான முறையில் பேசியுள்ளார்.

மேலும் பள்ளிக்கூடத்தில் ஹிஜாப் அணிந்ததற்காக அனைத்து முஸ்லிம் மாணவிகளையும் வெளியேற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும் அது எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என அவர்கள் கூறியுள்ளனர். அதேவேளையில் கிறிஸ்தவ கன்னியாஸ்திரியான அந்த பள்ளிக்கூட தலைமயாசிரியை தலையில் அணிந்திருக்கும் கிறிஸ்தவ முறையிலான ஆடையைக் குறித்து கேட்டபொழுது இது எங்களுடைய பள்ளிக்கூடம் எங்கள் விருப்பப்படி ஆடை அணிவோம் என பதிலளித்துள்ளார்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்
Read more... Posted by புதிய தென்றல் at 9:42 PM , Links to this post , 0 comments
Labels: ஹிஜாப்
கேரளா:பள்ளிக்கூடத்தில் ஹிஜாப் அணிந்ததற்காக முஸ்லிம் மாணவியை வெளியேற்றிய பள்ளிக்கூட நிர்வாகம்.

ஆலப்புழா:ஹிஜாப் அணிந்த காரணத்தினால் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேற்றியுள்ளது கிறிஸ்தவ பள்ளிக்கூடம். இதற்கெதிராக எதிர்ப்பு வலுத்து வருகிறது. ஆலப்புழையில் குருபுரம் என்ற இடத்தில் செயல்படும் பிலீவேர்ஸ்(believers) சர்ச் சி.பி.எஸ்.இ பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் முஸ்லிம் மாணவி டி.என்.நபாலா. இவர் பள்ளிக்கூடத்திற்கு தலையை மறைக்கும் ஹிஜாப் அணிந்து வந்துள்ளார். இதனால் இவரை பள்ளிக்கூட நிர்வாகம் பள்ளிக்கூடத்தை விட்டு நீக்கியுள்ளது.

கெ.பி.யோகன்னான் என்பவர் தலைமையில் செயல்படும் இப்பள்ளிக்கூடத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி நபாலாவுக்கு ஹிஜாப் அணிந்ததற்காக மாற்று சான்றிதழ்(T.C) கொடுக்கப்பட்டுள்ளது. மாற்றுச் சான்றிதழில் கூறப்பட்டுள்ள காரணம் இதுவாகும்: 'maftha is not allowed in this school' என்பதாகும். ஒன்பதாம் வகுப்பிலிருந்து வெற்றி பெற்று பத்தாம் வகுப்பிற்கு சென்றுள்ள நபாலாவை தற்பொழுது பள்ளிக்கூடத்தை விட்டு நீக்கினால் அது அவருடைய தொடர் படிப்பை பாதிக்கும் என்றும் இவ்வருடம் மட்டும் படிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கோரியபொழுதும் பள்ளிக்கூட நிர்வாகம் செவிக் கொடுக்கவில்லை. இதனை நபாலாவின் தந்தை நாஸிர் முஸ்லியார் பத்திரிகையாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

ஹிஜாப் அணிவது மதக்கடமையானதால் அனுமதிக்க வேண்டும் என்று கோரியபொழுது பள்ளிக்கூட நிர்வாகம் மோசமாக நடந்துக்கொண்டது. எல்.கே.ஜி முதல் நபாலா இப்பள்ளிக் கூடத்தில்தான் பயின்று வருகிறார். முதலில் எஸ்.என்.டி.பி என்ற அமைப்பின் கீழ் இப்பள்ளிக்கூடம் செயல்பட்டிருந்தது. அப்பொழுதெல்லாம் பிரச்சனைகளொன்றும் இல்லை. பிலீவர்ஸ் சர்ச் இப்பள்ளிக்கூட நிர்வாகத்தை ஏற்ற பொழுதுதான் பிரச்சனை உருவானது. நபாலாவை தொடர்ந்து படிக்க அனுமதிக்கவேண்டும் என்று கோரி அவருடைய தாயார் பள்ளிக்கூடம் சென்றபொழுது ஆசிரியையோ தலைமை ஆசிரியரோ சந்திக்க விருப்பமில்லை எனக் கூறிவிட்டனர்.

தலைமை ஆசிரியரின் மொபைலில் தொடர்புக் கொண்டபொழுது ஹிஜாபை அனுமதிக்க முடியாது டி.சி யை வாங்கிச் செல்லுங்கள் என்று கூறிவிட்டார். அப்படியானால் ஹிஜாப் அணிந்ததால்தான் டி.சி வழங்குகிறோம் என்று எழுதித் தாருங்கள் என்ற பொழுது இவ்வாறு கேட்டால் மாணவியின் மோசமான நடவடிக்கை என்று எழுதித்தருவோம் என மிரட்டினார்.பின்னர் கெஞ்சிய பின்னரே இவ்வாறு எழுதித் தந்துள்ளார்கள்.

நபாலா சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படித்துள்ளதால் வேறு பள்ளிக்கூடங்களில் சேர்ப்பது தொடர் படிப்பிற்கு கடினமாக இருக்கும் ஆதலால் கிரஸண்ட் சி.பி.எஸ்.இ பள்ளிக்கூடத்தில் அனுமதிக் கேட்ட பொழுதும் அவர்களும் இத்தகைய பிரச்சனையை காரணம் காட்டி அவர்களும் சேர்க்க முடியாது எனக் கூறிவிட்டனர்.இதனால் எனது மகளின் தொடர் படிப்பை இழக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகள் இதில் தலையிட வேண்டும் எனவும் நபாலாவின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.மாணவியை ஹிஜாப் அணிந்ததற்காக வெளியேற்றிய பள்ளிக்கூட நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டுமென அரசுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

அணு ஆயுத அச்சுறுத்தல் விடுக்கும்’ நாடுகளை ஐ.நா தண்டிக்க வேண்டும்


அணு பரவலாக்காமை ஒப்பந்த மீளாய்வு கூட்டத்தில் ஈரானிய ஜனாதிபதி
அணு ஆயுத பாவனை வெறுப்புக்கும் வெட்கத்துக்கும் உரியது. அவ்வாறான பாவனையை மேற்கொள்ளப்போவதாக அச்சுறுத்தி வரும் அமெரிக்கா போன்ற நாடுகளை ஐக்கிய நாடுகள் அமைப்பு தண்டிக்க வேண்டும் என்று ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நஜாத் வலியுறுத்தினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் சம்மேளனக் கூட்டத்தில் உரையாற்றியபோதே ஈரானிய ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
1970 ஆம் ஆண்டின் அணு ஆயுத பரவலாக்காமை ஒப்பந்தத்தில் கைச்சாத் திட்டுள்ள 189 நாடுகளின் ஒப்பந்த மீளாய்வு சம்மேளன கூட்டம் ஒரு மாத காலத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறுகிறது.

அணு ஆயுத தடை ஒப்பந்தம் மீதான மாநாடு ஐ.நா.வில் நடைபெற்றபோது ஈரான் ஜனாதிபதி அஹமதி ரஜாத் உரையாற்றுகின்றார்.
இந்த கூட்டத் தொடரின் ஆரம்ப கட்டத்தில் உரையாற்றிய போதே ஈரானிய ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். அணு ஆயுதங்களை வைத்திருப்பது என்பது ஒன்றும் பெருமைக்குரிய விடய மல்ல. அவ்வாறான ஆயுதங்கள் சமாதான முறையிலான அணு வசதிகளுக்கு எதிராக பாவிக்கப்படும் என்ற அச்சுறுத்தலோ அல்லது அவ்வாறான தாக்குதலோ சர்வதேச சமாதானம் அல்லது பாதுகாப்பை மீறும் செயல் என கருதப்பட வேண்டும்.
அவ் வாறான தாக்குதலை மேற்கொள்ளும் நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் துரித செயற்பாட்டின் விளைவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டும். அத்துடன் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள இதர நாடுகளினால் பகிஷ்கரிக்கப்பட வேண்டும் என்று ஈரானிய ஜனாதிபதி சாடினார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்த கூட்டங்களின் போது மேற்குலக நாடுகள் அடிக்கடி வெளிநடப்பு செல்வது ண்டு. ஈரானிய ஜனாதிபதியின் காரசாரமான உரையின் போதும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பல மேற்கு நாடுகள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்திருந்தன.
இஸ்ரேல் அதன் அண்டைய நாடுகளை தாக்குவதாகவும் கைப்பற்றப் போவதாகவும் அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா மற்றும் அதன் தோழமை நாடு களின் நிபந்தனையற்ற ஆதரவு இஸ்ரேலுக்கு தொடர்ந்து கிடைத்து வருகிறது என்று ஈரானிய ஜனாதிபதி குற்றஞ் சாட்டை விடுக்கத் தொடங்கியதையடுத்தே மேற்கு லக தூதுக்குழுவினர் சபையிலிருந்து வெளிநடக்க ஆரம்பித்தனர்.
ஈரானிய ஜனாதிபதி அஹமதி நஜாத்தின் கூற்றை அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஹிலரி கிளின்டன் நிராகரித்தார்.
எப்போதும் போலவே பொய்யான குற்றச்சாட்டுக்களையே அவர் இம்முறையும் முன்வைக்கிறார் என்று கூறிய ஹிலரி சகல நாடுகளும் ஒன்றிணைத்து ஈரானின் அணு ஆயுத திட்டத்தை கைவிடச் செய்ய வைப்பதற்கு முன்வரவேண்டும் என்று ஹிலரி கிளின்டன் வலியுறுத்தினார்.
இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகள் அணு பரவலாக்காமை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை எனினும் இவை அணு ஆயுதங்களை வைத்துள்ளன. வடைகொரியா முதலில் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தது. எனினும் 2003 இல் அதிலிருந்து விலகிக் கொண்டு 2006 இலும் 2009 இலும் அணு சோதனைகளை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

ஜெருசலம்:சிறைக்கைதியான ஃபலஸ்தீன் முஸ்லிமின் குர்ஆனை கிழித்தெறிந்த இஸ்ரேலிய வார்டன்

ஜெருசலம்:இஸ்ரேலின் சிறைக்கொட்டகையில் அடைக்கப்பட்டுள்ள ஃபலஸ்தீனைச் சார்ந்த ஒருவரிடமிருந்து கைப்பற்றிய புனித குர்ஆனை இஸ்ரேலிய வெறிப்பிடித்த வார்டன் ஒருவன் கிழித்தெறிந்துள்ளான். அஷ்கலன் சிறையில்தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த கைதியான ஃபலஸ்தீன் முஸ்லிமிடமிருந்து கத்திக்கொண்டு வந்த இஸ்ரேலி வார்டன் குர்ஆனை பலவந்தமாக கைப்பற்றி கிழித்தெறிந்துள்ளான்.

இச்சம்பவம் ஃபலஸ்தீனில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே அல் அரூப் அகதிகள் முகாமிலும் மெஜிதோ சிறையிலும் குர்ஆனை பலவந்தமாக கைப்பற்றி கிழித்தெறிந்துள்ளனர் யூத பயங்கரவாதிகள்

கஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமைக்கான ஆதரவு தொடரும்: பாகிஸ்தான்


இஸ்லாமாபாத்:கஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமைக்கான தார்மீக, ராஜீய, அரசியல் ரீதியான ஆதரவில் உறுதியாக இருப்பதாக பாகிஸ்தான் தேசிய அசம்பிளியில் பாக்.வெளியுறவுத்துறை அமைச்சர் குரைஷி தெரிவித்தார்.

கஷ்மீர் விவகாரத்தில் ஆசுவாசமான தீர்வைத்தான் பாகிஸ்தான் விரும்புகிறது. கஷ்மீரிகளின் விருப்பங்களுக்கும், ஐ.நா தீர்மானத்திற்கும் ஒத்ததாக இருக்கவேண்டும் அந்த தீர்வு. கஷ்மீரிகள் பங்கெடுக்காத ஒரு பரிகாரமும் நிலைக்காது. கஷ்மீரிகளை சேர்க்காமல் நடக்கும் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை பரிபூரணமாகயிருக்காது.

பிரச்சனை தீர்ப்பதற்காக நாங்கள் எல்லைக்கு அப்பாலும் எல்லைக்கு உள்ளும் உள்ள கஷ்மீரி தலைவர்களுடம் உறவை பேணி வருகிறோம். பாகிஸ்தானின் வெளிநாட்டுக் கொள்கையின் ஆணிவேரான கஷ்மீர் பிரச்சனையை மறந்துவிட்டு முன்னே செல்ல சாத்தியமில்லை. அதேவேளையில் பேச்சுவார்த்தைகள் மூலமாகத்தான் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு.

கடந்த ஆண்டு எகிப்தின் ஷரமுஷேக்கில் வைத்து இருநாட்டு பிரதமர்கள் நடத்திய ஒருங்கிணந்த பிரகடனத்தில் இதனை அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டது. இவ்வாறு குரைஷி கூறினார்.

ஹமாஸின் மனம் மாறிவிடுமா?



டெல்அவீவ்:மூன்று ஆண்டுகள் காஸ்ஸா மீது விதிக்கப்பட்ட தடையின் மூலம் இஸ்ரேல் சாதித்தது என்ன? காஸ்ஸா மக்களையும் அவர்களுடைய பாதுகாவலர்கள் எனக்கூறப்படும் ஹமாஸையும் பாடம் புகட்ட முடிந்ததா? எதற்காக இந்த கூட்டுத்தண்டனை? தடையின் தற்போதைய நிலை என்ன?

ஹமாஸ் அதிகாரத்தை கைப்பற்றியதை விரும்பாத இஸ்ரேலும், எகிப்தும் காஸ்ஸாவிற்கு ஏற்படுத்திய தடையையும், அதன் பலனையும் குறித்து பி.பி.சிக்கு சில ஆவணங்கள் கிடைத்துள்ளன.

குடிதண்ணீர் உள்ளிட்ட உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான பொருட்களை தடைச் செய்த பிறகும் தளராத ஃபலஸ்தீனர்கள் இறுதியில் வெற்றியைப் பெற்றுள்ளார்கள் என பி.பி.சியின் நிரூபர் டிம் ஃப்ராக்ஸ் கூறுகிறார்.

எதற்காக காஸ்ஸாவின் மீதான இத்தகைய தடை? என நீதிமன்றத்தின் கேள்விக்கு, இஸ்ரேல் அளித்த பதில், 'ஹமாஸிற்கு பாடம் புகட்ட' என்பதாகயிருந்தது. தடை ஏற்படுத்துவதால் போராளிகள் எவ்வாறு தங்களது ஆரோக்கியத்தை பேணுவார்கள் என்று பார்ப்போம் என்பது இஸ்ரேலின் நோக்கமாகயிருந்தது.

காஸ்ஸாவிற்குள் நுழைய தடைச்செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலை வெளியிட இஸ்ரேலுக்கு துணிச்சலில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் நிர்பந்தம் அதிகமாகும் பொழுது ஒவ்வொரு பொருளின் இறக்குமதியை இஸ்ரேல் அனுமதி வழங்கியது. குடிதண்ணீருக்கான தடையை நீக்கியது இந்த மாதம் பிப்ரவரியிலாகும். துணிகளை அனுமதித்தது மார்ச் மாதம். அலுமினியம், பர்னிச்சர்களுக்கான மரம், சமையலறை பாத்திரங்கள், செருப்புகள் ஆகியவற்றை கடந்த மாதம்தான் இறக்குமதிச் செய்ய இஸ்ரேல் அனுமதியளித்தது.

அதேவேளையில் மல்லிப்பொடி, ஜூஸ் வகைகள், விளையாட்டுப் பொருட்கள், சாக்கலேட், ஜாம், ஆடைகள் ஆகியவற்றிற்கான தடை தற்பொழுதும் தொடருகிறது.

காஸ்ஸா தடையைக் குறித்து விவரமறிய தகவல் அறியும் உரிமைச்சட்டப்படி பணியாற்றும் இஸ்ரேலிய மனித உரிமை அமைப்பான 'கிஸா' தான் இஸ்ரேல் தடைச்செய்த பொருட்களின் பட்டியலை வெளியிட்டது.

சர்வதேச நிர்பந்தத்தின் காரணமாக இஸ்ரேல் காஸ்ஸாவிற்குள் கடந்த வருடம் பாதி முதல் இம்மாதம் வரை அனுமதித்த 81 பொருட்களின் பட்டியலையும், கால அளவையும் இவ்வமைப்பு வெளியிட்டுள்ளது.

நீதிமன்றத்தில் இஸ்ரேல் சமர்ப்பித்த 13 பக்க விளக்கத்தில் எந்தவொரு நீதியும் இல்லை. இன்று அத்தியாவசியப் பொருட்கள் காஸ்ஸாவிற்குள் கிடைக்க ஆரம்பித்திருந்தாலும், தடை மற்றும் தனிமைப்படுத்தலில் நாட்களை மன உறுதியோடு எதிர் கொண்ட வரலாற்றைத்தான் இவர்களால் கூறமுடியும்.

மல்லிப்பொடியை தடைச்செய்ததால் ஹமாஸின் மனதை மாற்ற முடியவில்லை என்பதோடு உலக சமூகத்தின் ஆதரவையும் பெற இந்தத் தடை உதவியது.

ரியாத்தில் கடும் சூறாவளிக் காற்றுடன் மழை- வரலாறு காணாத வெள்ளம்


சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் நகரமே ஸ்தம்பித்துப் போயுள்ளது. வாகனப் போக்குவரத்து முடங்கி விட்டது. பள்ளி, கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
கடும் சூறாவளிக் காற்றுடன் நேற்று பெய்த மழையால் நகரமே வெள்ளக்காடாகியுள்ளது. பல சாலைகளில் வெள்ளம் போல மழை நீர் ஓடிவருவதால், போக்குவரத்து கடுமையாக ஸ்தம்பித்துள்ளது.
கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்திற்கு கன மழை கொட்டித் தீர்த்தது. அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் மேற்கிலிருந்து மணிக்கு 42 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சவூதி அரேபிய கல்வி அமைச்சர் இளவரசர் பைசல் பின் அப்துல்லா கூறுகையில், ரியாத்தில் உள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டிருக்கும் என்று அறிவித்தார்.மேலும்,அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளும் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்காங்கு மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட வாகனங்களை மீட்கும் நடவடிக்கைகளில் ரியாத் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. பாலங்களில் தேங்கியுள்ள நீரை அகற்றவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த கன மழையால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மழை காரணமாக பல்வேறு இடங்களிலிருந்து கிங் காலித் சர்வதேச விமான நிலையத்திற்கு பலரால் வர முடியாமல் போனதால் அவர்கள் விமானங்களைத் தவற விட நேரிட்டது.

நேற்று பிற்பகல் பள்ளியிலிருந்து திரும்பிய மாணவர்கள், மழை வெள்ளத்தால் பெரும் அவஸ்தைக்குள்ளானார்கள். இதேபோல ரியாத் நகருக்கு விமானங்கள் மூலம் வந்தவர்களும் தங்களது இருப்பிடங்களுக்குச் செல்ல முடியாமல் பெரும் அவஸ்தைக்குள்ளானார்கள்.

திங்கள், 3 மே, 2010

யெமனில் கடத்தப்பட்ட இராணுவ வீரர்களை விடுவிக்க அரசாங்கம் 48 மணிநேரக் காலக்கெடு

யெமன் இராணுவத்தினர் இருவரைக் கடத்திச் சென்றுள்ள தென்பகுதி போராளிகள் தங்கள் சகாக்களை விடுவிக்காவிட்டால் படையினரின் உயிருக்குத் தாங்கள் பொறுப்பில்லையென அறிவித்துள்ளனர். விடுமுறையில் சென்றுவிட்டு கடமைக்குத் திரும்பிய இரண்டு படைவீரர்களை யெமன் போராளிகள் கடத்திச் சென்றனர்.

இதையடுத்து யெமனின் தென்பகுதியிலுள்ள அமெரிக்கர்களைக் கவனமாக நடமாடுமாறு அமெரிக்கா கேட்டுள்ளது. யெமனிலுள்ள லண்டன் தூதரகத்தினை தாக்குவதற்கு அண்மையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனால் அங்குள்ள மேற்கு நாட்டுப் பிரஜைகளை அவதானத்துடன் செயற்படுமாறு கேட்கப்பட்டுள்ளதுடன் வெளிநாட்டுப் பிரஜைகள் தங்கியுள்ள ஹோட்டல்களுக்கும் மேலதிக பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடத்தப்பட்ட இராணுவ வீரர்களை விடுதலை செய்ய 48 மணி நேரம் காலக்கெடுவை அரசாங்கம் விதித்துள்ளது.

அத்துடன் 48 பேரைத் தேடப்படுவோர் பட்டியலில் சேர்த்துள்ளது. இவர்கள் அனைவரும் யெமன் தென்பகுதியைச் சேர்ந்த போராளிகளாவர். யெமனின் தென்பகுதியில் 2004ம் ஆண்டு முதல் ஷியா முஸ்லிம்கள் மேலதிக அதிகாரம் வேண்டிப் போராடுகின்றனர்.

இதனால் பல பேர் உயிரிழந்தும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துமுள்ளனர். தற்போது இங்கு அல் கைதா ஊடுருவி தாக்குதல் திட்டங்களை முன்வைக்கிறது

மத்திய கிழக்குப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க இஸ்ரேல், எகிப்து தலைவர்கள் சந்திப்பு

இஸ்ரேல் பிரதமர் பென்ஜெமின் நெதன்யாஹு எகிப்து ஜனாதிபதி ஹொஸ்னி முபாறக்கிடையிலான முக்கிய பேச்சுவார்த்தைகள் நேற்று எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் ஆரம்பமானது.

2008ம் ஆண்டு முறிவடைந்த இஸ்ரேல், பலஸ்தீன் பேச்சுவார்த் தைகளை மீண்டும் ஆரம்பிப்பது சம்பந்தமாகப் பேசும்பொருட்டு இத் தலைவர்கள் சந்தித்துக் கொண் டனர். இஸ்ரேல், பாலஸ்தீனர் க் கிடையில் நடந்த அனைத்து பேச்சுவார்த்தைகளையும் எகிப்தே மத்தியஸ்தராக நின்று நடத்தியது. காஸா இஸ்ரேலிடையே 2008ம் ஆண்டு யுத்தம் ஏற்பட்டதால் இப் பேச்சுக்கள் முறிவடைந்தன.

இதனை மீண்டும் ஆரம்பிப்ப தற் கான சூழலை ஏற்படுத்தவே இத் தலைவர்கள் சந்தித்துக்கொண்டனர். அரபுலீக் இப்பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற் பாடுகளையும் செய்துள்ளதுடன் ஏக மனதாக அங்கீகாரத்தையும் வழங் கியுள்ளது.

பெரும்பாலும் இஸ்ரேல் பலஸ் தீன் பேச்சுவார்த்தைகள் மறை முகமாகவே இடம்பெறவுள்ளன. இம் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காதப்பட்சத்தில் நேரடிப்பேச்சுவார்த்தைக்குச் சந்தர்ப்பமில்லையென அரபுலீக் செயலாளர் அமர்முஸா குறிப் பிட்டார்.

மார்ச் மாதம் இஸ்ரேல் எகிப்து தலைவர்கள் சந்தித்தபோது எடுக்க ப்பட்ட தீர்மானங்களுக்கமையவே தற்போது ஆரம்பமாகவுள்ள பேச்சுக் கள் இடம்பெறவுள்ளன. இதற்கான கால அட்டவணைகளும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளன. மேற்குக் கரையில் இஸ்ரேல் குடியேற்றங் களை நிறுவினால் பேச்சுவார்த்தை யிலிருந்து பலஸ்தீன் விலகிக்கொள் ளலாமென அரபுலீக் அறிவித்தது.

பைதுல்லா மெசூத் ஒளிநாடாவில் தோன்றி அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

பாகிஸ்தானில் இயங்கும் தலி பான்களின் தலைவர் பைதுல்லா மெசூத் ஒளிநாடாவில் தோன்றி அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தார். தலிபான்களின் இணைய தளத்தில் ஒன்பது நிமிடங்கள் இந்த ஒளி நாடா காண்பிக்கப்பட்டது.

ஏப்ரல் 04 ம் திகதி இந்த ஒளி நாடா எடுக்கப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது. அமெரிக்க நகரங்கள், நலன்கள், இராணு வங்களைத் தாக்குமாறு தனது சகாக்களுக்கு பைதுல்லா மெசூத் கட்டளையிட்டார். ஆங்கில மொழி யில் இவரது உரை அமைந்திருந்தது. ஹகிமுல்லா மெசூதைக் கொன்ற மைக்காக அமெரிக்கா மீதான தாக்குதல் தொடருமென பைதுல்லா மெசூத் சூளுரைத்தார்.

இத்த னைக்கும் பைதுல்லா மெசூத் ஜனவரி மாதம் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான், அமெரிக்க அரசாங் கங்கள் அறிவித்தன. இவர் வீடி யோவில் தோன்றி உரையாற்றி யதால் பைதுல்லா மெசூத் தொடர் பான உண்மைத் தன்மை தொட ர்ந்தும் கேள்விக்குள்ளாகியுள்ளது. ஒளிநாடாவில் முகமூடியணிந்த இருவர் பைதுல்லா மெசூதுக் கருகாமையில் நின்று கொண்டி ருந்தனர். இந்த வீடியோ தொடர் பாக அமெரிக்க, பாகிஸ்தான் அரசுகள் உடனடியாக எதையும் தெரிவிக்கவில்லை.

நான்கு மாதத்தில் சுமார் 52 ஃபலஸ்தீனர்கள் விஷவாயு தாக்குதல் மூலம் கொலை

காஸ்ஸா இந்த வருட துவக்கத்திலிருந்து கடந்த மாதம் இறுதிவரை, நான்கு மாதத்தில் சுமார் 52 ஃபலஸ்தீனர்களை விஷவாயு தாக்குதல் மூலம் கொன்றுள்ளது எகிப்து ராணுவம்.

இஸ்ரேலின் நெருக்கடியில் வாழும் 1.5 மில்லியன் ஃபலஸ்தீனர்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு வருவதில் இந்த சர்சைக்குரிய காஸ்ஸா சுரங்கங்கள் தான் உதவுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, பாலஸ்தீன மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை காஸ்ஸா வழியாக கொண்டுவரும் போது, எகிப்து ராணுவத்தால் வேண்டுமென்றே இவர்கள் கொல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி அநியாமாக உயிர்களை கொல்வதை எகிப்து ராணுவம் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்களின் மேல் விஷவாயு தாக்குதல் நடத்துவது சர்வதேச சட்டங்களின் மிகப்பெறும் அத்துமீறலாகும் என்று அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு எல்லையான ராபாவையும் எகிப்து அரசு தன் பாதுகாப்பு காரணங்களை கருதி மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது

சோமாலியா மசூதியில் குண்டு வெடிப்பு - 34 பேர் பலி 100க்கும் மேற்பட்டோர் காயம்

கடந்த சனிக்கிழமையன்று(மே2) சோமாலியா தலைநகரம் மொகாதிஷுயில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மசூதி ஒன்றில் சக்திவாய்ந்த 2 குண்டுகள் வெடித்ததில் சுமார் 34 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

வழக்கம் போல, அல் கொய்தா தொடர்பிலுள்ள அல்-ஷபாப் என்ற இயக்கத்தை தொடர்புபடுத்தி செய்திகள் வெளியாகின்றன. இந்த குண்டு வெடிப்பில் காயமடைந்த மூத்த உலமா, ஃபுஆத் முஹம்மத் கல்ஃப் என்பவரை குறிவைத்துதான் அமெரிக்க மற்றும் வெளிநாட்டு படைகள் இக்குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளதாக அல் ஷபாப் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.அரசு மற்றும் ஆப்ரிக்கா யூனியனின் படைகளுக்கு எதிராக அல் ஷபாப் போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே நேற்று மற்றொரு மசூதியில் குண்டு வெடித்ததில் சுமார் 2 பேர் உயிரிழந்தனர் ஏராளமானோர் காயமடைந்ததனர்.சோமாலியாவில் சமீப காலமாக மசூதிகளில் மட்டும் குண்டு வெடிப்பது தொடர்ந்து மர்மமாகவே உள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தின் இரகசிய சிறைச்சாலை ஒன்றில் சிறை வைக்கப்பட்டிருந்தவர்கள்

பலவிதமான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.

உடலில் மின்சாரம் பாய்ச்சப்படுதல், பாலியல் பலாத்காரம் போன்ற சித்ரவதைகளை இவர்கள் தொடர்ந்தும் அனுபவித்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சிறையில் முன்பு சிறை வைக்கப்பட்டிருந்தவர்களிடம் பிபிசி பேசியபோது, தாங்கள் திட்டமிட்டு வழிமுறை வகுத்து தங்களை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்ததை உறுதிச் செய்துள்ளனர்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில், இக்கைதிகள் சொன்ன விபரங்கள் இடம்பெற்றுள்ளன.
முதானா இரகசிய சித்ரவதைச் சிறை
முதானா விமானதளத்திலிருந்த இந்த இரகசிய சித்ரவதைச் சிறை தற்போது மூடப்பட்டுவிட்டது. ஆனால் இந்த மாத முற்பகுதி வரை இந்த இடத்தில்தான் நானூறுக்கும் மேற்பட்ட கைதிகள் சிறை வைக்கப்பட்டு மிகக் கொடூரமான சித்ரவதைகளை மாதக்கணக்கில் அனுபவித்து வந்திருந்தனர்.

"எங்கள் தலையை பிளாஸ்டிக் பையால் மூடுவதிலிருந்து சித்ரவதைகள் ஆரம்பிக்கும். எங்கள் மேலே தண்ணீரை ஊற்றிவிட்டு பின்னர் உடலில் மின்சாரத்தைப் பாய்ச்சுவார்கள்"என்று இங்கு சிறை வைக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர் கூறுகிறார். தனது அடையாளத்தை வெளியில் சொல்ல அவர் பயப்படுகிறார்.
இவருக்கு நடந்த விஷயங்களும் இந்த இடத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த வேறு நாற்பது பேர் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்சின் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ள விஷயங்களும் ஒத்துப் போகின்றன.

இந்நிலையில் ஈராக்கில் இரகசிய சிறைச்சாலைகள் உள்ளன என்பதையும், ஈராக்கின் சிறைகளில் சித்ரவதை பரவலாக நடந்து வருகிறது என்பதையும் ஈராக்கிய அரசாங்கம் முற்றிலுமாக மறுக்கிறது.

ஆனால் முத்தானா இரகசிய சிறைச்சாலையில் சித்ரவதை என்பது 'வழமையாகவும், வழிமுறை வகுக்கப்பட்டும்' நடந்துள்ளதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறுகிறது.

மேற்குலகத்தவர்கள் பலர் இஸ்லாத்தைக் கற்பதில் ஆர்வமாக உள்ளனர்

சர்வதேச குழு: இயற்கையுடன் தொடர்புடைய பல்வேறு வினாக்களுக்கு விடைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வழியாக, இஸ்லாத்தைக் கற்றுக் கொள்வதில் தற்போதைய பெரும்பாலான மேற்கத்தைய அறிஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பதை நவீன ஆய்வுகள் உறுதி செய்துள்ளதாக இஸ்லாமிய கல்வியியலாளர் ஒருவர் தெரிவிக்கின்றார்.

தமது சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்கெதிராகக் கிளர்ந்தெழும் வினாக்களுக்கு திருப்திகரமான விடைகளைப் பெற்றுக் கொள்வதில் அவர்களது கொள்கைகளும் கோட்பாடுகளும் தோல்வி கண்டுள்ளமையால், அவர்களிடையே இஸ்லாம் பற்றிய ஆர்வம் அதிகரித்து வருகின்றது என, இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனத்தின் பணிப்பாளர் முஹம்மத் சித்தீக் தெரிவித்தார்.

இஸ்லாமிய அறிவியலும் கல்வி மறுசீராக்கமும் பற்றிய சர்வதேச கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போது, சித்தீக் தொடர்ந்து தெரிவித்ததாவது, மேற்குலகத்தினர், ஆய்வுகளுக்கும் அபிவிருத்திக்கும் பயன்படுத்திய அனைத்து விஞ்ஞானக் கற்கைகளும் பொதுப் பிரயோகத்தில் முழுமையான பயன்பாடற்றவை என்பதை உணர்ந்து கொண்டுள்ளனர்.

குர்ஆனும் பைபிளும் எனும் தலைப்பில் நூலொன்றை எழுதியவரான பிரான்சிய விஞ்ஞானியொருவர், குர்ஆன் மாத்திரமே இயற்கையுடன் தொடர்புடைய அனைத்து விவகாரங்களுக்குமான பதில்களைக் கொண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உண்மையில், இதன்காரணமாகவே மேற்குலக விஞ்ஞானிகள் பலர் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டிருக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சித்தீக்கின் தகவலின்படி, இஸ்லாம் மேற்குலகில் மிக வேகமாகப் பரவி வருகின்றது. அமெரிக்காவில், பள்ளிவாயல்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. யதார்த்தத்தை விளங்கிக் கொண்டமையினால் பல அமெரிக்கர்களும் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டு வருகின்றனர்.

அணுபரவல் மாநாட்டில் ஈரான் பங்கேற்பதை தடுக்கும் உரிமை அமெரிக்காவுக்கில்லை

என்கிறது தெஹ்ரான்
செய்தியாளர்களிடம் பேசிய பின் ,அஹமெதி நெஜாத் அமெரிக்கா பயணமானார்

அணு பரவில் தடுப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா செல்லும் ஈரான் உயர் மட்டக் குழுவிற்கு விசா மறுக்கப்பட்டதை ஈரான் வெளிநாட்டமைச்சர் மெளனாச்சர் மொடாகி கடுமையாகக் கண்டித்துள்ளார். இவ்விடயத்தில் முடிவெடுக்கும் உரிமை அமெரிக்காவுக்கு இல்லை.
ஈரானின் ஜனாதிபதி உட்பட எழுபது பிரதிநிதிகளுக்கும் விசா வழங்கப்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். நியூயோர்க்கில் இன்று 03ம் திகதி முதல் 28ம் திகதி வரை அணு பரவல் தடுப்பு மாநாடு நடைபெறவுள்ளது.
192 நாடுகள் இதில் பங்கேற்கவுள்ளன. பேரழிவு ஆயுதங்களை (அணு ஆயுதம்) அழித்தொழித்து உலகில் அமைதியை நிலைப்படுத்தும் நோக்குடன் இம்மாநாடு நடைபெறுகிறது. இதில் ஈரான், கிழக்குத் திமோர் நாடுகள் பங்கேற்க விரும்பியபோதும் இந்நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இன்னும் விசா வழங்கப்படவில்லை.
இந்நிலையில் ஈரானிலிருந்து சிறு தொகை அதிகாரிகள் பங்கேற்க விசா வழங்கப்பட்டுள்ளதென அறிவித்துள்ள அமெரிக்க உயரதிகாரியொருவர் இதில் அஹ்மெதி நெஜாதும் உள்ளடக்க ப்பட்டுள்ளாரா எனத் தெரியவில்லை என்றார்.
அமெரிக்க காங்கிரஸ் (பாராளுமன்றம்) எம்.பிக்கள் அஹ்மெதி நெஜாத் அமெரிக்கா வருவதை நிராகரித்துள்ளனர். யுரேனியம் செறிவூட்டல் விடயம் தொடர்பாக மேற்குலக நாடுகளுடன் தொடர்ந்தும் அடம்பிடிக்கின்றது.
செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைச் சோதனையிட பிரான்ஸ், ரஷ்யாவுக்கு அனுப்ப மறுக்கும் ஈரான் இதை தங்கள் நாட்டுக்குள் வைத்து ஐ. நா. அதிகாரிகள் சோதனையிட முடியுமெனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
நியூயோர்க் மாநாட்டில் ஈரானின் உண்மைத்தன்மை சமாதான நோக்கம் என்பவற்றை உலகுக்கு விளக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென ஈரான் வெளிநாட்டமைச்சர் வலியுறுத்தினார். இந்நிலையில் ஈரான் ஜனாதிபதி அமெரிக்காவும், இஸ்ரேலும் பயங்கரவாதச் செயல்களுளிலீடுபடுவதற்கான ஆதாரங்கள் தன்னிடமுள்ளதெனத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் நீண்டகாலச் சர்ச்சைக்கு முடிவுகட்ட நியூயோர்க் மாநாட்டில் முடிவு எடுக்கப்படலாமெனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. ஐ. நா. வும் ஈரானுக்கெதிராக நான்காவது தடைகளைக் கொண்டு வருவதற்கான இறுதி ஆயத்தங்களைப் பூர்த்தி செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.
பிந்திய தகவலின்படி விசாக் கிடைக்கப்பெற்று நெஜாத் அமெரிக்கா புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஞாயிறு, 2 மே, 2010

அமெரிக்க கடலில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் பிப்பாய் எண்ணெய் கசிவதாக தகவல்.

அமெரிக்கா - மெக்ஸிகோ வளைகுடா கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவானது லூயிசியானா மாகாணக் கடலோரப் பகுதிகளில் கரை ஒதுங்க ஆரம்பித்துள்ளது. தற்போது அடர்த்தியான எண்ணெய் படிமங்கள் கரையோரத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரம் வரை படிந்து காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கடல் ஆழிப் பகுதியிலுள்ள எண்ணெயை அகழ்வு பகுதிகளில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவமே இந்த எண்ணெய் கசிவிற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் இணைக்கப்பட்டிருந்த குழாய் சிதைவையடுத்து தொடர்ந்து நாளொன்றிற்கு 5ஆயிரம் பீப்பாய்கள் என்ற அளவில் எண்ணெய் கடலில் கசிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எண்ணெய் கசிவு ஏற்படும் இடத்தை அடைத்து கசிவை முழுமையாகத் தடுத்து நிறுத்துவதற்கு 40 தொடக்கம் 90 நாட்கள் வரை எடுக்குமென எண்ணெய் அகழ்விற்கான பிரித்தானிய நிறுவனம் தெரிவித்துள்ளது

சனி, 1 மே, 2010

ஜூனில் ஆப்கானிஸ்தான் காந்தஹார் மீது மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை.

காபூல்:ஆப்கானிஸ்தானில் காந்தஹார் நகரில் செயல்பட்டுவந்த ஐ.நா அலுவலகம் இழுத்து மூடப்பட்டது. பாதுகாப்பு காரணங்கள் என கூறப்பட்டாலும் வருகிற ஜூனில் நேட்டோ படையினர் நடத்தவிருக்கும் தாக்குதலை முன்னிட்டுத்தான் ஐ.நா அலுவலகம் மூடப்பட்டது என கூறப்படுகிறது. வெளிநாடுகளைச் சார்ந்த பணியாளர்களிடம் காபூல் தலைமை அலுவலகத்திற்கு செல்லவும், ஆப்கானிஸ்தான் பணியாளர்கள் சிறிதுகாலம் வீட்டிலிருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக ஐ.நா செய்தித் தொடர்பாளர் சூசன் மானுவல் தெரிவித்தார்.

40 வெளிநாட்டு பணியாளர்களிருந்த அலுவலகத்தில் தற்பொழுது 10க்கும் குறைவான பணியாளர்களே உள்ளனர். மக்கள் வசிக்கும் பகுதியில் செயல்படும் அலுவலகத்திற்கு தாக்குதல் பீதி உள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அலுவலகத்தை மூடுவதாக ஐ.நா செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.ஆனால்,அத்தகைய சூழல் தற்பொழுது இல்லை என்றும், அலுவலகத்தை மாற்றியது கண்டிக்கத்தக்கது என்றும் மாகாண மேயர் அஹ்மத் வலி கர்ஸாயி தெரிவித்தார்.

அமெரிக்காவின் நிர்பந்தத்தின் அடிப்படையில் தான் ஐ.நா அலுவலகம் காந்தஹாரில் மூடப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜூனில் நடைபெறும் ராணுவ நடவடிக்கையில் ஆப்கான் ராணுவத்தினர் உட்பட 23000 பேர் பங்குபெறுவர் என கூறப்படுகிறது. தற்பொழுது பணியிலுள்ள 8 ஆயிரம் அமெரிக்க-கனடா அந்நிய ஆக்கிரமிப்பு ராணுவத்தினருடன் புதியதாக வரும் 3500 அமெரிக்க அந்நிய ஆக்கிரமிப்பு படையினரும் இந்த ராணுவ நடவடிக்கையில் கலந்துக் கொள்வர்.

6700 ஆப்கான் ராணுவத்தினரும் இதில் பங்குபெறுவர். அமெரிக்க அந்நிய ஆக்கிரமிப்பு படையினர் நடத்தவிருக்கும் அக்கிரம ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக போராளிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்நிய ஆக்கிரமிப்பு அக்கிரம் ராணுவ நடவடிக்கைக்கு கடுமையான பதிலடியைக் கொடுப்போம் என அவர்கள் கூறியுள்ளனர்

நான் ஆண் இல்லை என்கிறார் நித்தியானந்தா _

நான் ஆண் இல்லை. எந்த வழிகளிலும் நான் பெண்களோடு பாலியலில் ஈடுபடவில்லை என சுவாமி நித்தியானந்தா சி.ஐ.டியினரிடம் தெரிவித்துள்ளார்.

நித்தியானந்தாவின் கடவுச் சீட்டில் அவர் ஓர் ஆண் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் முழுமையான விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் சி.ஐ.டி.யினர் தெரிவித்துள்ளனர். அவர் வௌ;வேறு 5 பெண்களிடம் பாலியலில் ஈடுபட்டமை தொடர்பிலான 36 வீடியோ நாடாக்களை விசேட பரிசோதனைக்கென அனுப்பிவைத்துள்ளனர்.

புதன், 28 ஏப்ரல், 2010

இலங்கை தொடர்பில் ஐ.நா நிபுணர் குழு அமைக்கப்படுவதை - தடுக்கும் முயற்சி தீவிரம்!

ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி செயலாளர் லின் பாஸ்கோ, அடுத்தமாதமளவில் இலங்கை விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக, ஐ.நாவின் உயர்மட்ட தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ள போதும், அவர் ஐ.நா அமைக்கவுள்ள இலங்கை தொடர்பான விஷேட நிபுணர் குழு பற்றி ஆராய்வதற்காக இவ்விஜயத்தினை பயன்படுத்தமாட்டார் என தெரிய வருகிறது.

இலங்கையின் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அண்மையில் நியூயோர்க்கில், ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்தித்து விரிவான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார். இதில், இலங்கை தொடர்பில், நிபுணர் குழுவை அமைக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை ஏப்ரல் 20 ம் திகதி இஸ்ரேலினால் ஐ.நா வில் நடத்தப்பட்ட வரவேற்பு உபசாரத்தின் போது உங்கள் அரசாங்கத்திற்கு எதிராக நான் செயற்படுவதில்லையென பான் கீ மூன், ஐ.நாவிற்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கோஹணவுக்கு தெரிவித்ததாக இன்னர்சிற்றி பிறஸ் குறிப்பிட்டிருந்தது.

மேலும், இலங்கை தொடர்பில் நிபுணர் குழு அமைக்கப்படும் என எதிர்பாத்திருக்க வேண்டாமென்று ஐ.நாவில் உள்ள சிரேஷ்ட்ட அதிகாரியொருவர் கூறியதாகவும் இன்னர்சிற்றி பிரஸ் தெரிவித்திருந்தது.
இந்நிலைமைகளினல் இலங்கை தொடர்பில் ஐ.நாவின் விஷேட நிபுணர் குழு அமைக்கப்படுமா? என்றே சந்தேகம் எழுந்துள்ளது!

காந்தஹாரில் ஐ.நா அலுவலகம் மூடப்பட்டது

காபூல்:ஆப்கானிஸ்தானில் காந்தஹார் நகரில் செயல்பட்டுவந்த ஐ.நா அலுவலகம் இழுத்து மூடப்பட்டது. பாதுகாப்பு காரணங்கள் என கூறப்பட்டாலும் வருகிற ஜூனில் நேட்டோ படையினர் நடத்தவிருக்கும் தாக்குதலை முன்னிட்டுத்தான் ஐ.நா அலுவலகம் மூடப்பட்டது என கூறப்படுகிறது.

வெளிநாடுகளைச் சார்ந்த பணியாளர்களிடம் காபூல் தலைமை அலுவலகத்திற்கு செல்லவும், ஆப்கானிஸ்தான் பணியாளர்கள் சிறிதுகாலம் வீட்டிலிருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக ஐ.நா செய்தித் தொடர்பாளர் சூசன் மானுவல் தெரிவித்தார்.

40 வெளிநாட்டு பணியாளர்களிருந்த அலுவலகத்தில் தற்பொழுது 10க்கும் குறைவான பணியாளர்களே உள்ளனர். மக்கள் வசிக்கும் பகுதியில் செயல்படும் அலுவலகத்திற்கு தாக்குதல் பீதி உள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அலுவலகத்தை மூடுவதாக ஐ.நா செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.

ஆனால்,அத்தகைய சூழல் தற்பொழுது இல்லை என்றும், அலுவலகத்தை மாற்றியது கண்டிக்கத்தக்கது என்றும் மாகாண மேயர் அஹ்மத் வலி கர்ஸாயி தெரிவித்தார்.

அமெரிக்காவின் நிர்பந்தத்தின் அடிப்படையில் தான் ஐ.நா அலுவலகம் காந்தஹாரில் மூடப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜூனில் நடைபெறும் ராணுவ நடவடிக்கையில் ஆப்கான் ராணுவத்தினர் உட்பட 23000 பேர் பங்குபெறுவர் என கூறப்படுகிறது. தற்பொழுது பணியிலுள்ள 8 ஆயிரம் அமெரிக்க-கனடா அந்நிய ஆக்கிரமிப்பு ராணுவத்தினருடன் புதியதாக வரும் 3500 அமெரிக்க அந்நிய ஆக்கிரமிப்பு படையினரும் இந்த ராணுவ நடவடிக்கையில் கலந்துக் கொள்வர்.

6700 ஆப்கான் ராணுவத்தினரும் இதில் பங்குபெறுவர். அமெரிக்க அந்நிய ஆக்கிரமிப்பு படையினர் நடத்தவிருக்கும் அக்கிரம ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக போராளிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்நிய ஆக்கிரமிப்பு அக்கிரம் ராணுவ நடவடிக்கைக்கு கடுமையான பதிலடியைக் கொடுப்போம் என அவர்கள் கூறியுள்ளனர்.
செய்தி:தேஜஸ்

மால்கம் எக்ஸ் கொலையாளியை பரோலில் விடுதலைச் செய்தது

வாஷிங்டன்:அமெரிக்காவில் மனித உரிமை சேவகராகவும் நேசன் ஆஃப் இஸ்லாமின் தலைவராகவுமிருந்த மால்கம் எக்ஸ் என்ற மாலிக் அல் ஸாபாஸைக் கொன்ற கொலையாளியை 45ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்றம் பரோலில் விடுதலைச் செய்தது.

1965 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் மால்கம் எக்ஸை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட தாமஸ் ஹகேன் என்பவரைத்தான் நீதிமன்றம் நிபந்தனைகளின் அடிப்படையில் குடும்பத்தினருடன் வாழ விடுதலைச் செய்துள்ளது.

ஹகேனுக்கு 22 வயதான காலக்கட்டத்தில்தான் மால்கம் எக்ஸை தனிப்பட்ட விரோதம் காரணமாக கொன்றார் என குற்றஞ் சாட்டப்படுகிறது. இதற்கு உதவிய முஹம்மது அப்துல் அஸீஸையும், காலித் இஸ்லாமினுக்கும் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது.

கறுப்பு நிற மக்களின் வாழ்வில் வசந்தம் இஸ்லாமின் மூலமே சாத்தியம் என்பதை பிரச்சாரம் செய்த மால்கம் எக்ஸ் நேசன் ஆஃப் இஸ்லாம் என்ற இஸ்லாமிய அமைப்பின் தலைவராவார். இவர் ஒரு மனித உரிமைப் போராளியாவார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

வேற்றுகிரக உயிரிகள் உண்டு:ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ்.

வாஷிங்டன்:வேற்றுக்கிரக உயிரிகள் உண்டுமா? பல நூற்றாண்டுகளாக விஞ்ஞான உலகத்தை குழப்பத்தை குழப்பத்தில் ஆழ்த்தும் கேள்வி இது.வேற்று கிரக உயிரிகள் உண்டு என்கிறார் இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டீஃபன் ஹாக்கிங். ஆனால் அவற்றுடன் தொடர்பு ஏற்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்வது மனித குலத்தின் அழிவிற்கு காரணமாக மாறிவிடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.டிஸ்கவரி சேனலில் ஒரு புதிய டாக்குமெண்டரி தொடரில் பிரபஞ்சத்தின் மிகவும் மர்மமான ஒன்றைக் குறித்து ஹாக்கிங்ஸ் தனது ஆய்வை தெரிவிக்கிறார்.

கிரகங்களில் மட்டுமல்ல கிரகங்களுக்கிடையிலான வெற்றிடங்களிலும் இவை நடமாடலாம் என்கிறார். வேற்றுக்கிரக உயிரினங்களை குறித்த ஹாக்கிங்ஸின் வாதம் எளிதானது. இப்பிரபஞ்சத்தில் 100 பில்லியன் கேலக்ஸிகள் உள்ளன. ஒவ்வொன்றிக்கும் நூற்றுக்கணக்கான நட்சத்திரங்களும் உள்ளன. இத்தைகையதொரு விசாலமான பிரபஞ்சத்தில் பூமியில் மட்டும் உயிரினங்கள் வாழுகின்றன எனக்கூறுவது கற்பனைச் செய்யவியலாத ஒன்றாகும். அவற்றின் உருவம் எவ்வாறிருக்கும் என்பதை கற்பனைச் செய்வதுதான் உண்மையான சவாலாகும். என ஹாக்கிங்ஸ் கூறுகிறார்.

உலகில் அதிக அளவு ஏவுகணைகளை வைத்துள்ள ஹஸ்புல்லாஹ் இயக்கத்தினர்: அமெரிக்கா அறிவிப்பு.



உலகில் பல நாடுகளிடம் உள்ள ஆயுதங்களை பார்க்கிலும் அதிக ஏவுகணை, ஏறிகணைகளை ஹஸ்புல்லாஹ் அமைப்பினர் தமது வசம் வைத்திருப்பதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். சிரியாவும் ஈரானும் அதிக அளவிலான ஆயுதங்களை லெபனானிய இஸ்லாமிய அமைப்பான ஹஸ்புல்லாஹ்விற்கு வழங்குவதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ரொபர்ட் கேட்ஸ் குற்றச்சாட்டியுள்ளார்.இவ்வாறான நடவடிக்கைகள் பிராந்தியத்தின் அனைவரையும் பாதிக்கும் என ரொபர்ட் கேட்ஸ் இஸ்ரேலிய தலைவர்களுடன் கலந்துரையாடும்போது தெரிவித்துள்ளார்.ஹஸ்புல்லாஹ் அமைப்பினருக்கு சிரியா ஏவுகிற ஏறிகணைகளை வழங்குவதாக ரொபர்ட் கேட்ஸ் குறிப்பிடாதபோதிலும் இஸ்ரேல் இந்த குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றது.

2006 ஆம் ஆண்டு ஹஸ்புல்லாஹ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் 34 நாட்கள் இடம்பெற்ற மோதலில் ஆயிரத்து 200 இற்கும் அதிகமான லெபனானியர்கள் பலியானதுடன் அவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்களாவர் இஸ்ரேலைச் சேர்ந்த 560 பேர் இந்த மோதலில் கொல்லப்பட்டதுடன் அவர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவத்தை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிரியாவும் ஈரானும் ஹஸ்புல்லாஹ் அமைப்பினருக்கு அதிக எறிகணைகளை வழங்குவதாகவும், அவர்களிடம் இந்த ஆயுதங்கள் அதிக அளவில் இருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஏவூத் பராக்கை வொஷிங்டனில் சந்தித்து கலந்துரையாடிய போதே ரொபர்ட் கேட்ஸ் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
உலகில் பல அரசாங்கத்திடம் உள்ளவற்றை விட அதிக அளவிலான ஆயுதங்கள் ஹஸ்புல்லாஹ் அமைப்பினரிடம் இருக்கின்றனது பாரிய அச்சுறுத்தல் எனவும் எனவே அதனை மிக கவனமாக அவதானித்து வருவதாக ரொபர்ட் கேட்ஸ் பென்டகனின் செய்தியாளர்களிடம் உரையாடியபோது குறிப்பிட்டுள்ளார்.

பார்வதி அம்மாளைத் திருப்பி அனுப்பியமை : உடன் பதிலளிக்க ம. அரசுக்கு உத்தரவு

சென்னையில் சிகிச்சை பெறவந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளைth திருப்பி அனுப்பியது குறித்து மத்திய அரசை உடனடியாகப் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்தார். அவர் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார். இதை எதிர்த்து வழக்கறிஞர் கருப்பன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

மனுவில், "மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கடந்த 16ஆம் திகதி மலேசியாவில் இருந்து சென்னை வந்த பார்வதி அம்மாளை குடியுரிமை அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

விசா உள்ளிட்ட உரிய அனுமதியுடன் வந்த பார்வதி அம்மாளை, இந்தியாவுக்குள் அனுமதிக்காதது சர்வதேச மனித உரிமை மீறல். இதனால் பார்வதி அம்மாளை தனி விமானம் மூலம் மீண்டும் சென்னை அழைத்து வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். மேலும் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் மத்திய அரசே ஏற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் தர்மாராவ், கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஜெயசிங் ஆஜராகி வாதாடுகையில்,

"இந்த வழக்கில் மத்திய அரசையும், மாநில அரசையும் பிரதிவாதிகளாக சேர்த்துள்ளார்கள். பார்வதியம்மாளை திருப்பி அனுப்பியதில் மாநில அரசுக்கு எந்த பங்கும் கிடையாது. வெளிநாட்டவர்கள் வருகையும், அனுமதி வழங்குவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே மாநில அரசை இந்த வழக்கில் சேர்க்க கூடாது" என்று கூறினார்.

இதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு வழக்கில் இருந்து தமிழக அரசை நீக்க உத்தரவிட்டனர்.

பின்னர் நடந்த வாதத்தில் மத்திய அரசு வக்கீல் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் ஆஜராகி நாளை(இன்று)பதில் அளிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை இன்று பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. ___

ரஷ்யாவின் கடற்படைத் தளத்துக்கான கால எல்லை 2042 வரை நீடிப்பு

உக்ரைன் பாராளுமன்றத்துக்குள் கூழ் முட்டை, பெற்றோல் குண்டுகள் வீசி எதிர்க்கட்சிகள் ரகளை

உக்ரைன் பாராளுமன்றம் ரஷ்யாவின் கடற்படைத் தளத்துக்கான காலத்தை 25 ஆண்டுவரை நீடிக்க அனுமதி வழங்கியது. கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கூடியபோது இதற்கான அனுமதியை பாராளுமன்றம் வழங்கியது. இதன் பிரகாரம் 2042ம் ஆண்டுவரை உக்ரைனில் ரஷ்யாவின் கடற்படைத் தளம் இயங்கவுள்ளது.

உக்ரைன் பிரதமர் யனுகோவிச், ரஷ்ய ஜனாதிபதி மெத்விடிவ் ஆகியோருக்கிடையே இது தொடர்பான உடன்படிக்கைகள் ஏப்ரல் 21ம் திகதி கைச்சாத்திடப்பட்டன. ரஷ்யாவிடமிருந்து உக்ரைன் பெறும் எரிவாயுக்களுக்கு முப்பது வீத விலைக் கழிவை வழங்குவது என ரஷ்யா உத்தரவாதம் வழங்கியதையடுத்து கடற்படைக் காலத்துக்கான கால எல்லையை உக்ரைன் பாராளுமன்றம் நீடித்தது. 236 உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்தக் கால எல்லை நீடிக்கப்பட்டது.

எனினும் இதைச் சட்டமாக்க இன்னும் பத்து எம்.பி.க்களின் ஆதரவுகள் தேவையாயுள்ளன. இது குறித்துப் பிரதமர் யனுகோவிச் கூறியதாவது, இதை மாற்றம் செய்ய முடியாது. குறைந்த விலையில் எரிவாயுவை பெற இதைச் செய்தோம். குறைந்த விலையில் எரிவாயுவை பெறுவதென்பது உக்ரைனின் வரவு செலவுத் திட்டத்தைப் போன்றதென்றார்.

யனுகோவிச் கடந்த பெப்ரவரி மாதம் ஆட்சிக்கு வந்தார். 2010ம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்துக்கென 12 பில்லியன் அமெரிக்க டொலரை சர்வதேச நாணயத்திடமிருந்து பெற்றுக்கொள்ளவும் பிரதமர் யனுகோவிச் எதிர்பார்க்கின்றார்.

உக்ரைன் பாராளுமன்றத்தின் இந்த முடிவை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்துக்குள் பெரும் ரகளையில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே நின்று வன்முறைகளில் ஈடுபட்டனர். கூழ் முட்டைகள், பெற்றோல் குண்டுகளை பாராளுமன்றத்துக்குள் எரிந்தனர்.

பாராளுமன்றம் எங்கும் புகை மண்டலமாகவும் கூழ் முட்டையாகவும் காணப்பட்டது. சபாநாயகரின் ஆசனத்தை நோக்கி பெருந்தொகையான கூழ் முட்டைகள் எரியப்பட்டன. இதனால் குடையைப் பிடித்தவாறு சபாநாயகர் ஆசனத்தை நோக்கி வந்தார். உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சி வேட்பாளருமான டைமோ கொன்கோ கூறுகையில், உக்ரைன் கறுப்புக் பக்கத்துக்குச் சென்றுவிட்டது.

இது எமது நாட்டுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய அவமானம் எனத் தெரிவித்தார். எதிர்க்கட்சியை பொறுத்தவரை 2017ம் ஆண்டுவரைக்கும். இக்கால எல்லை நீடிக்கப்படுவதையே விரும்புகின்றனர். உக்ரைன் கொடிகளை எரித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்தை மிக மோசமாக விமர்சித்தனர். படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டதுடன் அரசாங்கம் விழிப்பாக இருந்தது.

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

பிரான்ஸ்:மஸ்ஜிதில் துப்பாக்கிச்சூடு

பாரிஸ்:தெற்கு பிரான்சில் இஸ்டர்ஸ் நகரில் அமைந்திருக்கும் மஸ்ஜித் ஒன்றின் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுத்தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

இத்துப்பாக்கிச்சூடுத் தொடர்பாக பிரான்ஸ் பிரதமர் முஸ்லிம் சமூகத்திற்கு முழு ஒத்துழைப்புதர உறுதிப்பூண்டுள்ளதாக தெரிவித்தார். ப்ரான்காயிஸ் ஃபில்லனின் அலுவலகம் முஸ்லிம் தலைவர்களிடம் தமது ஆழ்ந்த கவலையையும், ஆதரவையும் தெரிவித்துக் கொண்டது.

மஸ்ஜிதின் மீது நேற்று அதிகாலைக்கு முன்பு 30 தடவை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக போலீஸ் தெரிவிக்கிறது. கடந்த சனிக்கிழமை இரவு மார்சிலே என்ற தென் துறைமுக நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய (ஹலால்) இறைச்சி வியாபாரம் செய்யும் கடையின் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

பிரான்சின் அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும் ஒன்றிணைக்கும் அமைப்பின் தலைவர் முஹம்மது மூஸாவி இதுக்குறித்து தெரிவிக்கையில்; "மஸ்ஜிதில் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது மிகக்கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. பிரான்சின் ஊடகங்கள் இந்நிகழ்ச்சிக்கு பதிலாக ஒரு முஸ்லிம் நபர் பல பெண்களை திருமணம் செய்ததை பெரிதுப்படுத்துகிறது." என்றார்.

பிரான்சின் உள்துறை அமைச்சரும் அந்த நபர் பல தாரமணம் புரிந்திருந்தால் அவருடைய குடியுரிமை பறிக்கப்படும் என அச்சுறுத்தியுள்ளார்.

முஸ்லிம் சமூகத்தை நெருங்குவதற்கான முயற்சி தொடரும்

வாஷிங்டன்:முஸ்லிம் சமூகத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி தொடரும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார்.

வாஷிங்டனில் நடந்த 50 முஸ்லிம் நாடுகளிலிலுள்ள தொழிலதிபர்கள் மாநாட்டில் உரையாற்றினார் அவர். முஸ்லிம் உலகத்துடனான உறவை பலப்படுத்துவதற்காக கல்வித்துறையிலும், தொழில்துறையிலும் ஏராளமான திட்டங்களையும் அவர் அறிவித்தார்.

தீவிரவாதத்தை ஒழித்துவிட்டு பொருளாதார வளர்ச்சியை உறுதிச் செய்யவும் மத்திய ஆசியாவில் ஆசுவாசமான சமாதானத்தை நிறுவுவதிலும் அமெரிக்கா உறுதிப்பூண்டுள்ளதாகவும் ஒபாமா தெரிவித்தார்.

எந்த தடைகள் ஏற்பட்டாலும், இரு நாடுகளுக்கிமிடையே ஏற்றுக் கொள்ளத்தக்க சமாதான முயற்சிகள் தொடரும்.ஆனால், தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சமாதான பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்க புதிய முயற்சி தேவை என்றும் ஒபாமா தெரிவித்தார்.

இதுபோல் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும்,பாகிஸ்தானிலும் போராளிகளுக்கெதிரான போரை முடிவுக்கு கொண்டுவருவதிலும் அமெரிக்கா உறுதிப்பூண்டுள்ளது என்றும், போராளிகளை தனிமைப்படுத்துவதற்காக அமெரிக்க புதிய நட்புறவுகளை தேடுவதாகவும் ஒபாமா தெரிவித்தார்.

முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் பெண்களுக்கு அமெரிக்காவில் intern ஆக பணியாற்ற வாய்ப்பளிக்கப்படும் என ஒபாமா வாக்குறுதியளித்தார். கடந்த ஆண்டு கெய்ரோ பல்கலைக்கழகத்தில் ஒபாமா நடத்திய உரையில்;"முஸ்லிம்களும், அமெரிக்காவும் பரஸ்பர மதிப்பு ரீதியான புரிந்துணர்வுக் கொள்ளவேண்டும்" என கோரிக்கை விடுத்திருந்தார்

உமர் அல் பஷீர் மீண்டும் சூடான் அதிபராக

கார்த்தூம்:வடக்கு கிழக்கு ஆப்ரிக்க நாடான சூடானில் அதிபர் தேர்தலை எதிர்கட்சிகள் புறக்கணித்ததைத் தொடர்ந்து நேசனல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் உமர் அல் பஷீர் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உமர் அல் பஷீர் அதிபராக நீடிப்பார் என தேர்தல் நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் சூடான் தேர்தல் கமிஷன் சேர்மன் அபில் அலியர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

1,01,14,310 வாக்குகளில் 68 சதவீத வாக்குகளைப் பெற்ற பஷீர் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அதேவேளையில் சூடான் பீப்பிள்ஸ் லிபரேசன் மூவ்மெண்ட் தலைவர் ஸல்வா கீர் மாயார்டிட் தெற்கு சூடான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பகுதி சுய ஆட்சி மாகாணமான தெற்கு சூடானில் மட்டும் போட்டியிட்ட ஸல்வா 93 சதவீத வாக்குகளைப்பெற்று பெரும்பான்மையை நிரூபித்தார். பஷீருக்கு அடுத்த இடத்தைப்பெற்றவர் எஸ்.பி.எல்.எம் வேட்பாளர் யாஸிர் அர்மனாவார்.

முன்னாள் பிரதமரும் நேசனல் உம்மா கட்சியின் வேட்பாளருமான ஸாதிக்குல் மஹ்திக் 96,868 வாக்குகள் மட்டுமே பெற்றார். அதேவேளையில் சூடான் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் முஹம்மது இப்ராஹீம் அதிபர் தேர்தலில் மிகவும் பின் தங்கிவிட்டார். சூடானில் முதல் முறையாக பெண் வேட்பாளரான ஃபாத்திமா அப்துல் மஹ்மூதிற்கு 30,562 வாக்குகள் கிடைத்தன.

அதேவேளையில் மீண்டும் அதிபராக பொறுப்பேற்றுள்ள பஷீருக்கெதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தர்ஃபூர் போர் குற்றத்திற்கு கைது வாரண்ட் பிறப்பித்திருந்தது

ஈரானுக்கு எதிராக ஐநாவின் புதிய பொருளாதார தடைகளை விரைவாக அமல்படுத்த ஒபாமா



ஈரானுக்கு எதிராக ஐநாவின் புதிய பொருளாதார தடைகளை விரைவாக அமல்படுத்த வைப்பதில் அமெரிக்க அதிபர் ஒபாமா தீவிரமாக உள்ளதாக அமெரிக்க பொது விவகாரங்களுக்கான அமைச்சர் பி.ஜே.கிரவ்லி தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிரான தடைக்கு ஆதரவு திரட்டுவதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், கடந்த வார இறுதியில் பல்வேறு உலக தலைவர்களுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இத்தகவலை வாஷிங்டனில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்த அமெரிக்க பொது விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் பி.ஜே.கிரவ்லி, "ஈரானுக்கு எதிரான ஐ.நா. தடையை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக அமல்படுத்திட அதிபர் பராக் ஒபாமா விரும்புகிறார். இப்போதைக்கு இவ்விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளுடன் அமெரிக்கா தீவிரமாக பேசி வருகிறது" என்று தெரிவித்தார்.

திங்கள், 26 ஏப்ரல், 2010

பிரிட்டன் ஈரானுக்கு 650 மில்லியன் டாலர் திருப்பியளிக்க நீதிமன்றம் உத்தரவு

திஹேக்:1970களில் ஆயுத உடன்பாட்டில் நஷ்டஈடாக பிரிட்டன் 650 மில்லியன் டாலர் ஈரானுக்கு திருப்பியளிக்க வேண்டும் என தி ஹேக் நகரின் மத்தியஸ்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை உறுதிச் செய்த பிரிட்டன் அரசு நஷ்டஈட்டுத் தொகையை உடனடியாக வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. 1971 முதல் 1976 வரையிலான காலக்கட்டத்தில் ஈரானின் சர்வாதிகாரி ஷா பஹ்லவியின் அரசு 1500 போர் டாங்கிகளும், 250 ராணுவ வாகனங்களும் வாங்குவதற்கு பிரிட்டனுடன் ஒப்பந்தம் செய்திருந்தது.

ஆனால், பின்னர் இஸ்லாமிய புரட்சியின் காரணமாக ஈரானில் ஆட்சியில் அமர்ந்த புதிய அரசு அவ்வொப்பந்தத்தை ரத்துச் செய்துவிட்டு கொடுத்த பணத்தை திருப்பித்தர வேண்டும் எனவும் கோரியது.

இதனைத் தொடர்ந்த வழக்கில்தான் ஹேக் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு. 400 கோடி பவுண்ட் பிரிட்டீஷ் அரசு ஈரான் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உடனடியாக திருப்பியளிக்கும் என்று இண்டிபெண்டண்ட் இதழ் கூறுகிறது.

கடலுக்கடியில் கேபிளில் பழுது- இண்டர்நெட் சேவைகள் பாதிப்பு

தென்கிழக்கு ஆசிய நாடுகளை இந்தியா வழியாக ஐரோப்பாவுடன் இணைக்கும் கடலுக்கடியிலான இண்டர்நெட் கேபிளில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் பல நாடுகளில் இண்டர்நெட் சேவைகளில் ஒரு பகுதி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த கேபிள் சேவையை பாரதி ஏர்டெல், டாடா கம்யூனிகேசன் உள்பட 16 சர்வதேச தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இணைந்த அமைப்பு நடத்தி வருகிறது.

இத்தாலி அருகே கடலுக்கடியில் இந்த கேபிளில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கும் பணிகள் நடக்கவுள்ளதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளி்ல் இண்டர்நெட் சேவைகள் மேலும் பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

இந்த கடலடி இண்டர்நெட் கேபிளுக்கு சிங்கப்பூர், இந்தியா, மலேசியா, தாய்லாந்து, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு நாடுகள், செளதி அரேபியா, இத்தாலி, துனீசியா, அல்ஜீரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் டெர்மினல் ஸ்டேசன்கள் எனப்படும் மையங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஈராக் முன்னாள் துணை அதிபர் கைது

ஈராக்கின் முன்னாள் துணை அதிபர் இஸ்ஸத் இப்ராகிம் அல்-தெளரி கைது செய்யப்பட்டுள்ளார்.தூக்கிலிட்டு கொல்லப்பட்ட முன்னாள் அதிபர் சதாம் ஹூசேனின் உறவினரான இஸ்ஸத் இப்ராகிம், பாத் கட்சியின் துணைத் தலைவராகவும், நாட்டின் புரட்சிகரப் படை கவுன்சிலின் தலைவராகவும் இருந்தவர்.

அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளால் சதாமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது முதல் இவர் தலைமறைவாக இருந்தார். இவரை உயிரோடு அல்லது பிணமாகவோ பிடித்துத் தருபவர்களுக்கு பல மில்லியன் டாலர் பரிசை அறிவித்திருந்தது அமெரிக்கா.

இந்நிலையில் ஈராக்கின் வட கிழக்கு மாகாணத்தின் தலைநகரான தியாலாவில் உள்ள ஹம்ரின் மலைப்பகுதியில் ஒரு குகைக்குள் பதுங்கியிருந்த போது இவர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவருடன் அவரது ஆதரவாளர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க கோரிக்கையை ஏற்று சதாம் ஹூசேனின் மூத்த மகள் ரகத் ஹூசேனை தேடப்படுவோர் பட்டியலில் இன்டர்போல் சேர்த்துள்ளது. இதையடுத்து இப்போது ஜோர்டானில் உள்ள அவர் விரைவில் நாடு கடத்தப்பட்டு ஈராக் போலீசாரிடம் ஒப்படைக்கப்படலாம் என்று தெரிகிறது.

ஈராக் தீவிரவாதிகளுக்கு ரகத் ஆதரவு அளித்து வருவதாக அமெரிக்க ஆக்கிரமிப்புக் கூட்டுப் படையினரும் ஈராக்கிய போலீசாரும் குற்றம் சாட்டியதையடுத்து இன்டர்போல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஜோர்டான் மன்னரின் ஆதரவுடன் சதாம் ஹூசேனின் குடுமபம் அங்கு அடைக்கலம் அடைந்து வாழ்ந்து வருகிறது

அமெரிக்காவின் மிஸிஸிபி மாகாணத்தில் வீசிய சூறாவளியில் சிக்கி 10 பேர் பலி

அமெரிக்காவின் மிஸிஸிபி மாகாணத்தில் வீசிய சூறாவளியில் சிக்கி 10 பேர் பலியானார்கள்.உயிரிழந்தவர்களில் 3 பேர் குழந்தைகள் ஆவர். 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

வீடுகள், வர்த்தக நிறுவனங்களின் மேற் கூரைகள் பிய்த்து எறியப்பட்டன. கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் தூக்கி வீசப்பட்டன. மரங்கள் அடியோடு பெயர்த்து எறியப்பட்டதால் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாக்டாவ் என்ற பகுதியில் 5 பேரும், யாஸூ நகரில் 4 பேரும், ஹோம்ஸ் பகுதியில் ஒருவரும் சூறாவளிக்கு உயிரிழந்தனர்.

சூறாவளிக்கு யாஸூ நகர் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. மிஸிஸிபி மாகாணத்தில் 15 நகரங்கள் சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன

எகிப்தில் அடுத்த வருடம் தேர்தல் ;

அவசர காலச் சட்டம் நீடிக்கப்படமாட்டாது
ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் திட்டவட்டமாகத் தெரிவிப்பு

எகிப்தில் 2010ம் ஆண்டு தேர்தல் நடைபெறும் என அந்நாட்டின் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் தெரிவித்தார். விசேட வைபவ மொன்றில் சென்ற சனிக்கிழமை உரையாற்றிய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் இதனை தெரிவித்தார்.
விசேட வைபவமொன்றில் சென்ற சனிக்கிழமை உரையாற்றிய ஜனாதிபதி ஹொப்னி முபாரக் 2011ம் ஆண்டு தேர்தல் இடம் பெறும் வெளிநாடுகளின் தலை யீடுகள் அனுமதிக்கப்பட மாட்டாது. எதிர்க்கட்சிகள் கூறுவதைப் போல அரசியமைப்பு மாற்றம் செய்யப்பட மாட்டாதென தெரிவித்தார்.
1981ம் ஆண்டிலிருந்து எகிப்தின் ஜனா திபதியாக ஹொஸ்னி முபாரக் பதவி வகிக்கின்றார். 82 வயதான இவர் அண்மையில் பிரிட்டன் சென்று சிகிச்சை பெற்று வந்தார். எனினும் அடுத்த ஆண்டு நடை பெறவுள்ள தேர்தலில் போட்டி யிடும் நோக்கம் ஹொஸ்னி முபா ரக்கிற்குண்டென்பது அவரின் பேச்சிலிருந்து தெளிவாகியது.
இது வரைக்கும் உதவி ஜனாதிபதி ஒரு வரை ஹொஸ்னி முபாரக் நியமிக்கவில்லை. 2005 ஆம் அண்டு இவரது மகன் உதவி ஜனாதி பதியாக நியமிக்கப்படுவாரெனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இவர் மீண்டும் போட்டியிட விரும் புவதையே இந்நடவடிக்கை காட்டு வதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எகிப்தின் சினாய் பகுதியிலிருந்து இஸ்ரேல் இரா ணுவம் வெளியேறிய 28 ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய் யப்பட்ட வைபவத்திலே ஹொஸ்னி முபாரக் உரையாற்றினார். அவசர காலச் சட்டத்தையும் நீக்க முடியா தென ஹொஸ்னி முபாரக் தனதுரை யில் குறிப்பிட்டார்.
அரசிய லமை ப்பை மாற்றி அவசர காலச் சட்ட த்தை நீக்கினால் மாத்திரமே தேர்த லில் போட்டியிடலாம் என எதிர்க் கட்சிகள் அடம்பிடிக்கின்றன. எகிப் தின் தற்போதைய அவசர காலச் சட்டம் 1981ம் ஆண்டு அமுலுக்கு வந்தது எகிப்தின் அப்போதைய ஜனாதிபதி அன்வர் சதாத் படுகொலை செய்யப்பட்ட பின் இச்சட்டம் அமுலாக்கப்பட்டது. இஸ்ரேலுடன் இரண்டு வருட சமாதான ஒப்பந்தம் செய்யப் பட்டதால் அன்வர் சதாத் படு கொலை செய்யப்பட்டார்

சனி, 24 ஏப்ரல், 2010

ஈரான் சிறையிலிருக்கும் அமெரிக்கர் மூவரை விடுவிக்க வலியுறுத்தல்

வாஷிங்டன்:ஈரானால் சிறை வைக்கப்பட்டுள்ள மூன்று அமெரிக்கர்களை உடனடியாக அந்நாட்டு அரசு விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் கூறியதாவது;

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஈரான் நாட்டுக்குள் சட்டவிரோதமாக வந்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் இது குறித்து அவர்கள் மீது முறையான குற்றச்சாட்டு எதையும் ஈரான் அரசு பதிவு செய்யவில்லை. இந்நிலையில் கடந்த ஒன்பது மாதங்களாக அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அவர்கள் உடல் நிலை பாதிப்படைந்து வருகிறது. எனவே, அவர்கள் மூவரையும் விடுவித்து, சொந்த நாட்டுக்கு அவர்கள் திரும்புவதற்கு ஈரான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

ஈரான் ஜிம்பாவே இடையே அறிவியல்,தொழில்நுட்பம் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்து

ஆப்ரிக்கா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத், கடந்த வியாழனன்று ஜிம்பாவே சென்றிருந்தார். அப்பொழுது இரு நாடுகளுக்கிடையே ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

அறிவியல்,சுற்றுலா,தொழில்நுட்பம், இளைஞர் விவகாரங்கள், போக்குவரத்து, விமானப் போக்குவரத்து மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இவ்விரு நாடுகளுக்கிடையே உடன்பாடுகள் கையெழுத்தாயின.

மேலும்,ஈரானின் ஏற்றுமதி உத்திரவாதம் மற்றும் ஜிம்பாவே நிதி அமைச்சகத்திற்கிடையே விஞ்ஞானம்,நாகரீகம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு போன்ற பல ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டுள்ளன.

இதற்கிடையே, ஈரானின் 3 நிறுவனங்கள் சேர்ந்து தயாரித்த டிராக்டர் பிரிவு கலையை ஜிம்பாவே அதிபர் ராபர்ட் முகாபே பார்வையிட்டார். இதை ஜிம்பாவேயில் தொடங்கி வைக்கும் வகையில், விழாவில் ஈரான் அதிபர் ஜிம்பாவே அதிபரிடம் டிராக்டரின் ஸ்விட்சை ஒப்படைத்தார்