திங்கள், 31 ஜனவரி, 2011

அல் பராதியை எகிப்தின் தலைவராக முன்னிறுத்தும் பணியை அமெரிக்கா செய்து வருவதாகவும் ஈரான் கூறியுள்ளது.

எகிப்தின் அதிபராக கடந்த 30 ஆண்டுகளாகப் பதவி வகித்து வரும் ஹோஸ்னி முபாரக் பதவி விலகக் கோரி நடைபெற்று வரும் மக்கள் புரட்சி 7ஆம் நாளாகத் தொடர்கிறது.

எகிப்தில் நிலவி வரும் வேலை வாய்ப்பின்மை மற்றும் ஏழ்மையால் அதிருப்தியில் இருந்த மக்கள் அண்டை நாடான துனீசியாவில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து வீதிக்கு வந்து போராட்டத்தில் குதித்தனர். கடந்த 24 ஆம் தேதி ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக ஆரம்பித்த இந்த மக்கள் புரட்சி, இன்றும் ஏழாவது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.

யெமன் நாட்டில் போராட்டம் உச்சக்கட்டம்


ஸன்ஆ,ஜன.31:யெமன் நாட்டின் சர்வாதிகாரி அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் ராஜினாமாச் செய்யக்கோரி நடைபெறும் மக்கள் திரள் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. தலைநகரான ஸன்ஆவில் எகிப்து நாட்டு தூதரகத்தை நோக்கி பேரணியாக புறப்பட்ட புரட்சியாளர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். ஆனால் எவரும் காயமடைந்ததாக தகவல் இல்லை.