புதன், 21 ஏப்ரல், 2010

அமெரிக்க செனட்டர் எச்சரிக்கை


ஹிஸ்புல்லா நவீன ஏவுகணையை தயாரிப்பது இஸ்ரேலுக்கு ஆபத்து

லெபனானிலுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் புதிய தொழில் நுட்பத்தினூடாக நவீன ஏவுகணைகளைத் தயாரிப்பதாக அமெரிக்காவின் செனட்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹிஸ்புல்லாஹ் தொழில்நுட்ப ரீதியாகப் பலமடைவது இஸ்ரேலுக்கு பெரும் ஆபத்து எனத் தெரிவித்த செனட்டர் மத்திய கிழக்கில் ஈரானின் செல்வாக்கு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஹிஸ்புல்லா அமைப்பிற்கு சிரியா ஆயுதங்களை வழங்கு வதாக அண்மையில் இஸ்ரேல் ஜனாதிபதி ஷிமென் பெரஸ் குற்றம்சாட்டினார். இதை சிரியா முற்றாக நிராகரித்தது. ஆனால் இதன் உண்மைத் தன்மைகளை ஆராய அமெரிக்கா ஆர்வம் கொண்டுள்ளது. சிரியத் தூதுவருக்கு இதுபற்றி விளக்கம் தரும்படியும் அமெரிக்கா கேட்டுள்ளது.

மத்திய கிழக்கில் இஸ்ரேல் எதிர்கொள்ளும் ஆபத்தை இல்லாமல் செய்ய வேண்டுமெனில் இஸ்ரேல் பலஸ்தீன் பிரச்சினைகள் இரண்டு தேசங்கள் என்ற அடிப்படையில் தீர்க்கப்படவேண்டுமென அமெரிக்க செனட்டர் மேலும் தெரிவித்தார்.

அனைத்து விதமான அச்சுறுத்தல்களையும் சந்திக்க தயார் : ஈரான்


.
'எங்கள் இஸ்லாமிய குடியரசின் ராணுவம் அனைத்து விதமான மிரட்டல்களையும், அச்சுறுத்தல்களையும் சந்திக்கும் ஆற்றலுடையதாக மாற்றப்பட்டுள்ளது' என்று ஈரானின் துணை ராணுவ அமைச்சர் அஹ்மத் வாஹித் தெரிவித்துள்ளார்.கடந்த சில ஆண்டுகளாக, எங்கள் ராணுவ பலத்தை கூட்டுவதில், நாங்கள் வெற்றியை ஈட்டியது மட்டுமல்லாமல் நிறைய புதிய தயாரிப்புகளையும் ஈரான் சாதிக்கவுல்லதாக அவர் புகழுரைத்தார்.இன்று அனைத்து விதமான ராணுவ ஆயுதங்களும் எங்களிடம் தயார் நிலையில் உள்ளன என்று அவர் மேலும் கூறினார்.ஈரான் ஒரு அஞ்சக்கூடிய நாடில்லை என்று நம் சக்திகள் நிரூபித்துல்லதாக - ஆயாதுல்லா ஹுசைன் உடனான சந்திப்பிற்கு பிறகு அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Read more...

ஃபலஸ்தீன் - இஸ்ரேல் மத்தியஸ்தத்திற்க்கு யு.எஸ். தகுதியற்றது: ஹமாஸ் குற்றச்சாட்டு.



ஹிலாரி கிளிங்டனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஒபாமா சர்சைக்குரிய விதத்தில் இஸ்ரேலை வாழ்தியதையடுத்து, இஸ்ரேல்-ஃபலஸ்தீனிற்கான அமைதி முயற்சியில் யு.எஸ் மத்தியஸ்தம் செய்வதற்கான தகுதியை இழந்துவிட்டது என்று ஹமாஸ் கூறியுள்ளது.
இதுக்குறித்து ஹமாஸ் செய்தி தொடர்பாளர் சமி அபு ஜுஹ்ரி, ஒபாமாவின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல் ஒபாமாவின் இவ்வகையான பேச்சு, இஸ்ரேல் ஃபலஸ்தீன விவகாரத்தில் அமெரிக்கா இஸ்ரேலை ஆதரிப்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது என்றார். எங்கள் விவகாரத்தில் வாஷிங்டன் ஒரு 'நேர்மையான தரகராக' செயல்பட முடியாது என்றே இது காட்டுகிறது என்று ஜுஹ்ரி குற்றம்சாட்டினார்.

அமெரிக்காவின் இவ்வாழ்த்துச் செய்தி ஒபாமாவின் முயற்சிகளை நம்பும் அனைத்து அரபு நாடுகளுக்கும் ஒரு சிறந்த பாடமாகும் என்று மேலும் தெரிவித்தார். முன்னதாக, ஏப்ரல் 20 அன்று தன் சுதந்திர தினத்தை கொண்டாடும் இஸ்ரேலுக்கு ஒபாமா கூறிய வாழ்த்து செய்தியில் இஸ்ரேல்அமெரிக்க உடனான எங்கள் உறவை யாராலும் பிரித்துவிட முடியாது என்றும் எதிர்காலத்தில் இது மேலும் வலுவடையத்தான் செய்யும்' என்று கூறியிருந்தார். இதுவரை, 700,000திற்கும் மேற்பட்ட ஃபலஸ்தீனர்கள் தங்கள் கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு, தற்போது அவர்கள் தங்கள் சொந்த நாட்டிலயே அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளது உலக வரலாற்றிலயே முதன்முறை என்று கூட கூறலாம்.
Read more...

ஹிஸ்புல்லாஹ்வுக்கு சிரியா ஆயுத உதவி :


அமெரிக்கா தனது தூதரை திரும்ப அழைத்தது.
வாஷிங்டன்:லெபனானில் செயல்படும் போராளி இயக்கமான ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆயுதம் வழங்கியதாக குற்றஞ்சாட்டி அமெரிக்கா தனது தூதரை சிரியாவிலிருந்து திரும்ப வருமாறு உத்தரவிட்டுள்ளது.வாஷிங்டனில் சிரியா தூதரக துணைத்தலைவர் சுஹைர் ஜாபரை அழைத்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தமது கண்டனத்தை தெரிவித்தது.
கடந்த வாரம் சிரியா ஹிஸ்புல்லாஹ்வுக்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வழங்கியதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியிருந்தது. 2006 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையே நடைபெற்ற போரில் 160 இஸ்ரேலிய ராணுவத்தினரும், 1200க்குமேற்பட்ட லெபனான் நாட்டைச் சார்ந்தவர்களும் கொல்லப்பட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானத்தில் லெபனான் மீது ஆயுதத்தடையை விதித்திருந்தது. லெபனான் அரசு மற்றும் ஐ.நா வின் உத்தரவில்லாமல் ஆயுதம் பரிமாற்றம் கூடாது என்பதுதான் தீர்மானம். ஆனால் ஹிஸ்புல்லாஹ்வுக்கு சிரியாவும், ஈரானும் ஆயுதங்களை வழங்குவது தொடர்வதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஹிஸ்புல்லாஹ் வசம் பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருந்தால் அது இஸ்ரேலுக்கு பெரும் பீதியை கிளப்பும் எனக் கருதப்படுகிறது. கடந்த சில மாதங்களாக நான்காவது முறையாக சிரியாவுக்கு எதிராக இதுத்தொடர்பான சந்தேகம் எழுந்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் கார்டன் டுக்விட் கூறுகிறார்.

ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆயுதம் வழங்குவதை கடுமையான வார்த்தைகளால் கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர் கூறுகிறார். இக்குற்றச்சாட்டுகளை சிரியா ஏற்கனவே மறுத்திருந்தது. தங்களின் அணுஆயுத திட்டங்களை குறித்த கேள்விகளிலிருந்து கவனத்தை திசைத்திருப்ப இஸ்ரேல் தம் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறுவதாக சிரியா தெரிவிக்கிறது. அமெரிக்கா சமீபத்தில் சிரியாவுடனான உறவை மேம்படுத்த முயற்சிகளை மேற்க்கொண்டிருந்தது.