செவ்வாய், 20 ஏப்ரல், 2010

கிறிஸ்தவ பாதிரிகளின் பாலியல் சேட்டைகள்:

லத்தீன் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் கூடுதல் தகவல்கள்
ஸாவாபோலா:12 வயது வரையிலான சிறுவர்களை பாலியல் தொந்தரவுச் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு பிரேசிலில் 83 வயது பாதிரியார் ஒருவரை கைது செய்ததன் மூலம் லத்தீன் அமெரிக்காவில் கிறிஸ்தவ பாதிரிகளின் பாலியல் பலாத்காரம் தொடர்பான மேலும் செய்திகள் வெளிவந்துள்ளன.

மோன்ஸித்தர் லூயிஸ் மார்க்கோஸ் பார்போஸாயிக்கும் மேலும் இரண்டு பாதிரியார்களுக்கும் எதிராக வெளிவந்த பாலியல் சேட்டைத் தொடர்பான ஆதாரப்பூர்வமான செய்திகள் பிரேசிலில் சூறாவளியை கிளப்பியுள்ளது.

ஏற்கனவே ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் கத்தோலிக்க பாதிரிகளின் பாலியல் சேட்டைகளைக் குறித்த செய்திகள் பரவிவரும் சூழலில் லத்தீன் அமெரிக்காவும் விதிவிலக்கல்ல என்பது பிரேசிலிலிருந்து வெளிவரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

பார்போஸாவுக்கும் 19 வயதுடைய இளைஞருக்கும் இடையேயான படுக்கையறைக் காட்சிகளை எஸ்.பி.டி தொலைக்காட்சி கடந்த மாதம் ஒளிப்பரப்பியதைத் தொடர்ந்து பாதிரிகள் குறித்த சர்ச்சைகள் பிரேசிலில் துவக்கம் குறித்தன. இச்செய்தி இணையதளத்தில் பரவலாக வெளியானது.

2009 ஜனவரியில் பதிவுச்செய்த வீடியோதான் அது என எஸ்.பி.டி தொலைக்காட்சி தெரிவித்தது. பார்போஸாவுடன் படுக்கையறையை பகிர்ந்துக்கொண்ட 19 வயது இளைஞன் அவருடன் 4 ஆண்டுகள் சர்ச்சில் பணியாற்றியுள்ளான். புலன் விசாரணை நடத்தியதில் பார்போஸா ஏராளமான சிறுவர்களை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. வழக்கு தற்பொழுது நீதிமன்றத்தில் உள்ளது. இருபதிற்குமேற்பட்ட சாட்சிகளி விசாரணைச்செய்ததில் பார்போஸாவும் இதர இரண்டு பாதிரிகளும் பணமும், ஆடைகளும் இதர அன்பளிப்புகளும் வாக்களித்து 12 வயது சிறுவர்களைக்கூட பாலியல் பலாத்காரத்திற்கு ஆட்படுத்தியதாக கண்டறியப்பட்டது.

மூன்று பாதிரிகளையும் வெளியேற்றிய கிறிஸ்தவ சபை விசாரணையை துவக்கியுள்ளது. பார்போஸாவும் இதர இரண்டு பாதிரிகளும் எங்கு வேலைப்பார்த்தனர் என்பதுக் குறித்து தகவலை கிறிஸ்தவ சபை வெளியிடவில்லை.

லத்தீன் அமெரிக்காவில் கிறிஸ்தவ பாதிரிகளுக்கு எதிராக சமீபத்தில் ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த மாதம் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ஒரு பாதிரியார் தப்பி ஓடினார். பொலிவியாவில் இவர் மூன்று சிறுவர்களை பாலியல் வன்புணர்வுச் செய்ததாக ஒரு கன்னியாஸ்திரி புகார் கூறியிருந்தார்.சிலி நாட்டில் வயதுக்கு வராத எட்டு சிறுமிகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கியதாக பாதிரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ஒரு சிறுமி கர்ப்பிணியானார்.

ஒரு ஆர்தோடக்ஸ் கத்தோலிக்க சபையின் ஸ்தாபகரான பாதிரியார் தனக்கு அவர் மூலம் பெற்ற இரண்டு சிறுவர்களில் ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கியதாக மெக்சிக்கோவைச் சார்ந்த பெண்மணி கடந்த மார்ச் மாதம் குற்றச்சாட்டை எழுப்பியிருந்தார்.

பல்வேறு நாடுகளில் பாலியல் குற்றச்சாட்டுகளின் காரணமாக பல பாதிரியார்களையும் ட்ரான்ஸ்ஃபர் அல்லது வேறு நாடுகளுக்கு அனுப்பிய 30க்கும் மேற்பட்ட சம்பவங்களை கண்டறிந்ததாக அசோசியேட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் பலரும் இதர நாடுகளிலும் தங்கள் பாலியல் சேவையை தொடர்கிறார்கள்.

பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த சூழலில்தான் போப்பின் அடுத்த இடத்திலிருக்கும் கர்தினால் டார்சிசியோ பெர்டோனின் அறிக்கை சர்ச்சையை கிளப்பியது. பாதிரிகளின் பாலியல் சேட்டைகளுக்கு காரணம் திருமணம் முடிக்காத துறவறம் காரணமல்ல எனவும் ஓரினச்சேர்க்கை மீதான ஈடுபாடுதான் என்றும் அவர் கூறியதற்கு ஓரினச்சேர்க்கையாளர்கள் என்ற இயற்கைக்குமாறான உறவை மேற்க்கொள்ளும் மாபாதகச் செயலை புரிவோரின் கூட்டமைப்பு தமது எதிர்ப்பை தெரிவித்தது

அரைகுறை ஆடைகளை அணிவதாலும் கண்மூடித்தனமான உறவுகள் வைப்பதனாலும் பூகம்பங்கள் ஏற்படுகின்றன - ஈரான் உலமா

பெண்கள் அறைகுறையாக அணியும் ஆடைகள், மார்க்கத்திற்கு புறம்பான வகையில் கண்மூடித்தனமாக ஆண்களிடம் உறவுகளை பேணும் பெண்களினால் தான் பூகம்பங்கள் ஏற்படுகின்றன என்று ஈரான் நாட்டின் மூத்த உலமா ஒருவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஈரான் அதிபர் அஹ்மத்நிஜாத், மிகப்பெரிய பூகம்பம் ஒன்று விரைவில் தெஹரானை தாக்கவுள்ளது, அதனால் தெஹ்ரானில் வாழும் 12 மில்லியன் மக்கள் தங்கள் வசிப்பிடத்தை மாற்றுமாறு கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை குத்பாவில் உரையாற்றிய இந்த உலமா, நிறைய பெண்கள் அடக்கமாக ஆடைகளை அணிவதில்லை. இது ஆண்களை வழிதவறச் செய்கிறது, தங்கள் மானத்தை காப்பாற்ற தவறிவிட்டார்கள், விபச்சாரத்திலும் ஈடுபடுகிறார்கள். இதனால் இன்றைய நாட்களில் பூகம்பங்கள் போன்ற இயற்க்கை சீற்றங்கள் அதிகம் நிகழ்கின்றன என்றார்.

ஈரானிய இஸ்லாமிய நாட்டில் வாழும் பெண்கள் தங்கள் ஆடைகளை தலையிலிருந்து பாதம்வரை மறைத்திருக்க வேண்டும். ஆனால் நிறைய பெண்கள் குறிப்பாக இளைஞிகள் இஸ்லாத்தை பின்பற்றுவதில்லை என்றும், மிகவும் இறுக்கமான ஆடைகளை அவர்கள் அணிவதாகவும், தலைஅணிகள் பாதி இழுத்தபடி அனைத்து உரோமங்களை காட்டும் படி நடப்பதால் இறைவனின் கோபப்பார்வையினால் பூகம்பங்கள் ஏற்படுகின்றன என்றார்.

மண்ணிற்குள் புதைவதில் இருந்து நாம் எப்படி தப்ப முடியும்? இறைவனிடம் மன்னிப்பு கேட்டு தஞ்சம் அடைவதும் , இஸ்லாமிய முறைப்படி நம் வாழ்க்கையை அமைப்பதும் தவிற வேறு எந்த வழியும் இல்லை என்றார் அந்த உலமா.

ஒரு உயர்ந்த பண்டிதர் எனக்கு சொல்லி இருந்தார், மக்கள் அனைவரும் தம்மை படைத்தவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இயற்கை சீற்றங்கள் நம்மை நெருங்குகின்றன என்று! தெஹ்ரானை ஒரு பூகம்பம் தாக்கும் பட்சத்தில் இறைவனின் அருள் மட்டும்தான் அதை எதிர்கொள்ள உதவும், ஆதலால் நாம் நம் இறைவனை ஏமாற்றமடையச் செய்ய வேண்டாம் என்று தன் ஜும்மா உரையை முடித்தார் காஸிம் சேதுகி என்ற அந்த உலமா.

ஈரானின் ஒரு அமைச்சர் கூறுகையில், மன்னிப்பும் இறைவனை துதி செய்வதும் தான் இது போல பூகம்பங்களை சமாளிக்கும் சூத்திரமாகும் என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் நம்மால் பூகம்பத்தை நிறுத்த எந்த ஒரு கருவியையும் உருவாக்க முடியாது. மாறாக அது இறைவனின் சட்டகம், அதிலிருந்து தப்பிக்க இறைவனை வணங்க வேண்டும், பாவங்களை தவிர்க்க வேண்டும், பாவ மன்னிப்பை கோர வேண்டும், தருமம் செய்ய வேண்டும் மற்றும் தன்னை சுயமாக இறைவனின் பாதையில் அர்ப்பணிக்க வேண்டும் என்றார் மஹ்ஸூலி.

முன்னதாக, பெரிய வகையான பூகம்பம் ஒன்று தாக்கவுள்ளதாக ஆராய்ச்சி நிபுனர்கள் அரசிற்கு எச்சரிகை விடுத்திருந்தனர். 2003ஆம் ஆண்டில், ஈரானின் பாம் என்ற இடத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் சுமார் 31,000 உயிர்கள் மாண்டன. பாமின் ஜனத்தொகையின் கால்வாசி தொகை அது. பழைய கலாச்சார சின்னங்கள் அனைத்தும் அளிந்தன.

யு.ஏ.யில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த பெண்ணுக்கு மரணதண்டனை

ஐக்கிய அரபு அமீரகத்தில் போலீஸ் துறையில் பணியாற்றிய தனது கணவரை,பெண் ஒருவர் தனது கள்ளக் காதலர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தார். இந்த சம்பவம் 2003-ம் ஆண்டு நடைபெற்றது. இதையடுத்து அவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டு ஷார்ஜா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக விசாரித்து வந்த நீதிமன்றம் 4பேருக்கும் இவ்வழக்கில் மரணதண்டனை பிறப்பித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அவர்கள் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர்களின் மரணதண்டனையை உறுதி செய்தது.

கொலை நடந்து 7 ஆண்டுகளுக்கு பின்னர் குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனை நிறைவேற்றப்பட்டால் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே மரணதண்டனை பெறும் முதல் பெண் இவர்தான்.

இஸ்லாமிய சட்டப்படி, மரணதண்டனை குற்றவாளிகளை பாதிக்கப்பட்டோரின் நெருங்கிய உறவினர் மன்னித்துவிட்டால் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை ரத்து செய்யப்படும்.

ஆனால், தற்போது மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளையும் மன்னிக்க முடியாது; அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று கொலையுண்டவரின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

இதனால் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை விலக்கிக் கொள்ள எவ்விதத்திலும் வாய்ப்பில்லை. அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதி என ஐக்கிய அரபு அமீரக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தீவிரவாத இஸ்ரேலிற்கு எப்போதும் அமெரிக்கா துணை நிற்கும் – ஹிலாரி கிளிங்டன்.

வாஷிங்டன்:இஸ்ரேலிற்க்கு நாங்கள் அளித்து வரும் ஆதரவும், பாதுகாப்பும் எந்த சூல்நிலையிலும் வாபஸ் பெற மாட்டா என்று அமெரிக்க செயலாளர் ஹிலாரி கிளிங்டன் தெரிவித்துள்ளார்.அதிபர் ஒபாமா மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூவிற்க்கும் இடையே சில பிரச்சனைகள் இருந்தாலும், யு.எஸ் உங்களுக்காக என்றும் முன்னிற்க்கும்! உங்கள் இடர்களில் பங்குகொள்ளும்! உங்களின் தோல்களில் உள்ள சுமையை பகிர்ந்துக் கொள்ளும்! இரு நாடுகளும் தங்களுடைய எதிர்காலத்தை சேர்ந்தே சந்திக்கும்!" என்று இஸ்ரேலின் 62ஆம் ஆண்டு விழாவில் கிளிங்டன் சூளுரைத்தார்.


"எனக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஒரு ஆழமான தனிப்பட்ட கடமை ஒன்றுள்ளது. ஆகவே, அது ஒபாமாவிற்க்கும் பொருந்தும். இஸ்ரேலுக்கெதிராக பல சவால்கள் இன்றுள்ளன. ஆனாலும், அது தன் வாக்குறுதிகளை இதுவரை இல்லாதவாறு பேணிவருகிறது" என்றார். அவர் மேலும் கூறுகையில், "இஸ்ரேல் மற்றும் ஃபலஸ்தீன நாட்டின் பிரச்சனைகளை தீர்த்தால், மத்திய கிழக்குகில் அமைதி ஏற்படுத்தும் என்ற ஒபாமா அரசின் நம்பிக்கை இன்னும் சாத்தியம்தான்" என்று தெரிவித்தார்.

"1948ல், வெறும் 11 நிமிடத்தில் அப்போதைய ஜனாதிபதி எடுத்த முடிவுதான் இன்று இஸ்ரேல் என்ற நாடு உருவாக காரணம்" என்று நினைவு கூர்ந்தார்.மேலும் "அன்றிலிருந்து இன்றுவரை, உங்களுடன் யு.எஸ் ஒற்றுமையோடுள்ளது" என்றார் கிளிங்டன். ஆனால், கடந்த மார்ச்சில் யு.எஸ் துணை ஜனாதிபதி பிடேன் இஸ்ரேல் சென்றபோது இஸ்ரேல் 1600 குடியேற்ற்ங்கள் கொண்ட யூத விரிவாக்கத்தை அறிவித்தது. இதை கிளிங்டன், அமெரிக்காவை அவமானப்படுத்துகிற செயல் என்றும் சாடிருந்தார்.இந்த வருடம் அமெரிக்கவிற்கும் இஸ்ரேலிற்க்கும் இடையே ஏற்பட்ட பல பிரச்சனைகளுக்கு மத்தியில், கிளிங்டனின் இந்த புகழாரம் இஸ்ரேல்-அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மேலும் வலுபடுத்தும் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர்.
Read more...

ஆன்மீகத் தலைவர்: ஜனநாயம், மனித உரிமைகள் பற்றிப் பேசும் நிலையில் அமெரிக்க அரசு இல்லை



அரசியல் குழு: நவ்ரூஸ் வைபவம் மற்றும் ஈரானிய புதுவருடப் பிறப்பு என்பவற்றையொட்டி நிகழ்வின் போது, ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யித் அலி காமெனயி அவர்கள், மஷ்ஹத் மக்களையும், இமாம் ரிஸா (அலை) அவர்களின் புனித அடக்கஸ்தலத்தையும் தரிசித்தார்.

இச்சந்திப்பனி போது உரையாற்றிய ஆயத்துல்லாஹ் காமெனயி அவர்கள், ஜனநாயம் மற்றும் மனித உரிமைகளை ஆதரிப்பதாகக் கூறிக் கொள்ளும் அமெரிக்காவின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்தார். ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கா மேற்கொண்ட அழிவு நடவடிக்கைகள், காஸாவில் இஸ்ரேலின் வன்முறைகளுக்கு அது வழங்கிய ஒத்துழைப்புகள் என்பவற்றின் அடிப்படையில், ஜனநாயகம் பற்றியொ மனித உரிமைகள் பற்றியோ பேசுவதற்கு அமெரிக்காவுக்கு எவ்வித அருகதையும் கிடையாது என அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய ஆன்மீகத் தலைவர், ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் நான்காவது தசாப்தத்தில் காலடி எடுத்து வைக்கும் நாம், நாட்டின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளும் அர்ப்பணிப்புகளும் அதிகமுள்ளன எனத் தெரிவித்தார். கடந்த தேர்தலின் பின்னரான வன்முறைகளையும் எதிரிகளின் திட்டமிட்ட சதிகளையும் முறியடிப்பதில் ஈரானிய மக்கள் காட்டிய விசுவாசத்தையும் ஈரான் தேசத்தின் ஒற்றுமையையும் சிலாகித்த அவர், இத்தகைய உறுதியான நிலைப்பாடு தொடர்ந்திருக்க வேண்டுமெனவும் அப்போதே ஈரானை முன்னணி வல்லரசு நாடொன்றாக மாற்றியமைக்க முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆயத்துல்லாஹ் காமெனயி அவர்கள் தொடர்ந்து உரையாற்றும் போது, ஈரான் இஸ்லாமியக் குடியரசு, இறைநம்பிக்கையையும் நபிகளாரின் போதனைகளையும் அடிப்படையாகக் கொண்டது. இறைநம்பிக்கையும் இஸ்லாமியப் போதனைகளும் மனித வாழ்க்கையில் ஒழுக்க விழுமிய வளர்ச்சிக்கும், சடவாதத் தூய்மைக்கும் உயர்ந்த மனப்பக்குவத்திற்கும் பிரதான காரணமாக அமையும். இதன் காரணமாகவே இஸ்லாமியக் குடியரசு இஸ்லாமியப் போதனைகளையும் கோட்பாடுகளையும் தனது அடிநாதமாகக் கொண்டுள்ளது என்றார்.

பன்மடங்கு உறுதிக்கும் உழைப்புக்குமான ஆண்டு' எனப் பெயரிடப்பட்டுள்ள ஈரானியப் புதுவருடம் பற்றிக் குறிப்பிட்ட அவர், இவ்வாறு ஒவ்வொரு வருடத்திற்கும் பெயரிடுவது வெறுமனே வைபவங்களை சிறப்பிப்பதற்காக அல்ல என்றும், சமகாலப் பிரச்சினைகள் அவற்றின் முக்கியத்துவங்கள், அவற்றுக்கு தீர்வு காண வேண்டிய நிர்ப்பந்தங்கள் மற்றும் தேவைகள் என்பவற்றைக் கருத்திற் கொண்டே இவ்வாறு யெரிடப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.

கடந்த வருடத்தில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் அறிவியலாளர்கள் ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்துப் பேசிய அவர், இப்பணிகள் நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்களிப்புச் செய்துள்ளன எனவும், பிரதான குறிக்கோளை அடையும் பாதையில் அவை ஊக்குவிப்பை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.

அறிவைப் பெறுவதும், ஆய்வுகளை மேற்கொள்வதும் மட்டும் மனித சமூகத்தின் கடமையல்ல, குறிக்கோள்களை அடைவதற்கான வழிகளுமல்ல. மாறாக, ஆய்வு நிலையங்களும் கல்லூரிகளும் இவ்விடயத்தில் மிகவும் பொறுப்புடனும் தூரநோக்குடனும் தமது பாதையை வகுத்துச் செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் நிருவாக மற்றும் சட்ட சபைகள், இவ்வருடத்தின் கருப்பொருளின் படி செயற்படவும் அதற்கான குறிக்கோளை அடையும் பணியில் முழுமூச்சுடன் ஈடுபடவும் தயாராக இருக்கும் என உறுதி கூறியதுடன், நிருவாகத்துறையானது, நாட்டின் அனைத்து நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் என்பவற்றையும் அவற்றுடன் தொடர்புடைய அனைத்துத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் என்றார். நிருவாகத்தின் இப்பணிகளின் போது, சட்டசபை தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆக்கபூர்வமான சிந்தனைகளை உருவாக்குதல், நூல்களை வாசித்தல் மற்றும் பொது அறிவை வளர்த்தல் என்பன நாட்டுக்கு அவசியமாகவுள்ள ஏனைய துறைகளாகும் என அவர் அடையாளப்படுத்தினார்.

பன்மடங்கு உறுதிக்கும் உழைப்பு என்பவற்றின் போது தேவைப்படும் மற்றொன்று வறுமை, ஊழல், மற்றும் அநீதி என்பவற்றுக்கெதிரான சண்டையாகும். அடிப்படைக் குறிக்கோளை அடைவதில் ஒவ்வொருவரும் தளராத அயராத முயற்சியை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டில் காணப்பட்ட அசம்பாவிதங்களுக்குக் காரணமாக அல்லது ஒத்துழைப்பாக செயற்பட்டவர்கள் தமது தவறுகளை உணர்ந்து நாட்டின் அபிவிருத்தியிலும் வளர்ச்சியிலும் தமது மனப்பூர்வமான பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்க முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

சர்வதேச விவகாரம் பற்றி தொடர்ந்து கருத்துரைத்த அவர், அமெரிக்கர்கள், ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் உள்ள அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று வருவதுடன், காஸாவிலுள்ள பலஸ்தீன சிறார்களைக் கொலை செய்யும் இஸ்ரேலின் திட்டங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன. இவற்றையெல்லாம் செய்து கொண்டு மனித உரிமைகளுக்கு தாம் ஆதரவு வழங்குவதாகவும் காட்டிக் கொள்கின்றனர் எனச் சாடினார்.

அமெரிக்க அரசு, ஜனநாயகம் பற்றியோ மனித உரிமைகள் பற்றியோ பேசுவதற்கு எவ்விதத் தகுதியும் அற்றது என்பதை தற்கால யதார்த்தம் நிரூபித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆயத்துல்லாஹ் காமெனயி அவர்கள் தொடர்ந்து குறிப்பிடும் போது, ஈரான் இஸ்லாமியக் குடியரசை நிர்மூலமாக்குவதற்காக முயற்சிகளை மேற்கொண்டு வரும் எதிரிகளும் அரக்கர்களும், தமது எத்தகைய நிர்ப்பந்தங்களையும் இஸ்லாமியக் குடியரசு நிராகரித்து விடும் என்பதை உணர்ந்து கொண்டுள்ளார்கள். இத்தகைய நயவஞ்சகர்களிடம் தனது பாதுகாப்பையும் ஒப்படைக்க ஈரான் ஒரு போதும் தயாராக அளவுக்கு, அ துநன்கு விழிப்புணர்வுடன் இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்

குத்ஸ் நகரில் சியோனிச அரசு

அரசியல் குழு: லெபனான்-பலஸ்தீன் அரசியல் சமூக அமைப்பின் உத்தியோகபூர்வ ஒன்றுகூடல், ஏப்ரல் ஐந்தாம் திகதி சாயிதா லெபனானில் இடம்பெற்ற போது, புனித குத்ஸ் நகரில் சியோனிச அரசு மேற்கொண்டு வரும் சட்டவிரோத அகழ்வுகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.


லெபனானில் இயங்கும் இக்னா செஸ்திக் கிளை தெரிவிப்பதாவது, இவ்வொன்றுகூடலில் பலஸ்தீனிலும் லெபனானிலும் நடைபெறும் சமகால அரசியல் நிலவரங்கள் குறித்தும், சியோனிச அரசினால் முன்வைக்கப்படுகின்ற அச்சுறுத்தல்கள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

கலந்து கொண்டோர் ஓர் அறிக்கையை வெளியிட்டனர். சியோனிச அரசின் வன்முறைகளுக்கும் கொடுமைகளுக்கும் ஆதரவு வழங்கி வரும் ஐக்கிய அமெரிக்காவினது நடவடிக்கைகளையும், இவ்விறுக்கமான அரசியல் சூழ்நிலையிலும் மௌனம் சாதிக்கும் அரபுலகத்தின் கையாலாகாத்தனத்தையும் அவ்வறிக்கை கடுமையாக விமர்சித்திருந்தது.

பலஸ்தீன மக்களது உரிமைகளைப் பாதுகாப்பதில் துருக்கியின் ஆதரவு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவ்வறிக்கை, நடைபெற்ற அரபு உச்சிமாநாட்டில் புனித குத்ஸ் விவகாரம் தொடர்பான எடுக்கப்பட்ட தீர்மானங்களை அமுல்படுத்த முடியாமல் போயுள்ளமை குறித்து கவலையும் வெளியிட்டுள்ளது.

பலஸ்தீன விடுதலை இயக்கங்கள், இஸ்ரேலின் சியோனிசக் கொடுமைகளுக்கு தலைசாய்க்காமல் தொடர்ந்தும் தமது முயற்சிகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் அவ்வொன்றுகூடலில் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் தேசிய குர்ஆன் மனனப் போட்டி புதன்கிழமை ஆரம்பம்
சர்வதேச குழு: மலேசிய இஸ்லாமிய அபிவிருத்தித் திணைக்களம், மலேகா அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன், எதிர்வரும் 21 தொடக்கம் 25 வரை, மலேகா சர்வதேச வர்த்தக நிலையத்தில், 31ஆவது தேசிய மட்ட குர்ஆன் மனனப் போட்டியை ஒழுங்கு செய்யவுள்ளது.


திணைக்களத்திலிருந்து விடுக்கப்பட்ட அறிக்கையொன்று குறிப்பிடுவதாவது, இப்போட்டி மூன்று மட்டங்களாகப் பிரிக்கப்படும். முதல் மட்டம் (ஜுஸ்உ 1 தொடக்கம் 10), இரண்டாம் மட்டம் (ஜுஸ்உ 1 தொடக்கம் 20), மூன்றாம் மட்டம் (ஜுஸ் 1 தொடக்கம் 30) என்பவையாகும்.

ஒவ்வொரு மாகாணமும், மாகாண மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய, ஏழுக்கும் 25க்கும் இடைப்பட்ட வயதுடைய, மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்களாக ஆறு பேரை தமது மாகாணத்தின் சார்பாக இந்த தேசிய மட்டப் போட்டிக்கு அனுப்ப முடியும்.

தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டுவோருக்கு பணப்பரிசும், ஹஜ் உம்ரா வாய்ப்பும் வழங்கப்படுவதுடன், பங்குபற்றிய அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும். மூன்றாம் மட்டத்தில், பணப்பரிசு சுஆ. 10,000, இரண்டாம் மூன்றாம் மட்டங்களில் பணப்பரிசுகள் முறையே சுஆ. 6,000 மற்றும் சுஆ. 4,000 ஆகும்.

உம்மாஹ்வின் உறவுகளையும் சக்தியையும் வலுப்படுத்தல் எனும் கருப்பொருளிலான இப்போட்டி, ஏப்ரல் 21ம் திகதி, மலேக்கா முதலமைச்சர் டதுக் செரி முஹ்த் அலி ருஸ்தாமினால் ஆரம்பித்து வைக்கப்படும்.

லிபிய பல்கலைக்கழக மாணவர்களுக்கான குர்ஆன் மனனம்

சர்வதேச குழு:பல்கலைக்கழக மாணவர்களுக்கான குர்ஆன் மனனம் மற்றும் தஜ்வீத் என்பவற்றுக்கான பத்தொன்பதாவது வருடாந்த போட்டி, நேற்றுக் காலை லிபியாவின் தலைநகர் தராபல்ஸ்சிலுள்ள அல்பாதிஹ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பமானது.


அல்பஜ்ருல் ஜதீத் தினசரியின் தகவலின்படி, இப்போட்டி, கலை, விஞ்ஞான, சிந்தனை ரீதியான கருப்பொருள்களில், பல்கலைக்கழக மாணவர்களுக்காக வருடாந்தம் நடைபெற்று வருகின்ற முக்கிய போட்டியொன்றாகும்.

இப்போட்டியுடன் இணைந்ததாக, விசேட கண்காட்சியொன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில், லிபியாவின் பல பகுதிகளிலுமுள்ள பல்கலைக்கழகங்களின் மாணவர்கள், பல்வேறு துறைகளிலான தமது படைப்புகளையும் பொருட்களையும் காட்சிக்கு வைப்பர். குறிப்பாக, பலஸ்தீன் தொடர்பான காட்சிகள் அடங்கிய புகைப்படக் கண்காட்சியொன்றும் விசேடமாக இடம்பெறும்.

குர்ஆன் மனனம், மற்றும் தந்வீத் என்பவை தொடர்பான இப்போட்டி, லிபியாவின் பல்கலைக்கழக மாணவர்களிடையே மிகவும் பிரபல்யம் பெற்ற போட்டியென்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்லாந்தில் உள்ள எரிமலையொன்று வெடித்து

ஐஸ்லாந்தில் உள்ள எரிமலையொன்று வெடித்து தொன் கணக்கில் புகையை கக்கத் தொடங்கியிருப்பது இன்று முழு உலகையும் அதிரவைத்துள்ளது. 11 கிலோ மீற்றர் உயரத்துக்கு புகையும் சாம்பலும் பரவியுள்ளதால் ஐரோப்பிய நாடுகளில் மட்டுமன்றி ஏனைய நாடுகளிலும் விமானச் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

இந்த எரிமலை இதற்கு முன் கி.பி. 921 மற்றும் 1612, 1812-13 ஆகிய ஆண்டுகளில் வெடித்துள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஐஸ்லாந்தில் 35 எரிமலைகள் உள்ளன. அவற்றில் வெடித்துப் புகையைக் கக்கிக் கொண்டிருக்கும் ஈயபியலக்யுக் எரிமலையைவிட பெரிய எரிமலைகளும் இருக்கின்றன.

1783 - 85 ஆம் ஆண்டு வரை லாவாக் எனும் எரிமலை வெடித்து ஐஸ்லாந்தின் கால்வாசி மக்களை காவு கொண்டதாக வரலாறு கூறுகிறது. ஆனால் ஈயபியலக்யுல் எரிமலையினால் உயிர்ச்சேதமோ பொருள் சேதமோ ஏற்படாதது நிம்மதியே.

ஐஸ்லாந்து எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் தூசி மண்டலம் முழுமையாக மறைந்து விடுவதோடு விமானப் போக்குவரத்து சீரடைந்துவிடும். ஆனால் இதற்கு சில வேளை மாதக்கணக்கு கூட ஆகலாம் என புவியியல் ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

அண்மைக் காலங்களில் பல்வேறு இயற்கை அனர்த்தங்கள் நிகழ்ந்தாலும் எரிமலை வெடிப்பினால் பாரிய சேதங்கள் ஏற்பட்டது கிடையாது. ஆனால் கடந்த காலங்களில் எரிமலை வெடிப்புகளினால் பல்லாயிரம் உயிர்கள் பலியாகியுள்ளதோடு பல நகரங்கள் கூட புதைந்துள்ளன.

1883 ஆகஸ்ட் 26 இல் இந்தோனேஷியாவின் சுந்தா நிலச் சந்தியில் ஜகார்டாவின் மேற்கே உள்ள கிரகடோவாவின் நடுவே ஓர் அசுர எரிமலை வெடித்துப் பொங்கி எழுந்தது, புகை மண்டலம் வானில் 50 மைல் உயரத்தில் கிளம்பிக் கருமுகில் பூத வடிவில் வெளிப்பட்டு, பகலை இருட்டாக்கியது. சாம்பல் வீச்சு 290,000 சதுர மைல் பரவி அண்மையில் இருக்கும் ஜாவா, சுமத்ரா தீவுகளையும் கரிய மையால் வர்ணம் பூசியது.

அடுத்து அடுத்து எரிமலை நான்கு முறைகள் வெடித்தன. எரிமலைக் குமுறி வெடித்த இடி முழக்கம் 2500 மைல் தாண்டி மத்திய அவுஸ்திரேலியாவில் கேட்டதாம். வெடியின் சக்தி 100,000 ஹைடிரஜன் குண்டுகளின் ஆற்றலுக்கு ஒப்பானது என்று அனுமானிக்கப்படுகிறது.

வெடிப்பின் அழுத்த அலைகள் தணிந்து அடங்குவதற்குள் அவை பூமியின் சுற்றளவை (25,000 மைல்) ஏழு முறைச் சுற்றி வந்தனவாம். 1815 ஆம் ஆண்டு தாம்பராவில் தோன்றிய எரிமலை கிரகடோவாவைவிட மிக அதிகமாக 100 கியூபிக் கிலோ மீற்றர் பாறைக் கற்களைக் கக்கியதாக அறியப்படுகிறது.

கண்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ சுமார் 1500 உயிருள்ள எரிமலைகள் பூகோளத்தில் புதைந்து கொண்டுள்ளதாக அறியப்படுகின்றன. அவற்றில் 30 சதவீதம், மேற்தளத்தில் இல்லாமல், கடலடியில் குமிழியிட்டுக் கொண்டுள்ளன. குறிப்பாக, பசுபிக் மகா கடலில் தீ வளையம் எனப்படும் சங்கிலித் தொடர்ப் பகுதியில் வருடத்திற்கு 50 எரிமலைகள் வீதம் தோன்றுகின்றதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

இத்தாலியின் நேப்பில்ஸ் வளைகுடாப் பகுதியில் உள்ள வெஸ்சூவியஸ் சிகரம் உலகப் புகழ்பெற்றது. அதன் அருகே இருந்த சோம்மா எரிமலையில் கண்டெடுத்த எரிமலைக் கற்பாறை 300,000 ஆண்டு வயதுள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. கி.மு. 5960, கி. மு. 3580 ஆண்டுகளில் வெஸ்சூவியஸ் இருமுறை கக்கியது. சோம்மா வெஸ்சூவியஸ் கூட்டு எரிமலைச் சாம்பல் 25,000 ஆண்டு வயதுள்ளது.

அடுத்து கி.பி. 79 முதலாம் நூற்றாண்டில் வெஸ்சூவியஸ் சிகரத்தில் தீவிர எரிமலைக் குமுறல் கிளம்பி ஹெர்குலானியம், பாம்ப்பி என்னும் இருபெரும் நகரங்களும் புதைந்து போயின. எரிமலை கக்கிய விஷ வாயுவைச் சுவாசித்து 20,000 மக்கள் மாண்டனர். எரிமலை கொட்டிய கருஞ் சாம்பலையும், சகதியையும் அடுத்து பெய்த கடும் மழை இரு நகரங்களையும் மூடிப் புதைத்தது. சகதி வெள்ளத்தில் புதைந்தவர் மட்டும் 3360 பேர். 19 மணி நேரங்களில் சுமார் 4 கியூபிக் கிலோ மீட்டர் கருஞ்சாம்பல் நகரங்களில் கொட்டிக் குவிந்ததாம்.

எரிமலை வெடிப்பால் ஹெர்குலேனியம் பாம்பி ஆகிய நகரங்கள் புதைந்தன. புதை பொருள் ஆராய்ச்சிகளின் போது 1595 ஆம் ஆண்டு மறைந்த நகரங்களின் சில பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதற்கு பல நூறு வருடங்களின் பின்னர் தீய்ந்து போன மனிதச் சடலங்கள், நாய்களின் எழும்புக் கூடுகள், நகைகள், இத்தாலிய நாணயங்கள் என்பனவும் தோண்டி எடுக்கப்பட்டன.

அதற்கு பின்னரும் பல தடவைகள் வெஸ்சூவியஸ் சிகரத்தில் இருந்து எரிமலைகள் வெடித்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. 1944 ஆம் அண்டில் தான் இந்த எரிமலை கடைசியாக கொந்தளித்தது. இன்று வரை அது விழித்து எழவில்லை.

இந்த எரிமலை வெடிப்புகளுடன் ஒப்பிடுகையில் ஐஸ்லாந்து எரிமலை மிகச் சிறிய நிகழ்வு மட்டுமே

ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் சர்ச்சை: பாதுகாப்புச் சபைக்கு விளக்கமளிக்க விருப்பம்

தெஹ்ரான், ஏப்ரல். 19. ஏ. எப். பி.


ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் சர்ச்சைகள் தொடர்பாக ஐ. நா. பாதுகாப்புச் சபையிலுள்ள 15 நாடுகளுக்கும் விளக்க மளிக்கவுள்ளதாக ஈரானின் வெளிநாட்ட மைச்சர் மொனாச்சர் மொற்றாகி தெரிவித்தார். ஈரானில் நடந்த யுரேனியம் செறிவூட்டல் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.

அமெரிக்கா வுடன் மாத்திரம் இது தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தை நடத்தப்படமாட் டாதெனக் கூறிய ஈரான் வெளிநாட்டமைச்சர் ஏனைய 14 நாடுகளுடனும் நேரடிப் பேச்சுக்கள் நடத்தப்படுமென்றார். இனி வரும் காலங்களில் இப் பேச்சுக்கள் ஆரம்பமாகும். இதற்கான திட்டங்கள் எம்மிடமுள்ளன.

ஈரானைத் தாக்க முயற்சிப்போர் நெருப்புடன் விளையாடப் போகின்றனர். எங்களைத் தாக்கும் தைரியம் எவருக்கும் இல்லையெனவும் ஈரான் வெளிநாட்டமைச்சர் சூளுரைத்தார். யுரேனியத்தை செறிவூட்டி ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக மேற்கு நாடுகள் சந்தேகிக்கின்றன. இதனால் செறிவூட்டப் பட்ட யுரேனியத்தை சோதனை செய்வதற்காக பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அனுப்புமாறு ஐ. நா. வலியுறுத்துகிறது.

இதை நிராகரித்த ஈரான், தங்கள் நாட்டு எல்லைக்குள் யுரேனியத்தை சோதனையிட முடியுமெனக் கூறுகிறது. இந் நிலையில் ஈரானுக்குகெதிராக நான்காவது பொருளாதாரத் தடையைத் கொண்டுவர நிரந்தர உறுப்பு நாடுகளில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் என்பன முன்வந்து ள்ளன.

ரஷ்யா, சீனா என்பன இவ் விடயத்தில் பின்நிற்கின்றன. ஈரான் ஐ. நா. பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளுக்கும் தங்கள் நிலைப்பாட்டை விளக்கவுள்ளது. அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட் கேட்ஸ் ஈரானை வழிக்குக் கொண்டு வரும் விரிவான விடயங்கள் வெள்ளை மாளிகையிடம் இல்லையென நகலொன்றை கடந்த ஜனவரி மாதம் அனுப்பி வைத்ததாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. இச் செய்தியை பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட் கேட்ஸ் நிராகரித்தார்.

ஈரானைத் தண்டிக்கும் முறைகள், வழிக்குக் கொண்டு வரும் விடயங்கள், இவற்றைச் செய்ய வேண்டிய கால ஒழுங்குகள் என்பவற்றை உள்ளடக்கியதான நகல் ஒன்றையே நாம் ஜனாதிபதி ஒபாமாவுக்கு அனுப்பியதாக அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட் டார்.

ஈரானில் நடைபெற்ற யுரேனிய மாநாட்டில் மத்திய கிழக்கின் பாதுகாப்பு, அழிவு தரும் ஆயுதங்களை அகற்றல், இஸ்ரேலை அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் இணங்கச் செய்தல் போன்ற விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டன.

இஸ்ரேல் மத்திய கிழக்கில் மோதலைத் தூண்டுகிறது



தெஹ்ரான், ஏப்ரல். 18 ஏ. எப். பி.

மத்திய கிழக்கில் மோதலைத் தூண்டி விடும் நாடாக இஸ்ரேலுள்ளதென ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் குற்றம் சாட்டினார். ஈரானின் இராணுவ வைபவமொன்றில் உரையாற்றுகையிலேயே அஹ்மெதி நெஜாத் இக்குற்றச்சாட்டை முன் வைத்தார். ஆயதுல்லா அலி கொமைனியின் நினைவு மண்டபத்தில் இடம்பெற்ற இவ் வைபவத்தில் உரையாற்றிய ஈரான் ஜனாதிபதி தெரிவித்ததாவது:-

மத்திய கிழக்கில் வெளிநாட்டுப் படைகளின் பிரசன்னம் இப் பிராந்தியத்தில் வன்முறைகளையே தோற்றுவிக்கும். இப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும்.

இஸ்ரேலின் இராணுவப் பலத்தை அழிக்க ஏனைய நாடுகள் ஒன்றுபட வேண்டும். இஸ்ரேலுக்குப் பின்னாலுள்ள அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளையும் அஹ்மெதி நெஜாத் கண்டித்து உரையாற்றினார். இஸ்ரேலின் இருப்பை ஈரான் எப்போதும் எதிர்த்தே வருகின்றது. உலக வரை படத்திலிருந்து இஸ்ரேல் அகற்றப்பட வேண்டுமென ஈரான் கூறி வருகின்றது.

இந்நிலையில் அஹ்மெதி நெஜாதின் உரை இஸ்ரேலைச் சாடுவதாக இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் மீள்வாக்குப்பதிவை குழப்ப முயற்சி

தேர்தலில் தோல்வியடைந்த அரசியல் கட்சியொன்று மீள் வாக்களிப்பின் போது குழப்பம் ஏற்படுத்த திட்டமிட்டி ருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தல் ஆணையாளரிடம் நேற்று (19) முறைப்பாடு செய்துள்ளது.

மீள் தேர்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு ஐ. ம. சு. முன்னணி முழு ஒத்துழைப்பையும் வழங்கும் எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிரதிநிதிகள் தேர்தல் ஆணையா ளரிடம் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

ஐ. ம. சு. முன்னணி பிரதிநிதிகள் நேற்று (19) காலை தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவை தேர்தல் திணைக்களத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளர் மைத்திரிபால சிரிசேன, ஐ. ம. சு. மு. செயலாளர் சுசில் பிரேம் ஜயந்த், சு. க. சிரேஷ்ட பிரதித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, சு. க. பொருளாளர் டளஸ் அலஹப்பெரும ஆகியோர் கலந்து கொண்டனர். நாவலப்பிட்டி மற்றும் கும்புறுப்பிட்டிய பகுதிகளிலுள்ள 38 வாக்களிப்பு நிலையங்களில் நடத்தப்பட வுள்ள மீள் வாக்களிப்பு குறித்து இச்சந்திப் பின் போது முக்கியமாக ஆராயப்பட்டது.

அமைதியை நிலை நாட்டுவதற்காக ஜனாதிபதி இராணுவத்தினரையும் பொலிஸாரையும் ஈடுபடுத்தியுள்ளதோடு தேவையாக உத்தரவுகளையும் வழங்கியுள்ளதாக ஐ. ம. சு. மு. பிரதிநிதிகள் இங்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐ. ம. சு. முன்னணி வேட்பாளர்கள் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் செயற்பட மாட்டார்கள் என நம்பிக்கை வெளியிட்ட ஐ. ம. சு. முன்னணி பிரதி நிதிகள், தேர்தல் சட்டங்களை ஒழுங்காக நிறைவேற்றுமாறு கண்டி மாவட்ட ஐ. ம. சு. முன்னணி வேட்பாளர் களுக்கு ஜனாதிபதி பணித்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்த ஒரு அரசியல் கட்சி, வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் வன்முறையை தூண்டிவிட திட்டமிட்டுள்ளதாக ஐ. ம. சு. பிரதிநிதிகள் ஆணையாளருக்கு அறிவித்தனர். தேர்தல் செயலக பிரதிநிதிகளுக்கு இது குறித்து அறிவூட்டி அதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கோரினர்.

38 வாக்களிப்பு நிலையங்களில் மீள் தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையாளர் எடுத்த முடிவு தொடர்பில் அந்தப் பிரதேச ஐ. ம. சு. முன்னணி பிரதிநிதிகள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். ஆனால் ஐ. ம. சு. முன்னணி ஆணை யாளரின் முடிவை ஏற்றுக் கொள்கிறது. ஐ. ம. சு. முன்னணிக்குக் கிடைத்த பெரு வெற்றியை இந்த நடவடிக்கை மூலம் பாதுகாக்க முடிவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

போலந்து ஜனாதிபதியின் இறுதி நிகழ்வில் உலகத் தலைவர்கள் பலர் கலந்து கொள்ளவில்லை

ரஷ்யாவில் கடந்த வாரம் இடம்பெற்ற விமான விபத்தில் பலியான போலந்து ஜனாதிபதி லெக் கக்சின்ஸ்கியினதும் அவரது மனைவியினதும் உடல்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்வதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், ஐரோப்பாவில் பரவிவரும் ஐஸ்லாந்து எரிமலை புகை காரணமாக விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் பல உலகத் தலைவர்கள் கக்சின்ஸ்கியின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

போலந்தின் கிராகோவில் நடைபெறத் திட்டமிட்டிருந்த இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் ரத்து செய்துள்ளார்.

ஜெர்மனியின் ஆளுநர் அஞ்சலாமார்கெல் பிரிட்டன் இளவரசர் பிரின்ஸ் ஆகியோரும் போலந்துக்கான தமது விஜயத்தை ரத்துச் செய்துள்ளனர்.

கக்சின்ஸ்கியின் இறுதிச் சடங்குகள் வவல் சவச் சாலையில் இடம் பெற்றபோது பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

1 இலட்சத்து 80 ஆயிரம் பேர் வரையில் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தியதாக அதிகாரியொருவர் தெரிவித்தார். போலந்து ஜனாதிபதியின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளாதமையை இட்டு தான் மனம் வருந்துவதாக ஜனாதிபதி ஒபாமா குறிப்பிட்டுள்ளார். போலந்து ஜனாதிபதி கக்சின்ஸ்கி ஒரு தேசாபிமானி. அத்துடன் அமெரிக்காவின் ஒரு சிறந்த நண்பரும் ஆவாரென ஒபாமாவால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

அமெ‌ரி‌க்கா ஒரு அணுஆயுத ‌கி‌ரி‌மி‌ன‌ல் நாடு: ஈரான்.



அமெ‌ரி‌க்கா ஒரு அணுஆயுத ‌கி‌ரி‌மி‌ன‌ல் நாடு'' எ‌ன்று ஈரா‌ன் கடுமையாக ‌விம‌ர்‌‌சி‌த்து‌ள்ளது.
மாநா‌ட்டி‌ல் ஈரா‌ன் மத‌த்தலைவ‌ர் எழு‌திய அ‌றி‌க்கை ஒ‌ன்று வா‌சி‌க்க‌ப்ப‌ட்டது. அத‌ி‌‌ல், அமெ‌ரி‌க்கா ‌த‌‌ங்க‌ள் நா‌ட்டி‌ல் உ‌ள்ள அணுஆயுத‌ங்களை அ‌ழி‌க்காம‌ல் ‌பிற நாடுகளை ‌மிர‌ட்டுவது கே‌லி‌க்கூ‌ரியது எ‌ன்று ‌விம‌ர்‌‌சி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அணு ஆயுத‌‌ங்களை ‌மி‌க‌ப்பெ‌ரிய அள‌வி‌ல் சே‌‌‌மி‌த்து வை‌த்‌திரு‌க்கு‌ம் அமெ‌ரி‌க்கா தீ‌விரவா‌த‌த்தை ஒ‌ழி‌ப்பதாகவு‌ம் உலக அமை‌தி‌க்கு பாடுபடுவதாகவு‌ம் கூ‌றி‌க் கொ‌ள்வது அத‌ன் இர‌ட்டை வேட‌த்தை கா‌ட்டுவதாக தெ‌ரி‌‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.இத‌னிடையே டெ‌க்ரா‌னி‌ல் நடைபெ‌ற்ற இராணுவ அ‌ணிவகு‌ப்பை அ‌திப‌ர் அமகது ‌நிஜா‌ம் பா‌ர்வை‌யி‌ட்டா‌ர். அணுஆயுத‌ங்களை சும‌ந்து செ‌ன்று இல‌க்குகளை தா‌க்கு‌ம் ஷோக‌‌ப் 3 ரா‌க்கெ‌ட்டுகளு‌ம் அ‌ணி‌வகு‌ப்‌பி‌ல் இட‌ம் பெ‌ற்றன.

ஈரா‌ன் ‌மீது போ‌ர் தொடு‌க்க ‌நினை‌ப்பவ‌ர்களு‌க்கு த‌கு‌ந்த ப‌‌திலடி கொடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று அ‌திப‌ர் அகமது ‌நிஜா‌ம் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர். அ‌ண்டை நாடான இ‌ஸ்ரேலு‌க்கு ஆதரவு அ‌ளி‌ப்பத‌ன்மூல‌ம் ம‌த்‌திய ‌கிழ‌க்கு நாடுக‌ளி‌ல் அமெ‌ரி‌க்கா ஆயுத‌ப் போ‌ட்டியை ஏ‌ற்படு‌த்த‌ி வருவதாகவு‌ம் அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.ஈரா‌‌க், ஆ‌‌ப்கா‌னி‌‌ஸ்தா‌ன் போ‌ன்ற நாடுக‌ளி‌ன் உ‌‌ள்‌விவகார‌ங்க‌ளி‌ல் தலை‌யி‌ட்ட‌தி‌‌ன் பலனை அமெ‌ரி‌க்கா அனுப‌வி‌த்து வருவதாகவு‌ம் அமகது ‌நிஜா‌ம் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.
Read more...