சனி, 13 நவம்பர், 2010

ஈராக்கின் புதிய அரசு உருவாக்கம்: கட்சிகள் சம்மதம்

 பாக்தாத்,நவ.12:தேர்தல் முடிவடைந்து 8 மாதங்கள் கழித்து புதிய அரசை உருவாக்க ஈராக் அரசியல் கட்சிகள் ஒப்பந்தம் மேற்கொண்டன.

ஷியா பிரிவு தலைவரான நூரி அல் மாலிகி பிரதமராக தொடர்வார். சுன்னி பிரிவினருக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படும். சுன்னி தலைவர் இயாத் அல்லாவி தேசிய கொள்கை வகுக்கும் கமிட்டியின் தலைவராக பதவி வகிப்பார். அதிபராக குர்து இனத்தைச் சார்ந்தவர் பதவி ஏற்பார். இந்த ஒப்பந்தம் ஈராக் மக்களின் வெற்றி எனக்கூறிய பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தராக பணியாற்றிய குர்துகளின் உள்ளூர் தலைவரான மஸ்ஊத் பர்ஸானி இறைவனுக்கு நன்றி தெரிவித்தார்.

முன்னாள் பிரதமரும் சுன்னி பிரிவு தலைவருமான அல்லாவியின் ஆதரவு கிடைத்தது மூலம் நூரி அல் மாலிக்கிக்கு பிரதமராக தொடரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏதேனும் பிரிவு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றதா? திருப்தியாக உள்ளதா? என்பதை பரிசோதிக்கவும் தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒப்பந்தம் அனுமதியளித்துள்ளது.

குர்து தலைவரும் தற்போதைய அதிபரான ஜலால் தலபானி அதே பதவியில் தொடர்வார் எனத் தெரிகிறது. சபாநாயகரையும், துணை சபாநாயகரையும் பாராளுமன்றம் கூடி தேர்ந்தெடுக்கும். அமைச்சரவை உறுப்பினர்களை தீர்மானிக்க ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அரசு உருவாக்கத்தில் ஈரான் முக்கிய பங்கு வகித்ததாக மாலிக்கியின் எதிராளிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். பாராளுமன்றத்தில் 40 இடங்களைக் கொண்ட ஷியா போராளி பிரிவு தலைவர் முக்ததா அல்ஸத்ர் அரசு உருவாக மாலிக்கியை ஆதரிப்பதாக கடந்த மாதம் இறுதியில் அறிவித்ததைத் தொடர்ந்து அரசு உருவாக்கம் எளிதானது

புஷ்ஷை விசாரணைச் செய்யவேண்டும்: ஆம்னஸ்டி இண்டர்நேஷனல்

லண்டன்,நவ.12:சிறைக்கைதிகளை சித்திரவதைச் செய்ய அனுமதி வழங்கிய அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் w புஷ்ஷை விசாரணை செய்யவேண்டும் என சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் ரகசிய சிறைகளில் அடைக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தும் வேளையில் வாட்டர் போர்டிங் என்றழைக்கப்படும் தண்ணீரில் முகத்தை கட்டி ஆழ்த்தி மூச்சுமுட்டச் செய்யும் சித்திரவதைச் செய்தலுக்கு அனுமதியளித்ததாக ஜார்ஜ் w புஷ் சமீபத்தில் வெளியிட்ட டிவிசன் பாயிண்ட் என்ற நினைவுக் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 11 ஆம் தேதிக்கு பிறகு ஆறு தினங்கள் கழித்து அமெரிக்காவிற்கு வெளியே சி.ஐ.ஏ ரகசிய சிறைக் கொட்டடிகளை நிர்மாணித்தது.

பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற பெயரில் சி.ஐ.ஏ சிறைக் கைதிகளுக்கெதிராக மனித உரிமை மீறல்களை கட்டவிழ்த்துவிட்டதாக ஆம்னஸ்டி குற்றஞ்சாட்டுகிறது. கடந்த மாதம் எட்டாம் தேதி ஒரு நேர்முகத்தில் ஜார்ஜ் w புஷ் இதனை ஒப்புக்கொண்டிருந்தார்.

சித்திரவதைக்கெதிரான ஐ.நா கன்வென்சனின் தீர்மானத்தின் படி புஷ்ஷையும், அவரது கூட்டாளிகளையும் விசாரணைச்செய்ய வேண்டுமென ஆம்னஸ்டி கோரியுள்ளது. புஷ்ஷே இதனை ஒப்புக்கொண்டதால் சர்வதேசச் சட்டத்தின்படி விசாரணை மேற்கொள்ள இயலும் என ஆம்னஸ்டி விளக்கமளித்துள்ளது

ஜி-20 உச்சிமாநாடு:சியோலில் ஆயிரக்கணக்கானோர் கண்டனப் போராட்டம்

சியோல்,நவ.12: ஜி-20 உச்சிமாநாட்டிற்கு வருகைத் தந்த உலகத் தலைவர்களுக்கெதிராக ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. தங்களின் நீண்டகால கோரிக்கைகளைக் குறித்து அரசு பாராமுகமாக உள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர். வளர்ச்சி தொடர்பான சச்சரவுகளையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

ஃபிடல் காஸ்ட்ரோவைக் கொலைச் செய்யும் வீடியோ கேமிற்கெதிராக கியூபா

ஹவானா,நவ.12:ஃபிடல் காஸ்ட்ரோ அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கியூபாவின் 84 வயது கம்யூனிச தலைவர்.