செவ்வாய், 21 டிசம்பர், 2010

சவூதி அரேபியாவுடனான நல்லுறவுக்கு முன்னுரிமை


டெஹ்ரான்,டிச.20:சவூதி அரேபியாவுடனான நல்லுறவுக்கு நான் முன்னுரிமை அளிப்பேன் என ஈரானின் புதிய வெளியுறவு அமைச்சர் அலி அக்பர் ஸலாஹி தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்திப் பற்றிய அச்சம் வளைகுடா பகுதியில் நிலவுவதை கருத்திக்கொண்டே இம்முடிவு எனக் கருதப்படுகிறது.
முக்கிய நட்பு நாடான துருக்கியுடனான உறவை பலப்படுத்தவும், ஐ.நாவில் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகளான சீனா மற்றும் ரஷ்யாவுடனான உறவை மேம்படுத்தவும் முன்னுரிமை அளிக்கப்போவதாக அலி அக்பர் ஸலாஹி தெரிவித்தார்.

இந்தியர்களின் மரணத்தண்டனை ரத்து

தோஹா,டிச.21:கத்தர் நாட்டில் இரண்டு இந்தியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரணத் தண்டனையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்துச் செய்தது.

கேரள மாநிலத்தைச்சார்ந்த மணிகண்டன் மற்றும் உண்ணிகிருஷ்ணன் ஆகியோரின் மரணத் தண்டனையை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு கத்தரில் இந்தோனேஷியாவைச் சார்ந்த இளம்பெண் கொலை வழக்குத் தொடர்பாக இருவரும் தண்டனை விதிக்கப்பட்டனர். இவர்களிருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீஸ் கூறியிருந்தது.
கடந்த 2006 ஆம் ஆண்டு இவர்களிருவருக்கும் மரணத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.