ஞாயிறு, 5 டிசம்பர், 2010

கத்தரில் உலகக்கோப்பை கால்பந்து: ஒபாமாவின் அறிக்கைக்கு எதிராக டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி

தோஹா,டிச.6:2022 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நாடாக கத்தர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை நடத்தும் நாடுகளுக்கிடையேயான போட்டியில் அமெரிக்காவை பின் தள்ளிவிட்டு கத்தர் தேர்வுச் செய்யப்பட்டது தவறான தீர்மானம் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

வளைகுடா ஒத்துழைப்பு கூட்டமைப்பின்(ஜி.சி.சி) முக்கியத்துவம் வாய்ந்த உச்சிமாநாடு இன்று

அபுதாபி,டிச.6:வளைகுடா ஒத்துழைப்பு கூட்டமைப்பின்(ஜி.சி.சி) அங்க நாடுகளின் 31 வது உச்சிமாநாடு இன்று அபுதாபியில் யு.ஏ.இ அதிபர் ஷேக் கலீஃபா பின் ஸயீத் அல் நஹ்யானின் தலைமையில் துவங்கும்.

இரண்டு தினங்களாக நடைபெறும் இந்த உச்சிமாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என ஜி.சி.சியின் பொதுச் செயலாளர் அப்துல் றஹ்மான் ஆதிய்யா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

மாறுபட்ட தீர்மானங்கள் இம்மாநாட்டில் எடுக்கப்படும் என ஆதிய்யா தெரிவித்தார். ஜி.சி.சி நாடுகள் நடைமுறைப்படுத்தப்போகும் ஒரே நாணயம், கஸ்டம்ஸ், பொதுசந்தை, ஜி.சி.சி நாடுகளை இணைக்கும் ரெயில்வே, சக்தி, சுதந்திர வியாபாரம் உள்ளிட்ட திட்டங்களின் முன்னேற்றத்தைக் குறித்து விவாதிக்கப்படும்.

அபுதாபியில் எமிரேட்ஸ் பேலஸ் ஹோட்டலில் வைத்து இம்மாநாடு நடைபெறுகிறது. ஒரே நாணயம் திட்டத்திலிருந்து விலகி நின்ற யு.ஏ.இ இத்திட்டத்தில் சம்மதம் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானின் அணுசக்தி திட்டம், ஈரான் கைப்பற்றிய யு.ஏ.இயின் மூன்று தீவுகள், ஈராக், ஃபலஸ்தீன் உள்ளிட்ட விவகாரங்கள் இம்மாநாட்டில் விவாதிக்கப்படும்.

சவூதி அரேபியா, யு.ஏ.இ, ஒமான், பஹ்ரைன், குவைத், கத்தர் ஆகிய நாடுகளின் கூட்டமைப்புதான் ஜி.சி.சி.

ரியாத்:லிஃப்ட் கீழே விழுந்ததில் 7 பேர் மரணம்

 ரியாத்,டிச.5:சவூதி அரேபியா தலைநகர் ரியாதில் வஸீம் சாலையில் அமைந்துள்ள அப்துல்லாஹ் ஃபினான்சியல் சிட்டியில் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்த கட்டிடம் ஒன்றில் லிஃப்ட் கீழே விழுந்ததில் இந்தியர் உட்பட 7 பேர் மரணித்துள்ளனர்.

கிங் அப்துல்லாஹ் ஃபைனான்சியல் சிட்டியில் முதலாவது வாசலில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவர்களில் நான்கு பேர் பாகிஸ்தானைச் சார்ந்தவர்களாவர். இரண்டுபேர் இந்தியாவைச் சார்ந்தவர்கள். ஒருவர் பங்களாதேஷைச் சார்ந்தவராவார்.

விக்கிலீக்ஸ்:கத்தர் ஆபத்தான நாடு - அமெரிக்காவுக்கு மொஸாத் அளித்த எச்சரிக்கை

தோஹா,டிச.5:கத்தர் ஆபத்தான நாடு என அமெரிக்காவுக்கு மொஸாத் எச்சரிக்கை அளித்ததாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஜூலை 12 ஆம் தேதி அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் உயர் அதிகாரிகளுடனான சந்திப்பின்போது மொஸாதின் முன்னாள் தலைவர் மீர் தாகன் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.