ஞாயிறு, 9 மே, 2010

ஈரான் ஏற்பாடு செய்த விருந்தில் அமெரிக்கா பங்கெடுத்தது


ஐ.நா:ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினர்களாகயிருக்கும் 15 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முன்ஷஹர் முத்தகி அளித்த விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்காவின் பிரதிநிதியும் பங்கேற்றார்.

சர்ச்சைக்குரிய அணுசக்தித் திட்டத்தை காரணம் கூறி அதிக தடையை ஈரானின் மீது விதிக்க முயற்சி எடுத்துவரும் எதிரி நாடான அமெரிக்கா இவ்விருந்தில் பங்கேற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இரண்டு மணிநேரம் நீண்ட இவ்விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்கா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுடன் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினரல்லாத நாடுகளான போஸ்னியா, ஆஸ்திரியா, பிரேசில், லெபனான், மெக்ஸிகோ, துருக்கி, உகாண்டா, ஹெர்சகோவினா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

ஐ.நாவின் சீன தூதர் லீ பாஇடோங், ஜப்பான் தூதர் யூகியோ தகாஷு, அமெரிக்க துணை தூதர் அலீஜ் ஆண்ட்ரோ வோல்ஃப் ஆகிய நிரந்தர பாதுகாவுன்சில் நாடுகளின் பிரதிநிதிகள் இவ்விருந்தில் பங்கேற்றனர்.

விருந்தில் பரிமாறப்பட்ட உணவு மிக நன்றாக இருந்ததாக அமெரிக்க பிரதிநிதி விருந்து நிகழ்ச்சிக்கு பிறகு தெரிவித்தார். பேச்சுவார்த்தை ஒன்றும் நடத்தவில்லை என்றும், பொதுவான விஷயங்களைக் குறித்து பேசியதாகவும் ஜப்பான் பிரதிநிதி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

அணு ஆயுதத்தை கைவசம் வைத்துள்ள இஸ்ரேலுக்கு எதிராக ஒரு வார்த்தை பேசாத அமெரிக்காவின் நடவடிக்கையை ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத் நேற்று முன்தினம் கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வெள்ளி, 7 மே, 2010

மேற்குலக நாடுகளின் அழுத்தங்களை எதிர்கொள்ளும் ஆற்றல் ஈரானுக்கு உண்டு

நியூயார்க்கில் அஹமதி நிஜாத்
நியூயார்க்:ஐ.நா.வின் மேலதிக தடைகள் ஈரானைத் தடுத்து நிறுத்தாதென அந்நாட்டு ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நிஜாத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நியூயார்க்கில் 90 நிமிட செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்திய அஹமதி நிஜாத் 'புதிய தடைகள் விதிக்கப்படுமானால் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு மீண்டும் ஒருபோதும் சீர்செய்ய முடியாத அளவுக்குப் பாதிக்கப்படுமென எச்சரித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி ஒபாமாவின் உறுதிமொழிகள் தொடர்பில் ஏமாற்றம் வெளியிட்ட அஹமதி நிஜாத் முந்தைய அமெரிக்க நிர்வாகத்தின் கொள்கையை கைவிடப் போவதாக ஒபாமா வழங்கிய உறுதிமொழிகளை நாம் வரவேற்றிருந்தோம்.

ஆனால், ஒன்றுமே நடக்கவில்லை. இதுவரையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லையென தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்; 'தடைகளால் ஈரானை நிறுத்த முடியாது. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் அழுத்தங்களை எதிர்கொள்ளும் ஆற்றலை ஈரான் பெற்றிருக்கிறது.

நான் தடைகளை வரவேற்காத அதேவேளை அதற்குப் பயப்படவும் இல்லை' எனத் தெரிவித்துள்ளார்.

ஈரானில் அணு நிகழ்ச்சித் திட்டத்திற்கெதிராக நான்காவது சுற்றுத் தடைகளை விதிப்பது குறித்து அமெரிக்காவும் ஏனைய ஐந்து வல்லரசு நாடுகளும் ஆராய்ந்து வருகின்றன. அடுத்த சில வாரங்களுக்குள் இது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு முயற்சிப்பதாக கூறப்படும் மேற்குலக நாடுகளின் குற்றச்சாட்டுகளை நிராகரித்து வரும் ஈரான் தனது அணு நிகழ்ச்சித் திட்டம் முற்றிலும் சக்தி தேவைக்கானது கூறி வருகிறது.

புதன், 5 மே, 2010

நியூயார்க் பாலத்தில் நின்ற மர்ம லாரியில் வெடிகுண்டு பீதி.


நியூயார்க்: நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ராபர்ட் கென்னடி பாலத்தில் மர்ம லாரி ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றதால் அந்தப் பாலம் மூடப்பட்டது. தற்போது அந்த லாரியில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை இரவு அந்த லாரியை பாலத்தில் நிறுத்தி விட்டு ஒரு நபர் இறங்கி ஓடியதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர். இதனால் பீதி ஏற்பட்டது. லாரியிலிருந்து காஸ் வாசனையும் வந்து கொண்டுள்ளது.

மர்ம லாரியைத் தொடர்ந்து பாலம் மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தீயணைப்புப் படையினரும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்துள்ளனர்.முதல் கட்ட விசாரணையில், லாரியில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனால் பீதி சற்று அகன்றுள்ளது. இந்த பாலம் முன்பு திர்பாரோ பாலம் என்று பெயர் அழைக்கப்பட்டது. மன்ஹாட்டன், பிரான்க்ஸ், க்வீன்ஸ் ஆகிய பகுதிகளை இது இணைக்கிறது. சமீபத்தில், டைம்ஸ் சதுக்கப் பகுதியில் கார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மர்ம லாரியால் நியூயார்க் நகரில் மீண்டும் பீதி ஏற்பட்டுள்ளது.

ஹிஜாப்:முஸ்லிம் மாணவியை உடனடியாக பள்ளிக்கூடத்தில் சேர்க்க கேரள அரசு உத்தரவு



.
திருவனந்தபுரம்:ஹிஜாப் அணிந்த காரணத்தினால் பள்ளிக்கூடத்தை விட்டு நீக்கிய 9-ஆம் வகுப்பு பயிலும் நபாலா என்ற முஸ்லிம் மாணவியை உடனடியாக பள்ளிக்கூடத்தில் சேர்த்து படிக்க அனுமதிக்க வேண்டும் என்று கேரள மாநில அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.
இச்சம்பவத்தைக் குறித்து விசாரணை நடத்திய கல்வித்துறை துணை இயக்குநர் ஆரம்ப விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ததாக பொது கல்வி இயக்குநர் எ.பி.எம்.முஹம்மது ஹனீஷ் தேஜஸிடம் தெரிவித்தார்.

இச்சம்பவத்தைக் குறித்து சரியான விளக்கத்தைப் பெற பள்ளிக்கூட நிர்வாகத்துடன் தொடர்புடைய முக்கிய நபர்களை காண முடியவில்லை என்றும், அவர்களிடமிருந்து கிடைத்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என்றும் துணை இயக்குநரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இச்சம்பவத்தைக் குறித்த விரிவான விசாரணை தொடரும்.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்
Read more... Posted by புதிய தென்றல் at 9:50 PM , Links to this post , 0 comments
Labels: ஹிஜாப்
ஹிஜாப் அணிந்ததை அடுத்து மேலும் ஒரு மாணவி நீக்கம்: தொடரும் கிறிஸ்தவ மிஷனரி பள்ளிக்கூடங்களின் மதத்துவேஷம்.
கொல்லம்:ஹிஜாப் அணிந்ததால் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேற்றப்பட்ட நபாலா என்ற 9-ஆம் வகுப்பு முஸ்லிம் மாணவியைத் தொடர்ந்து ஆலப்புழா கிறிஸ்தவ மிஷனரி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பள்ளிக்கூடத்தின் நிர்வாகிகள் மீண்டும் ஒரு முஸ்லிம் மாணவிக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கி பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர்.

பூணப்புரா செண்ட் அலோசியஸ் பள்ளிக்கூடத்தில் பயின்ற மாணவி ஹாஜிராவை பள்ளிக்கூட நிர்வாகிகள் ஹிஜாப் அணிந்த காரணத்திற்காக பள்ளிக்கூடத்தை விட்டு நீக்கியுள்ளனர்.
ஒன்றாம் வகுப்பு முதல் செண்ட் அலோசியஸ் பள்ளிக்கூடத்தில் படித்து வந்த ஆஸியாவும் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது பள்ளிக்கூடத்தை விட்டு நீக்கப்பட்டுள்ளார். இவருடைய தந்தை தனது மகளின் படிப்பு நின்றுவிடக் கூடாது என்பதற்காக பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் சிஸ்டர் மேரி மாத்யூவை அணுகிய பொழுது மதத்துவேசமான முறையில் பேசியுள்ளார்.

மேலும் பள்ளிக்கூடத்தில் ஹிஜாப் அணிந்ததற்காக அனைத்து முஸ்லிம் மாணவிகளையும் வெளியேற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும் அது எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என அவர்கள் கூறியுள்ளனர். அதேவேளையில் கிறிஸ்தவ கன்னியாஸ்திரியான அந்த பள்ளிக்கூட தலைமயாசிரியை தலையில் அணிந்திருக்கும் கிறிஸ்தவ முறையிலான ஆடையைக் குறித்து கேட்டபொழுது இது எங்களுடைய பள்ளிக்கூடம் எங்கள் விருப்பப்படி ஆடை அணிவோம் என பதிலளித்துள்ளார்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்
Read more... Posted by புதிய தென்றல் at 9:42 PM , Links to this post , 0 comments
Labels: ஹிஜாப்
கேரளா:பள்ளிக்கூடத்தில் ஹிஜாப் அணிந்ததற்காக முஸ்லிம் மாணவியை வெளியேற்றிய பள்ளிக்கூட நிர்வாகம்.

ஆலப்புழா:ஹிஜாப் அணிந்த காரணத்தினால் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேற்றியுள்ளது கிறிஸ்தவ பள்ளிக்கூடம். இதற்கெதிராக எதிர்ப்பு வலுத்து வருகிறது. ஆலப்புழையில் குருபுரம் என்ற இடத்தில் செயல்படும் பிலீவேர்ஸ்(believers) சர்ச் சி.பி.எஸ்.இ பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் முஸ்லிம் மாணவி டி.என்.நபாலா. இவர் பள்ளிக்கூடத்திற்கு தலையை மறைக்கும் ஹிஜாப் அணிந்து வந்துள்ளார். இதனால் இவரை பள்ளிக்கூட நிர்வாகம் பள்ளிக்கூடத்தை விட்டு நீக்கியுள்ளது.

கெ.பி.யோகன்னான் என்பவர் தலைமையில் செயல்படும் இப்பள்ளிக்கூடத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி நபாலாவுக்கு ஹிஜாப் அணிந்ததற்காக மாற்று சான்றிதழ்(T.C) கொடுக்கப்பட்டுள்ளது. மாற்றுச் சான்றிதழில் கூறப்பட்டுள்ள காரணம் இதுவாகும்: 'maftha is not allowed in this school' என்பதாகும். ஒன்பதாம் வகுப்பிலிருந்து வெற்றி பெற்று பத்தாம் வகுப்பிற்கு சென்றுள்ள நபாலாவை தற்பொழுது பள்ளிக்கூடத்தை விட்டு நீக்கினால் அது அவருடைய தொடர் படிப்பை பாதிக்கும் என்றும் இவ்வருடம் மட்டும் படிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கோரியபொழுதும் பள்ளிக்கூட நிர்வாகம் செவிக் கொடுக்கவில்லை. இதனை நபாலாவின் தந்தை நாஸிர் முஸ்லியார் பத்திரிகையாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

ஹிஜாப் அணிவது மதக்கடமையானதால் அனுமதிக்க வேண்டும் என்று கோரியபொழுது பள்ளிக்கூட நிர்வாகம் மோசமாக நடந்துக்கொண்டது. எல்.கே.ஜி முதல் நபாலா இப்பள்ளிக் கூடத்தில்தான் பயின்று வருகிறார். முதலில் எஸ்.என்.டி.பி என்ற அமைப்பின் கீழ் இப்பள்ளிக்கூடம் செயல்பட்டிருந்தது. அப்பொழுதெல்லாம் பிரச்சனைகளொன்றும் இல்லை. பிலீவர்ஸ் சர்ச் இப்பள்ளிக்கூட நிர்வாகத்தை ஏற்ற பொழுதுதான் பிரச்சனை உருவானது. நபாலாவை தொடர்ந்து படிக்க அனுமதிக்கவேண்டும் என்று கோரி அவருடைய தாயார் பள்ளிக்கூடம் சென்றபொழுது ஆசிரியையோ தலைமை ஆசிரியரோ சந்திக்க விருப்பமில்லை எனக் கூறிவிட்டனர்.

தலைமை ஆசிரியரின் மொபைலில் தொடர்புக் கொண்டபொழுது ஹிஜாபை அனுமதிக்க முடியாது டி.சி யை வாங்கிச் செல்லுங்கள் என்று கூறிவிட்டார். அப்படியானால் ஹிஜாப் அணிந்ததால்தான் டி.சி வழங்குகிறோம் என்று எழுதித் தாருங்கள் என்ற பொழுது இவ்வாறு கேட்டால் மாணவியின் மோசமான நடவடிக்கை என்று எழுதித்தருவோம் என மிரட்டினார்.பின்னர் கெஞ்சிய பின்னரே இவ்வாறு எழுதித் தந்துள்ளார்கள்.

நபாலா சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படித்துள்ளதால் வேறு பள்ளிக்கூடங்களில் சேர்ப்பது தொடர் படிப்பிற்கு கடினமாக இருக்கும் ஆதலால் கிரஸண்ட் சி.பி.எஸ்.இ பள்ளிக்கூடத்தில் அனுமதிக் கேட்ட பொழுதும் அவர்களும் இத்தகைய பிரச்சனையை காரணம் காட்டி அவர்களும் சேர்க்க முடியாது எனக் கூறிவிட்டனர்.இதனால் எனது மகளின் தொடர் படிப்பை இழக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகள் இதில் தலையிட வேண்டும் எனவும் நபாலாவின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.மாணவியை ஹிஜாப் அணிந்ததற்காக வெளியேற்றிய பள்ளிக்கூட நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டுமென அரசுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

அணு ஆயுத அச்சுறுத்தல் விடுக்கும்’ நாடுகளை ஐ.நா தண்டிக்க வேண்டும்


அணு பரவலாக்காமை ஒப்பந்த மீளாய்வு கூட்டத்தில் ஈரானிய ஜனாதிபதி
அணு ஆயுத பாவனை வெறுப்புக்கும் வெட்கத்துக்கும் உரியது. அவ்வாறான பாவனையை மேற்கொள்ளப்போவதாக அச்சுறுத்தி வரும் அமெரிக்கா போன்ற நாடுகளை ஐக்கிய நாடுகள் அமைப்பு தண்டிக்க வேண்டும் என்று ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நஜாத் வலியுறுத்தினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் சம்மேளனக் கூட்டத்தில் உரையாற்றியபோதே ஈரானிய ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
1970 ஆம் ஆண்டின் அணு ஆயுத பரவலாக்காமை ஒப்பந்தத்தில் கைச்சாத் திட்டுள்ள 189 நாடுகளின் ஒப்பந்த மீளாய்வு சம்மேளன கூட்டம் ஒரு மாத காலத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறுகிறது.

அணு ஆயுத தடை ஒப்பந்தம் மீதான மாநாடு ஐ.நா.வில் நடைபெற்றபோது ஈரான் ஜனாதிபதி அஹமதி ரஜாத் உரையாற்றுகின்றார்.
இந்த கூட்டத் தொடரின் ஆரம்ப கட்டத்தில் உரையாற்றிய போதே ஈரானிய ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். அணு ஆயுதங்களை வைத்திருப்பது என்பது ஒன்றும் பெருமைக்குரிய விடய மல்ல. அவ்வாறான ஆயுதங்கள் சமாதான முறையிலான அணு வசதிகளுக்கு எதிராக பாவிக்கப்படும் என்ற அச்சுறுத்தலோ அல்லது அவ்வாறான தாக்குதலோ சர்வதேச சமாதானம் அல்லது பாதுகாப்பை மீறும் செயல் என கருதப்பட வேண்டும்.
அவ் வாறான தாக்குதலை மேற்கொள்ளும் நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் துரித செயற்பாட்டின் விளைவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டும். அத்துடன் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள இதர நாடுகளினால் பகிஷ்கரிக்கப்பட வேண்டும் என்று ஈரானிய ஜனாதிபதி சாடினார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்த கூட்டங்களின் போது மேற்குலக நாடுகள் அடிக்கடி வெளிநடப்பு செல்வது ண்டு. ஈரானிய ஜனாதிபதியின் காரசாரமான உரையின் போதும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பல மேற்கு நாடுகள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்திருந்தன.
இஸ்ரேல் அதன் அண்டைய நாடுகளை தாக்குவதாகவும் கைப்பற்றப் போவதாகவும் அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா மற்றும் அதன் தோழமை நாடு களின் நிபந்தனையற்ற ஆதரவு இஸ்ரேலுக்கு தொடர்ந்து கிடைத்து வருகிறது என்று ஈரானிய ஜனாதிபதி குற்றஞ் சாட்டை விடுக்கத் தொடங்கியதையடுத்தே மேற்கு லக தூதுக்குழுவினர் சபையிலிருந்து வெளிநடக்க ஆரம்பித்தனர்.
ஈரானிய ஜனாதிபதி அஹமதி நஜாத்தின் கூற்றை அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஹிலரி கிளின்டன் நிராகரித்தார்.
எப்போதும் போலவே பொய்யான குற்றச்சாட்டுக்களையே அவர் இம்முறையும் முன்வைக்கிறார் என்று கூறிய ஹிலரி சகல நாடுகளும் ஒன்றிணைத்து ஈரானின் அணு ஆயுத திட்டத்தை கைவிடச் செய்ய வைப்பதற்கு முன்வரவேண்டும் என்று ஹிலரி கிளின்டன் வலியுறுத்தினார்.
இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகள் அணு பரவலாக்காமை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை எனினும் இவை அணு ஆயுதங்களை வைத்துள்ளன. வடைகொரியா முதலில் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தது. எனினும் 2003 இல் அதிலிருந்து விலகிக் கொண்டு 2006 இலும் 2009 இலும் அணு சோதனைகளை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

ஜெருசலம்:சிறைக்கைதியான ஃபலஸ்தீன் முஸ்லிமின் குர்ஆனை கிழித்தெறிந்த இஸ்ரேலிய வார்டன்

ஜெருசலம்:இஸ்ரேலின் சிறைக்கொட்டகையில் அடைக்கப்பட்டுள்ள ஃபலஸ்தீனைச் சார்ந்த ஒருவரிடமிருந்து கைப்பற்றிய புனித குர்ஆனை இஸ்ரேலிய வெறிப்பிடித்த வார்டன் ஒருவன் கிழித்தெறிந்துள்ளான். அஷ்கலன் சிறையில்தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த கைதியான ஃபலஸ்தீன் முஸ்லிமிடமிருந்து கத்திக்கொண்டு வந்த இஸ்ரேலி வார்டன் குர்ஆனை பலவந்தமாக கைப்பற்றி கிழித்தெறிந்துள்ளான்.

இச்சம்பவம் ஃபலஸ்தீனில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே அல் அரூப் அகதிகள் முகாமிலும் மெஜிதோ சிறையிலும் குர்ஆனை பலவந்தமாக கைப்பற்றி கிழித்தெறிந்துள்ளனர் யூத பயங்கரவாதிகள்

கஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமைக்கான ஆதரவு தொடரும்: பாகிஸ்தான்


இஸ்லாமாபாத்:கஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமைக்கான தார்மீக, ராஜீய, அரசியல் ரீதியான ஆதரவில் உறுதியாக இருப்பதாக பாகிஸ்தான் தேசிய அசம்பிளியில் பாக்.வெளியுறவுத்துறை அமைச்சர் குரைஷி தெரிவித்தார்.

கஷ்மீர் விவகாரத்தில் ஆசுவாசமான தீர்வைத்தான் பாகிஸ்தான் விரும்புகிறது. கஷ்மீரிகளின் விருப்பங்களுக்கும், ஐ.நா தீர்மானத்திற்கும் ஒத்ததாக இருக்கவேண்டும் அந்த தீர்வு. கஷ்மீரிகள் பங்கெடுக்காத ஒரு பரிகாரமும் நிலைக்காது. கஷ்மீரிகளை சேர்க்காமல் நடக்கும் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை பரிபூரணமாகயிருக்காது.

பிரச்சனை தீர்ப்பதற்காக நாங்கள் எல்லைக்கு அப்பாலும் எல்லைக்கு உள்ளும் உள்ள கஷ்மீரி தலைவர்களுடம் உறவை பேணி வருகிறோம். பாகிஸ்தானின் வெளிநாட்டுக் கொள்கையின் ஆணிவேரான கஷ்மீர் பிரச்சனையை மறந்துவிட்டு முன்னே செல்ல சாத்தியமில்லை. அதேவேளையில் பேச்சுவார்த்தைகள் மூலமாகத்தான் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு.

கடந்த ஆண்டு எகிப்தின் ஷரமுஷேக்கில் வைத்து இருநாட்டு பிரதமர்கள் நடத்திய ஒருங்கிணந்த பிரகடனத்தில் இதனை அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டது. இவ்வாறு குரைஷி கூறினார்.

ஹமாஸின் மனம் மாறிவிடுமா?



டெல்அவீவ்:மூன்று ஆண்டுகள் காஸ்ஸா மீது விதிக்கப்பட்ட தடையின் மூலம் இஸ்ரேல் சாதித்தது என்ன? காஸ்ஸா மக்களையும் அவர்களுடைய பாதுகாவலர்கள் எனக்கூறப்படும் ஹமாஸையும் பாடம் புகட்ட முடிந்ததா? எதற்காக இந்த கூட்டுத்தண்டனை? தடையின் தற்போதைய நிலை என்ன?

ஹமாஸ் அதிகாரத்தை கைப்பற்றியதை விரும்பாத இஸ்ரேலும், எகிப்தும் காஸ்ஸாவிற்கு ஏற்படுத்திய தடையையும், அதன் பலனையும் குறித்து பி.பி.சிக்கு சில ஆவணங்கள் கிடைத்துள்ளன.

குடிதண்ணீர் உள்ளிட்ட உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான பொருட்களை தடைச் செய்த பிறகும் தளராத ஃபலஸ்தீனர்கள் இறுதியில் வெற்றியைப் பெற்றுள்ளார்கள் என பி.பி.சியின் நிரூபர் டிம் ஃப்ராக்ஸ் கூறுகிறார்.

எதற்காக காஸ்ஸாவின் மீதான இத்தகைய தடை? என நீதிமன்றத்தின் கேள்விக்கு, இஸ்ரேல் அளித்த பதில், 'ஹமாஸிற்கு பாடம் புகட்ட' என்பதாகயிருந்தது. தடை ஏற்படுத்துவதால் போராளிகள் எவ்வாறு தங்களது ஆரோக்கியத்தை பேணுவார்கள் என்று பார்ப்போம் என்பது இஸ்ரேலின் நோக்கமாகயிருந்தது.

காஸ்ஸாவிற்குள் நுழைய தடைச்செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலை வெளியிட இஸ்ரேலுக்கு துணிச்சலில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் நிர்பந்தம் அதிகமாகும் பொழுது ஒவ்வொரு பொருளின் இறக்குமதியை இஸ்ரேல் அனுமதி வழங்கியது. குடிதண்ணீருக்கான தடையை நீக்கியது இந்த மாதம் பிப்ரவரியிலாகும். துணிகளை அனுமதித்தது மார்ச் மாதம். அலுமினியம், பர்னிச்சர்களுக்கான மரம், சமையலறை பாத்திரங்கள், செருப்புகள் ஆகியவற்றை கடந்த மாதம்தான் இறக்குமதிச் செய்ய இஸ்ரேல் அனுமதியளித்தது.

அதேவேளையில் மல்லிப்பொடி, ஜூஸ் வகைகள், விளையாட்டுப் பொருட்கள், சாக்கலேட், ஜாம், ஆடைகள் ஆகியவற்றிற்கான தடை தற்பொழுதும் தொடருகிறது.

காஸ்ஸா தடையைக் குறித்து விவரமறிய தகவல் அறியும் உரிமைச்சட்டப்படி பணியாற்றும் இஸ்ரேலிய மனித உரிமை அமைப்பான 'கிஸா' தான் இஸ்ரேல் தடைச்செய்த பொருட்களின் பட்டியலை வெளியிட்டது.

சர்வதேச நிர்பந்தத்தின் காரணமாக இஸ்ரேல் காஸ்ஸாவிற்குள் கடந்த வருடம் பாதி முதல் இம்மாதம் வரை அனுமதித்த 81 பொருட்களின் பட்டியலையும், கால அளவையும் இவ்வமைப்பு வெளியிட்டுள்ளது.

நீதிமன்றத்தில் இஸ்ரேல் சமர்ப்பித்த 13 பக்க விளக்கத்தில் எந்தவொரு நீதியும் இல்லை. இன்று அத்தியாவசியப் பொருட்கள் காஸ்ஸாவிற்குள் கிடைக்க ஆரம்பித்திருந்தாலும், தடை மற்றும் தனிமைப்படுத்தலில் நாட்களை மன உறுதியோடு எதிர் கொண்ட வரலாற்றைத்தான் இவர்களால் கூறமுடியும்.

மல்லிப்பொடியை தடைச்செய்ததால் ஹமாஸின் மனதை மாற்ற முடியவில்லை என்பதோடு உலக சமூகத்தின் ஆதரவையும் பெற இந்தத் தடை உதவியது.

ரியாத்தில் கடும் சூறாவளிக் காற்றுடன் மழை- வரலாறு காணாத வெள்ளம்


சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் நகரமே ஸ்தம்பித்துப் போயுள்ளது. வாகனப் போக்குவரத்து முடங்கி விட்டது. பள்ளி, கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
கடும் சூறாவளிக் காற்றுடன் நேற்று பெய்த மழையால் நகரமே வெள்ளக்காடாகியுள்ளது. பல சாலைகளில் வெள்ளம் போல மழை நீர் ஓடிவருவதால், போக்குவரத்து கடுமையாக ஸ்தம்பித்துள்ளது.
கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்திற்கு கன மழை கொட்டித் தீர்த்தது. அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் மேற்கிலிருந்து மணிக்கு 42 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சவூதி அரேபிய கல்வி அமைச்சர் இளவரசர் பைசல் பின் அப்துல்லா கூறுகையில், ரியாத்தில் உள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டிருக்கும் என்று அறிவித்தார்.மேலும்,அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளும் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்காங்கு மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட வாகனங்களை மீட்கும் நடவடிக்கைகளில் ரியாத் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. பாலங்களில் தேங்கியுள்ள நீரை அகற்றவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த கன மழையால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மழை காரணமாக பல்வேறு இடங்களிலிருந்து கிங் காலித் சர்வதேச விமான நிலையத்திற்கு பலரால் வர முடியாமல் போனதால் அவர்கள் விமானங்களைத் தவற விட நேரிட்டது.

நேற்று பிற்பகல் பள்ளியிலிருந்து திரும்பிய மாணவர்கள், மழை வெள்ளத்தால் பெரும் அவஸ்தைக்குள்ளானார்கள். இதேபோல ரியாத் நகருக்கு விமானங்கள் மூலம் வந்தவர்களும் தங்களது இருப்பிடங்களுக்குச் செல்ல முடியாமல் பெரும் அவஸ்தைக்குள்ளானார்கள்.

திங்கள், 3 மே, 2010

யெமனில் கடத்தப்பட்ட இராணுவ வீரர்களை விடுவிக்க அரசாங்கம் 48 மணிநேரக் காலக்கெடு

யெமன் இராணுவத்தினர் இருவரைக் கடத்திச் சென்றுள்ள தென்பகுதி போராளிகள் தங்கள் சகாக்களை விடுவிக்காவிட்டால் படையினரின் உயிருக்குத் தாங்கள் பொறுப்பில்லையென அறிவித்துள்ளனர். விடுமுறையில் சென்றுவிட்டு கடமைக்குத் திரும்பிய இரண்டு படைவீரர்களை யெமன் போராளிகள் கடத்திச் சென்றனர்.

இதையடுத்து யெமனின் தென்பகுதியிலுள்ள அமெரிக்கர்களைக் கவனமாக நடமாடுமாறு அமெரிக்கா கேட்டுள்ளது. யெமனிலுள்ள லண்டன் தூதரகத்தினை தாக்குவதற்கு அண்மையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனால் அங்குள்ள மேற்கு நாட்டுப் பிரஜைகளை அவதானத்துடன் செயற்படுமாறு கேட்கப்பட்டுள்ளதுடன் வெளிநாட்டுப் பிரஜைகள் தங்கியுள்ள ஹோட்டல்களுக்கும் மேலதிக பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடத்தப்பட்ட இராணுவ வீரர்களை விடுதலை செய்ய 48 மணி நேரம் காலக்கெடுவை அரசாங்கம் விதித்துள்ளது.

அத்துடன் 48 பேரைத் தேடப்படுவோர் பட்டியலில் சேர்த்துள்ளது. இவர்கள் அனைவரும் யெமன் தென்பகுதியைச் சேர்ந்த போராளிகளாவர். யெமனின் தென்பகுதியில் 2004ம் ஆண்டு முதல் ஷியா முஸ்லிம்கள் மேலதிக அதிகாரம் வேண்டிப் போராடுகின்றனர்.

இதனால் பல பேர் உயிரிழந்தும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துமுள்ளனர். தற்போது இங்கு அல் கைதா ஊடுருவி தாக்குதல் திட்டங்களை முன்வைக்கிறது

மத்திய கிழக்குப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க இஸ்ரேல், எகிப்து தலைவர்கள் சந்திப்பு

இஸ்ரேல் பிரதமர் பென்ஜெமின் நெதன்யாஹு எகிப்து ஜனாதிபதி ஹொஸ்னி முபாறக்கிடையிலான முக்கிய பேச்சுவார்த்தைகள் நேற்று எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் ஆரம்பமானது.

2008ம் ஆண்டு முறிவடைந்த இஸ்ரேல், பலஸ்தீன் பேச்சுவார்த் தைகளை மீண்டும் ஆரம்பிப்பது சம்பந்தமாகப் பேசும்பொருட்டு இத் தலைவர்கள் சந்தித்துக் கொண் டனர். இஸ்ரேல், பாலஸ்தீனர் க் கிடையில் நடந்த அனைத்து பேச்சுவார்த்தைகளையும் எகிப்தே மத்தியஸ்தராக நின்று நடத்தியது. காஸா இஸ்ரேலிடையே 2008ம் ஆண்டு யுத்தம் ஏற்பட்டதால் இப் பேச்சுக்கள் முறிவடைந்தன.

இதனை மீண்டும் ஆரம்பிப்ப தற் கான சூழலை ஏற்படுத்தவே இத் தலைவர்கள் சந்தித்துக்கொண்டனர். அரபுலீக் இப்பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற் பாடுகளையும் செய்துள்ளதுடன் ஏக மனதாக அங்கீகாரத்தையும் வழங் கியுள்ளது.

பெரும்பாலும் இஸ்ரேல் பலஸ் தீன் பேச்சுவார்த்தைகள் மறை முகமாகவே இடம்பெறவுள்ளன. இம் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காதப்பட்சத்தில் நேரடிப்பேச்சுவார்த்தைக்குச் சந்தர்ப்பமில்லையென அரபுலீக் செயலாளர் அமர்முஸா குறிப் பிட்டார்.

மார்ச் மாதம் இஸ்ரேல் எகிப்து தலைவர்கள் சந்தித்தபோது எடுக்க ப்பட்ட தீர்மானங்களுக்கமையவே தற்போது ஆரம்பமாகவுள்ள பேச்சுக் கள் இடம்பெறவுள்ளன. இதற்கான கால அட்டவணைகளும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளன. மேற்குக் கரையில் இஸ்ரேல் குடியேற்றங் களை நிறுவினால் பேச்சுவார்த்தை யிலிருந்து பலஸ்தீன் விலகிக்கொள் ளலாமென அரபுலீக் அறிவித்தது.

பைதுல்லா மெசூத் ஒளிநாடாவில் தோன்றி அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

பாகிஸ்தானில் இயங்கும் தலி பான்களின் தலைவர் பைதுல்லா மெசூத் ஒளிநாடாவில் தோன்றி அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தார். தலிபான்களின் இணைய தளத்தில் ஒன்பது நிமிடங்கள் இந்த ஒளி நாடா காண்பிக்கப்பட்டது.

ஏப்ரல் 04 ம் திகதி இந்த ஒளி நாடா எடுக்கப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது. அமெரிக்க நகரங்கள், நலன்கள், இராணு வங்களைத் தாக்குமாறு தனது சகாக்களுக்கு பைதுல்லா மெசூத் கட்டளையிட்டார். ஆங்கில மொழி யில் இவரது உரை அமைந்திருந்தது. ஹகிமுல்லா மெசூதைக் கொன்ற மைக்காக அமெரிக்கா மீதான தாக்குதல் தொடருமென பைதுல்லா மெசூத் சூளுரைத்தார்.

இத்த னைக்கும் பைதுல்லா மெசூத் ஜனவரி மாதம் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான், அமெரிக்க அரசாங் கங்கள் அறிவித்தன. இவர் வீடி யோவில் தோன்றி உரையாற்றி யதால் பைதுல்லா மெசூத் தொடர் பான உண்மைத் தன்மை தொட ர்ந்தும் கேள்விக்குள்ளாகியுள்ளது. ஒளிநாடாவில் முகமூடியணிந்த இருவர் பைதுல்லா மெசூதுக் கருகாமையில் நின்று கொண்டி ருந்தனர். இந்த வீடியோ தொடர் பாக அமெரிக்க, பாகிஸ்தான் அரசுகள் உடனடியாக எதையும் தெரிவிக்கவில்லை.

நான்கு மாதத்தில் சுமார் 52 ஃபலஸ்தீனர்கள் விஷவாயு தாக்குதல் மூலம் கொலை

காஸ்ஸா இந்த வருட துவக்கத்திலிருந்து கடந்த மாதம் இறுதிவரை, நான்கு மாதத்தில் சுமார் 52 ஃபலஸ்தீனர்களை விஷவாயு தாக்குதல் மூலம் கொன்றுள்ளது எகிப்து ராணுவம்.

இஸ்ரேலின் நெருக்கடியில் வாழும் 1.5 மில்லியன் ஃபலஸ்தீனர்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு வருவதில் இந்த சர்சைக்குரிய காஸ்ஸா சுரங்கங்கள் தான் உதவுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, பாலஸ்தீன மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை காஸ்ஸா வழியாக கொண்டுவரும் போது, எகிப்து ராணுவத்தால் வேண்டுமென்றே இவர்கள் கொல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி அநியாமாக உயிர்களை கொல்வதை எகிப்து ராணுவம் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்களின் மேல் விஷவாயு தாக்குதல் நடத்துவது சர்வதேச சட்டங்களின் மிகப்பெறும் அத்துமீறலாகும் என்று அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு எல்லையான ராபாவையும் எகிப்து அரசு தன் பாதுகாப்பு காரணங்களை கருதி மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது

சோமாலியா மசூதியில் குண்டு வெடிப்பு - 34 பேர் பலி 100க்கும் மேற்பட்டோர் காயம்

கடந்த சனிக்கிழமையன்று(மே2) சோமாலியா தலைநகரம் மொகாதிஷுயில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மசூதி ஒன்றில் சக்திவாய்ந்த 2 குண்டுகள் வெடித்ததில் சுமார் 34 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

வழக்கம் போல, அல் கொய்தா தொடர்பிலுள்ள அல்-ஷபாப் என்ற இயக்கத்தை தொடர்புபடுத்தி செய்திகள் வெளியாகின்றன. இந்த குண்டு வெடிப்பில் காயமடைந்த மூத்த உலமா, ஃபுஆத் முஹம்மத் கல்ஃப் என்பவரை குறிவைத்துதான் அமெரிக்க மற்றும் வெளிநாட்டு படைகள் இக்குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளதாக அல் ஷபாப் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.அரசு மற்றும் ஆப்ரிக்கா யூனியனின் படைகளுக்கு எதிராக அல் ஷபாப் போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே நேற்று மற்றொரு மசூதியில் குண்டு வெடித்ததில் சுமார் 2 பேர் உயிரிழந்தனர் ஏராளமானோர் காயமடைந்ததனர்.சோமாலியாவில் சமீப காலமாக மசூதிகளில் மட்டும் குண்டு வெடிப்பது தொடர்ந்து மர்மமாகவே உள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தின் இரகசிய சிறைச்சாலை ஒன்றில் சிறை வைக்கப்பட்டிருந்தவர்கள்

பலவிதமான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.

உடலில் மின்சாரம் பாய்ச்சப்படுதல், பாலியல் பலாத்காரம் போன்ற சித்ரவதைகளை இவர்கள் தொடர்ந்தும் அனுபவித்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சிறையில் முன்பு சிறை வைக்கப்பட்டிருந்தவர்களிடம் பிபிசி பேசியபோது, தாங்கள் திட்டமிட்டு வழிமுறை வகுத்து தங்களை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்ததை உறுதிச் செய்துள்ளனர்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில், இக்கைதிகள் சொன்ன விபரங்கள் இடம்பெற்றுள்ளன.
முதானா இரகசிய சித்ரவதைச் சிறை
முதானா விமானதளத்திலிருந்த இந்த இரகசிய சித்ரவதைச் சிறை தற்போது மூடப்பட்டுவிட்டது. ஆனால் இந்த மாத முற்பகுதி வரை இந்த இடத்தில்தான் நானூறுக்கும் மேற்பட்ட கைதிகள் சிறை வைக்கப்பட்டு மிகக் கொடூரமான சித்ரவதைகளை மாதக்கணக்கில் அனுபவித்து வந்திருந்தனர்.

"எங்கள் தலையை பிளாஸ்டிக் பையால் மூடுவதிலிருந்து சித்ரவதைகள் ஆரம்பிக்கும். எங்கள் மேலே தண்ணீரை ஊற்றிவிட்டு பின்னர் உடலில் மின்சாரத்தைப் பாய்ச்சுவார்கள்"என்று இங்கு சிறை வைக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர் கூறுகிறார். தனது அடையாளத்தை வெளியில் சொல்ல அவர் பயப்படுகிறார்.
இவருக்கு நடந்த விஷயங்களும் இந்த இடத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த வேறு நாற்பது பேர் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்சின் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ள விஷயங்களும் ஒத்துப் போகின்றன.

இந்நிலையில் ஈராக்கில் இரகசிய சிறைச்சாலைகள் உள்ளன என்பதையும், ஈராக்கின் சிறைகளில் சித்ரவதை பரவலாக நடந்து வருகிறது என்பதையும் ஈராக்கிய அரசாங்கம் முற்றிலுமாக மறுக்கிறது.

ஆனால் முத்தானா இரகசிய சிறைச்சாலையில் சித்ரவதை என்பது 'வழமையாகவும், வழிமுறை வகுக்கப்பட்டும்' நடந்துள்ளதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறுகிறது.

மேற்குலகத்தவர்கள் பலர் இஸ்லாத்தைக் கற்பதில் ஆர்வமாக உள்ளனர்

சர்வதேச குழு: இயற்கையுடன் தொடர்புடைய பல்வேறு வினாக்களுக்கு விடைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வழியாக, இஸ்லாத்தைக் கற்றுக் கொள்வதில் தற்போதைய பெரும்பாலான மேற்கத்தைய அறிஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பதை நவீன ஆய்வுகள் உறுதி செய்துள்ளதாக இஸ்லாமிய கல்வியியலாளர் ஒருவர் தெரிவிக்கின்றார்.

தமது சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்கெதிராகக் கிளர்ந்தெழும் வினாக்களுக்கு திருப்திகரமான விடைகளைப் பெற்றுக் கொள்வதில் அவர்களது கொள்கைகளும் கோட்பாடுகளும் தோல்வி கண்டுள்ளமையால், அவர்களிடையே இஸ்லாம் பற்றிய ஆர்வம் அதிகரித்து வருகின்றது என, இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனத்தின் பணிப்பாளர் முஹம்மத் சித்தீக் தெரிவித்தார்.

இஸ்லாமிய அறிவியலும் கல்வி மறுசீராக்கமும் பற்றிய சர்வதேச கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போது, சித்தீக் தொடர்ந்து தெரிவித்ததாவது, மேற்குலகத்தினர், ஆய்வுகளுக்கும் அபிவிருத்திக்கும் பயன்படுத்திய அனைத்து விஞ்ஞானக் கற்கைகளும் பொதுப் பிரயோகத்தில் முழுமையான பயன்பாடற்றவை என்பதை உணர்ந்து கொண்டுள்ளனர்.

குர்ஆனும் பைபிளும் எனும் தலைப்பில் நூலொன்றை எழுதியவரான பிரான்சிய விஞ்ஞானியொருவர், குர்ஆன் மாத்திரமே இயற்கையுடன் தொடர்புடைய அனைத்து விவகாரங்களுக்குமான பதில்களைக் கொண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உண்மையில், இதன்காரணமாகவே மேற்குலக விஞ்ஞானிகள் பலர் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டிருக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சித்தீக்கின் தகவலின்படி, இஸ்லாம் மேற்குலகில் மிக வேகமாகப் பரவி வருகின்றது. அமெரிக்காவில், பள்ளிவாயல்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. யதார்த்தத்தை விளங்கிக் கொண்டமையினால் பல அமெரிக்கர்களும் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டு வருகின்றனர்.

அணுபரவல் மாநாட்டில் ஈரான் பங்கேற்பதை தடுக்கும் உரிமை அமெரிக்காவுக்கில்லை

என்கிறது தெஹ்ரான்
செய்தியாளர்களிடம் பேசிய பின் ,அஹமெதி நெஜாத் அமெரிக்கா பயணமானார்

அணு பரவில் தடுப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா செல்லும் ஈரான் உயர் மட்டக் குழுவிற்கு விசா மறுக்கப்பட்டதை ஈரான் வெளிநாட்டமைச்சர் மெளனாச்சர் மொடாகி கடுமையாகக் கண்டித்துள்ளார். இவ்விடயத்தில் முடிவெடுக்கும் உரிமை அமெரிக்காவுக்கு இல்லை.
ஈரானின் ஜனாதிபதி உட்பட எழுபது பிரதிநிதிகளுக்கும் விசா வழங்கப்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். நியூயோர்க்கில் இன்று 03ம் திகதி முதல் 28ம் திகதி வரை அணு பரவல் தடுப்பு மாநாடு நடைபெறவுள்ளது.
192 நாடுகள் இதில் பங்கேற்கவுள்ளன. பேரழிவு ஆயுதங்களை (அணு ஆயுதம்) அழித்தொழித்து உலகில் அமைதியை நிலைப்படுத்தும் நோக்குடன் இம்மாநாடு நடைபெறுகிறது. இதில் ஈரான், கிழக்குத் திமோர் நாடுகள் பங்கேற்க விரும்பியபோதும் இந்நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இன்னும் விசா வழங்கப்படவில்லை.
இந்நிலையில் ஈரானிலிருந்து சிறு தொகை அதிகாரிகள் பங்கேற்க விசா வழங்கப்பட்டுள்ளதென அறிவித்துள்ள அமெரிக்க உயரதிகாரியொருவர் இதில் அஹ்மெதி நெஜாதும் உள்ளடக்க ப்பட்டுள்ளாரா எனத் தெரியவில்லை என்றார்.
அமெரிக்க காங்கிரஸ் (பாராளுமன்றம்) எம்.பிக்கள் அஹ்மெதி நெஜாத் அமெரிக்கா வருவதை நிராகரித்துள்ளனர். யுரேனியம் செறிவூட்டல் விடயம் தொடர்பாக மேற்குலக நாடுகளுடன் தொடர்ந்தும் அடம்பிடிக்கின்றது.
செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைச் சோதனையிட பிரான்ஸ், ரஷ்யாவுக்கு அனுப்ப மறுக்கும் ஈரான் இதை தங்கள் நாட்டுக்குள் வைத்து ஐ. நா. அதிகாரிகள் சோதனையிட முடியுமெனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
நியூயோர்க் மாநாட்டில் ஈரானின் உண்மைத்தன்மை சமாதான நோக்கம் என்பவற்றை உலகுக்கு விளக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென ஈரான் வெளிநாட்டமைச்சர் வலியுறுத்தினார். இந்நிலையில் ஈரான் ஜனாதிபதி அமெரிக்காவும், இஸ்ரேலும் பயங்கரவாதச் செயல்களுளிலீடுபடுவதற்கான ஆதாரங்கள் தன்னிடமுள்ளதெனத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் நீண்டகாலச் சர்ச்சைக்கு முடிவுகட்ட நியூயோர்க் மாநாட்டில் முடிவு எடுக்கப்படலாமெனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. ஐ. நா. வும் ஈரானுக்கெதிராக நான்காவது தடைகளைக் கொண்டு வருவதற்கான இறுதி ஆயத்தங்களைப் பூர்த்தி செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.
பிந்திய தகவலின்படி விசாக் கிடைக்கப்பெற்று நெஜாத் அமெரிக்கா புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஞாயிறு, 2 மே, 2010

அமெரிக்க கடலில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் பிப்பாய் எண்ணெய் கசிவதாக தகவல்.

அமெரிக்கா - மெக்ஸிகோ வளைகுடா கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவானது லூயிசியானா மாகாணக் கடலோரப் பகுதிகளில் கரை ஒதுங்க ஆரம்பித்துள்ளது. தற்போது அடர்த்தியான எண்ணெய் படிமங்கள் கரையோரத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரம் வரை படிந்து காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கடல் ஆழிப் பகுதியிலுள்ள எண்ணெயை அகழ்வு பகுதிகளில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவமே இந்த எண்ணெய் கசிவிற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் இணைக்கப்பட்டிருந்த குழாய் சிதைவையடுத்து தொடர்ந்து நாளொன்றிற்கு 5ஆயிரம் பீப்பாய்கள் என்ற அளவில் எண்ணெய் கடலில் கசிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எண்ணெய் கசிவு ஏற்படும் இடத்தை அடைத்து கசிவை முழுமையாகத் தடுத்து நிறுத்துவதற்கு 40 தொடக்கம் 90 நாட்கள் வரை எடுக்குமென எண்ணெய் அகழ்விற்கான பிரித்தானிய நிறுவனம் தெரிவித்துள்ளது

சனி, 1 மே, 2010

ஜூனில் ஆப்கானிஸ்தான் காந்தஹார் மீது மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை.

காபூல்:ஆப்கானிஸ்தானில் காந்தஹார் நகரில் செயல்பட்டுவந்த ஐ.நா அலுவலகம் இழுத்து மூடப்பட்டது. பாதுகாப்பு காரணங்கள் என கூறப்பட்டாலும் வருகிற ஜூனில் நேட்டோ படையினர் நடத்தவிருக்கும் தாக்குதலை முன்னிட்டுத்தான் ஐ.நா அலுவலகம் மூடப்பட்டது என கூறப்படுகிறது. வெளிநாடுகளைச் சார்ந்த பணியாளர்களிடம் காபூல் தலைமை அலுவலகத்திற்கு செல்லவும், ஆப்கானிஸ்தான் பணியாளர்கள் சிறிதுகாலம் வீட்டிலிருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக ஐ.நா செய்தித் தொடர்பாளர் சூசன் மானுவல் தெரிவித்தார்.

40 வெளிநாட்டு பணியாளர்களிருந்த அலுவலகத்தில் தற்பொழுது 10க்கும் குறைவான பணியாளர்களே உள்ளனர். மக்கள் வசிக்கும் பகுதியில் செயல்படும் அலுவலகத்திற்கு தாக்குதல் பீதி உள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அலுவலகத்தை மூடுவதாக ஐ.நா செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.ஆனால்,அத்தகைய சூழல் தற்பொழுது இல்லை என்றும், அலுவலகத்தை மாற்றியது கண்டிக்கத்தக்கது என்றும் மாகாண மேயர் அஹ்மத் வலி கர்ஸாயி தெரிவித்தார்.

அமெரிக்காவின் நிர்பந்தத்தின் அடிப்படையில் தான் ஐ.நா அலுவலகம் காந்தஹாரில் மூடப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜூனில் நடைபெறும் ராணுவ நடவடிக்கையில் ஆப்கான் ராணுவத்தினர் உட்பட 23000 பேர் பங்குபெறுவர் என கூறப்படுகிறது. தற்பொழுது பணியிலுள்ள 8 ஆயிரம் அமெரிக்க-கனடா அந்நிய ஆக்கிரமிப்பு ராணுவத்தினருடன் புதியதாக வரும் 3500 அமெரிக்க அந்நிய ஆக்கிரமிப்பு படையினரும் இந்த ராணுவ நடவடிக்கையில் கலந்துக் கொள்வர்.

6700 ஆப்கான் ராணுவத்தினரும் இதில் பங்குபெறுவர். அமெரிக்க அந்நிய ஆக்கிரமிப்பு படையினர் நடத்தவிருக்கும் அக்கிரம ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக போராளிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்நிய ஆக்கிரமிப்பு அக்கிரம் ராணுவ நடவடிக்கைக்கு கடுமையான பதிலடியைக் கொடுப்போம் என அவர்கள் கூறியுள்ளனர்

நான் ஆண் இல்லை என்கிறார் நித்தியானந்தா _

நான் ஆண் இல்லை. எந்த வழிகளிலும் நான் பெண்களோடு பாலியலில் ஈடுபடவில்லை என சுவாமி நித்தியானந்தா சி.ஐ.டியினரிடம் தெரிவித்துள்ளார்.

நித்தியானந்தாவின் கடவுச் சீட்டில் அவர் ஓர் ஆண் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் முழுமையான விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் சி.ஐ.டி.யினர் தெரிவித்துள்ளனர். அவர் வௌ;வேறு 5 பெண்களிடம் பாலியலில் ஈடுபட்டமை தொடர்பிலான 36 வீடியோ நாடாக்களை விசேட பரிசோதனைக்கென அனுப்பிவைத்துள்ளனர்.