திங்கள், 3 மே, 2010

பைதுல்லா மெசூத் ஒளிநாடாவில் தோன்றி அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

பாகிஸ்தானில் இயங்கும் தலி பான்களின் தலைவர் பைதுல்லா மெசூத் ஒளிநாடாவில் தோன்றி அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தார். தலிபான்களின் இணைய தளத்தில் ஒன்பது நிமிடங்கள் இந்த ஒளி நாடா காண்பிக்கப்பட்டது.

ஏப்ரல் 04 ம் திகதி இந்த ஒளி நாடா எடுக்கப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது. அமெரிக்க நகரங்கள், நலன்கள், இராணு வங்களைத் தாக்குமாறு தனது சகாக்களுக்கு பைதுல்லா மெசூத் கட்டளையிட்டார். ஆங்கில மொழி யில் இவரது உரை அமைந்திருந்தது. ஹகிமுல்லா மெசூதைக் கொன்ற மைக்காக அமெரிக்கா மீதான தாக்குதல் தொடருமென பைதுல்லா மெசூத் சூளுரைத்தார்.

இத்த னைக்கும் பைதுல்லா மெசூத் ஜனவரி மாதம் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான், அமெரிக்க அரசாங் கங்கள் அறிவித்தன. இவர் வீடி யோவில் தோன்றி உரையாற்றி யதால் பைதுல்லா மெசூத் தொடர் பான உண்மைத் தன்மை தொட ர்ந்தும் கேள்விக்குள்ளாகியுள்ளது. ஒளிநாடாவில் முகமூடியணிந்த இருவர் பைதுல்லா மெசூதுக் கருகாமையில் நின்று கொண்டி ருந்தனர். இந்த வீடியோ தொடர் பாக அமெரிக்க, பாகிஸ்தான் அரசுகள் உடனடியாக எதையும் தெரிவிக்கவில்லை.

கருத்துகள் இல்லை: