சனி, 4 டிசம்பர், 2010

அண்டை நாடுகளின் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் - ஈரான்

 மனாமா,டிச.5:ஈரான் நம்மீது தாக்குதல் நடத்திவிடுமோ என்ற பயம் அரபு நாடுகளுக்கு தேவையில்லை என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் மனுஷஹர் முத்தகி அறிவித்துள்ளார்.
ஈரான் அண்டை நாடுகளை தாக்குவதற்கான வாய்ப்புள்ளதாக அண்மையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளித்துள்ளார் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்.