செவ்வாய், 30 நவம்பர், 2010

விக்கிலீக்ஸ்: குவாண்டனாமோ சிறைக் கைதிகளை ஏற்றுக்கொள்ளுங்கள் - உலக நாடுகளிடம் அமெரிக்கா கெஞ்சல்

வாஷிங்டன்,டிச.1:குவாண்டனாமோ சிறைக் கொட்டடியை இழுத்து மூடுவதாக அறிவித்த அமெரிக்கா, அதேவேளையில் அங்கு அடைக்கப்பட்டிருந்த சிறைக் கைதிகளை என்னச் செய்வது? என்று தெரியாமல் குழம்பிப் போயுள்ளதாகவும், இவர்களை ஏற்றுக்கொள்ளுமாறு உலகின் பல்வேறு நாடுகளை கெஞ்சிக் கேட்டதாகவும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ரகசிய ஆவணங்கள் கூறுகின்றன.

விக்கிலீக்ஸ்:அஜன்ஜாவுக்கு எதிராக உளவுவேலைப் பார்த்ததாக வழக்கு தொடர அமெரிக்கா முடிவு

வாஷிங்டன்,டிச.1:சட்டவிரோதமாக அரசு ரகசிய ஆவணங்களை வெளியிட்டதன் பேரில் விக்கிலீக்ஸ் இணையதள ஸ்தாபகர் ஜூலியன் அஸன்ஜாவுக்கு எதிராக உளவுவேலைப் பார்த்ததாக வழக்கு தொடர அமெரிக்கா முடிவுச் செய்துள்ளது.

திங்கள், 29 நவம்பர், 2010

ஈரான் அணுசக்தி விஞ்ஞானி குண்டுவெடிப்பில் படுகொலை

டெஹ்ரான்,நவ.30:ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்த குண்டுவெடிப்பில் ஈரான் அணுசக்தி விஞ்ஞானி கொல்லப்பட்டார்.

டெஹ்ரானில் ஷாஹித் பெஹெஸ்தி பல்கலைக்கழகத்தில் மாஜித் ஷஹரியார்தான் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட அணுசக்தி விஞ்ஞானியாவார்.

காஸ்ஸா மீது தாக்குதல் நடத்துவதை முன்னரே அப்பாஸிற்கு தெரிவித்திருந்தது இஸ்ரேல்

விக்கிலீக்ஸ்:
டெல்அவீவ்,நவ.30:இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஃபலஸ்தீன் காஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதல் குறித்து முன்னரே ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் உள்ளிட்ட ஃபத்ஹ் தலைவர்களுக்கும், எகிப்திற்கும் தகவலை இஸ்ரேல் தெரிவித்திருந்தது என விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசிய தூதரக ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் ராணுவ அமைச்சர் யஹூத் பாரக் அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிக் குழுவிடம் தெரிவித்த விபரங்கள்தான் இதில் அடங்கியுள்ளன.

ஆபரேசன் காஸ்ட் லீட் என்றழைக்கப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலைக் குறித்து எகிப்து மற்றும் ஃபத்ஹ் தலைவர்களுடன் விவாதிக்கப்பட்டதாகவும், ஹமாஸை தோற்கடித்தால் காஸ்ஸாவின் கட்டுப்பாட்டை ஏற்பதற்கு விருப்பமுண்டா? என விசாரித்ததாகவும் பாரக் கூறுகிறார். ஆனால், இருவரும் வாக்குறுதியை மீறியதாக 2009 ஜூன் மாதம் இரண்டாம் தேதி நடத்தப்பட்ட உரையாடலில் கூறப்பட்டுள்ளது. இதனைக் குறித்து இஸ்ரேல் பதிலளிக்கவில்லை

உலகத் தலைவர்களுக்கு அமெரிக்கா சூட்டிய பெயர்கள்

நவ,30:* ஐரோப்பிய தலைவர்களில் வலிமையற்றவர், முட்டாள், திறமையற்றவர் என, இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியை ரோமில் உள்ள அமெரிக்க தூதர் குறிப்பிடுகிறார்.

* லிபியா தலைநகர் டிரிபோலியில் உள்ள அமெரிக்க தூதரகம், லிபியா அதிபர் கடாபி, தனது உக்ரேனிய நாட்டு நர்ஸ் பெண் ஒருவருடன் எப்போதும் திரிவதாகவும், மிக உயரமான கட்டடங்களில் தங்குவதற்கு அவர் பயப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

* ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகம், ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினை 'ஆல்பா டாக்' என்று குறிப்பிடுகிறது. மேலும், இத்தாலி அதிபருக்கும் அவருக்கும் இடையில் உள்ள நெருக்கத்தைப் பற்றியும் விமர்சிக்கிறது.

* வடகொரிய அதிபர் கிம் ஜாங் இல், 'வயதான பேர்வழி' என்றும், ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத், 'ஹிட்லர்' என்றும் விமர்சிக்கப்படுகின்றனர்.

* தென்னாப்ரிக்காவின் வெளியுறவு அமைச்சர், ஜிம்பாப்வே அதிபருடன் ஒப்பிடப்பட்டு 'பித்துப்பிடித்த வயதானவர்' என்று கூறப்படுகிறார்.

*ஆப்கான் அதிபர் கோமாளி என்றழைக்கப்படுகிறார்.

விக்கிலீக்ஸ் வெளியிட்டது அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள்

வாஷிங்டன்/லண்டன்,நவ.29:அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள், தூதரக நடவடிக்கைகள் உள்ளிட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த ரகசிய ஆவணங்களை வெளியிட்டு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது விக்கிலீக்ஸ் இணையதளம்.

ஞாயிறு, 28 நவம்பர், 2010

ஈராக் விமானநிலையப் பணியாளரை அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது

பாக்தாத்,நவ.29:ராணுவ அணிவரிசைக்கு அருகே வாகனத்தை ஓட்டிச் சென்ற ஈராக் விமானநிலைய பணியாளரை அமெரிக்க ராணுவம் அநியாயமாக சுட்டுக் கொன்றுள்ளது.

தங்களை தாக்கவருகிறார் என தவறாக புரிந்துக் கொண்டதன் விளைவாகவே அவரை சுட்டதாக சமாதானம் கூறுகிறது அமெரிக்க ராணுவ வட்டாரம்.

பாக்தாத் சர்வதேச விமானநிலையத்தில் பணியாற்றும் கரீம் உபைத் பர்தான் என்பவர்தான் சுட்டுக் கொல்லப்பட்ட நபராவார். ராணுவ அணிவரிசைக்கு அருகே வாகனத்தை ஓட்டிவரும் பொழுது கரீம் ஹெட்லை போடுவது, வேகத்தை குறைப்பது போன்ற கட்டளைகளை கவனிக்காமலிருந்ததுதான் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தக் காரணம் என அமெரிக்க,ஈராக் ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

:ஈரானை தாக்க வேண்டுமென அரபு நாடுகள் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்ததாக தகவல்

நவ.29:ஈரான் மீது தாக்குதல் நடத்தி அந்த விஷப் பாம்பின் தலையை அறுக்கவேண்டும் எனவும் அரபு நாடுகள் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்தது, ஐ.நா தலைமையின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணிக்க அமெரிக்க அரசுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் உத்தரவிட்டது உள்ளிட்ட மிக ரகசியமான ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு அமெரிக்க தூதரகங்கள் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அனுப்பிய 251287 செய்திகளில் 200ஐ விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. இதுத்தொடர்பான மேலும் விபரங்கள் விரைவில் வெளியாகும்

விக்கிலீக்ஸ்:பிரிட்டனிலும் பீதி

 லண்டன்,நவ.28:விக்கிலீக்ஸ் இணையதளம் புதிதாக வெளியிடவிருக்கும் ரகசிய ஆவணங்களால் பிரிட்டன் அதிகாரிகள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

தங்களின் தனிப்பட்ட தொடர்புகளைக் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த சில விபரங்கள் வெளிவர வாய்ப்பிருப்பதாக பிரிட்டன் பிரதமர் டேவிட் காமரூனிடம் லண்டனில் அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார். இதற்காக அவர் டவுனிங் ஸ்ட்ரீட்டிற்கு வருகைத் தந்தார்.

லண்டனில் அமெரிக்க தூதரகம் வாஷிங்டனிற்கு அனுப்பிய சில விபரங்களையும் விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்டன் ப்ரவுனின் தனிப்பட்டத் தன்மை, பொதுத் தேர்தலில் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக் குறித்து அமெரிக்காவின் மதிப்பீடு, லோக்கர்பி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் லிபியாவுக்கு சென்றதுத் தொடர்பாக நடந்த ரகசிய பேச்சுவார்த்தைகள் ஆகியன வெளியாகும் என பீதியில் ஆழ்ந்துள்ளது பிரிட்டன்.

அமெரிக்காவும், பிரிட்டனும் இணைந்து பிரான்சுக்கு எதிராக நடத்திய முயற்சிகள் இதில் வெளியாகும் எனத் தெரிகிறது.

துருக்கியில் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள குர்து இனத்தவருக்கு அமெரிக்கா அளித்த உதவியும் விக்கிலீக்ஸ் வெளியிடும் ஆவணங்களில் அடங்கும் என வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆவணங்கள் வெளியானால் பல நாடுகளும் அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் சூழல் ஏற்படும் என அஞ்சி அமெரிக்கா பல நாடுகளுடன் அவசரமாக தொடர்புக்கொண்டு வருகிறது

அல்காயிதாவுடன் தொடர்பு:சவூதியில் 149 பேர் கைது

ரியாத்,நவ.28:கடந்த எட்டு மாதங்களுக்கிடையே அல்காயிதா இயக்கத்துடன் தொடர்புடைய 149 பேரை கைதுச் செய்துள்ளதாக சவூதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோர்களுக்கெதிரான தாக்குதல் திட்டங்களை முறியடித்து விட்டதாகவும் சவூதி உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் மன்சூர் இப்னு துர்க்கி தெரிவித்துள்ளார்.

சனி, 27 நவம்பர், 2010

சோமாலியா:ஒருவருடத்தில் கொல்லப்பட்ட சிவிலியன்கள்

மொகாதிஷு,நவ.27:போராளிகளுக்கும் அரசுப் படையினருக்கும் இடையே மோதல் நிகழ்ந்து வரும் சோமாலியா தலைநகரான மொகாதிஷுவில் இந்த ஆண்டு கொல்லப்பட்ட சாதாரண மக்களின் எண்ணிக்கை 2100 ஆகும்.

தலைநகரின் பக்கார சந்தையை நோக்கி ஆப்பிரிக்கா யூனியன் ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில்தான் 80 சதவீத சிவிலியன்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதனை லைஃப் லைன் ஆப்ரிக்கா ஆம்புலன்ஸ் சர்வீஸ் இயக்குநர் அலி மூஸ் தெரிவிக்கிறார்.

155 சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியாருக்கு ஏழு ஆண்டு சிறை

பெர்லின்,நவ.27:பாலகர்களை பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் கத்தோலிக்க பாதிரியாருக்கு ஜெர்மன் நீதிமன்றம் ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

155 சிறுவர்களை இவர் பாலியல் கொடுமைச் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. 50 வயது பாதிரியாரான இவர் காஸ்ஸல் நகரத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் பணியாற்றி வந்தார்.

புகைபிடிப்பவர்கள் வெளியிடும் புகையினால் மரணிப்பவர்கள் ஆறு லட்சம் பேர்

வாஷிங்டன்,நவ.27:புகைப்பிடிப்பவர்கள் வெளிவிடும் புகையினால் உலகில் ஆண்டிற்கு ஆறு லட்சம்பேர் மரணிக்கின்றார்கள் என உலக சுகாதாரமையம் புள்ளிவிபரம் வெளியிட்டுள்ளது.

இவ்வாய்வு 192 நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவோர் குழந்தைகளாவர். குழந்தைகளுக்கு நிமோனியா, ஆஸ்துமா போன்ற நோய்கள் உருவாக இது காரணமாகிறது.

ஃபலஸ்தீன்:யெர்ஸா கிராமத்தில் மஸ்ஜிதை இடித்துத் தள்ளிய இஸ்ரேல்

ஃபலஸ்தீன் மேற்குகரையில் யெர்ஸா கிராமத்தில் அமைந்திருந்த மஸ்ஜித் ஒன்றை இஸ்ரேலிய ராணுவம் இடித்து தள்ளியது.

ராணுவ புல்டோஸரை பயன்படுத்தி மஸ்ஜிதையும் இதர 10 கட்டிடங்களையும் ராணுவம் இடித்துத் தள்ளியது. இக்கட்டிடங்களும், மஸ்ஜிதும் ராணுவ பிராந்தியத்தில் கட்டப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.

மிகவும் பழமையான மஸ்ஜிதையும், அதனுடன் இணைந்து கட்டப்பட்டிருந்த கட்டிடத்தையும் இடித்து தள்ளிய இஸ்ரேலிய ராணுவம் அத்துடன் ஆடுகளை வளர்ப்பதற்காக பயன்படுத்திய 10 இதர கட்டிடங்களையும் இடித்துத் தள்ளியுள்ளது.

ராணுவ பிராந்தியத்தில் அனுமதியில்லாமல் கட்டப்பட்ட 10 கட்டிடங்களை இடித்துள்ளதாக இஸ்ரேலிய உள்துறை அமைச்சகம் கூறுகிறது.

இஸ்ரேலின் பூரண கட்டுப்பாட்டிலிலுள்ள மேற்குகரையின் சி பிராந்தியத்தில் அமைந்துள்ளது யெர்ஸா கிராமம். இங்கு எதனை கட்டவேண்டுமானாலும் இஸ்ரேலின் அனுமதியை பெறவேண்டும். கட்டிட நிர்மாணத்திற்கான 95 சதவீத மனுக்களையும் நிராகரிப்பதுதான் இஸ்ரேலின் வழக்கம்.

இதற்கிடையே மேற்குகரையில் யத்தா கிராமத்தில் 18 பேர் வசிக்கும் வீடு ஒன்றை இஸ்ரேல் ராணுவம் இடித்துத் தள்ளியுள்ளது. இதற்கான காரணம் கூறப்படவில்லை.

போலி தாலிபான் கமாண்டரை பேச்சுவார்த்தை நடத்த அனுப்பியது

ஆப்கானிஸ்தான் அரசுடன் முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தாலிபான் கமாண்டர் எனக்கூறி போலியான நபரை அனுப்பியவர்கள் பிரிட்டீஷ் அதிகாரிகள் என ஆப்கன் அதிபர் ஹமீத் கர்ஸாயியின் பணிப் பிரிவுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

தாலிபானின் மூத்த தலைவரான முல்லா முஹம்மத் மன்சூர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட இந்நபர் ஆப்கான் அதிகாரிகளுடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியதோடு ஆயிரக்கணக்கான டாலர் பணத்தை சுருட்டிச் சென்றுவிட்டார்.

இவர் பாகிஸ்தானின் குவாட்டா பகுதியில் கடை நடத்தும் நபராவார் என பின்னர் தெரியவந்தது.

பிரிட்டன் தூதரக அதிகாரிகள்தான் இவரை தாலிபான் கமாண்டர் எனக்கூறி கர்ஸாயிடம் அனுப்பியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆனால், இதனைக் குறித்து பதில் கூற பிரிட்டன் தூதரகம் மறுத்துவிட்டது.

அதேவேளையில் பிரிட்டன் உளவு நிறுவனமான எம்.ஐ6 தான் போலி தாலிபான் கமாண்டரை அனுப்பியதாக டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானைச் சார்ந்த அந்த நபரின் வாய்ஜாலத்தில் உளவுத்துறை அதிகாரிகள் வீழ்ந்துவிட்டார்கள் என கருதப்படுகிறது. தாலிபானுடன் சமரசம் சாத்தியமாக்கலாம் என வாக்குறுதி அளித்த இந்நபர் பணத்தை கைப்பற்றியுள்ளார். இவரைப் பற்றி விபரங்களை பரிசோதிப்பதில் அமெரிக்காவும் உதவியதாக கருதப்படுகிறது.

இச்சம்பவத்தில் ஏற்பட்ட அபத்தத்திற்கு பிரிட்டன் மட்டும் காரணமல்ல எனவும் மற்றவர்களுக்கும் இதில் பங்குண்டு என காந்தஹாரில் அமெரிக்க பிரதிநிதி பில் ஹாரிஸ் கூறுகிறார்.

வெள்ளி, 26 நவம்பர், 2010

தொன்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி:

 அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து நடத்த திட்டமிட்டிருக்கும் கூட்டு கடற்படை ராணுவ பயிற்சி இப்பிராந்தியத்தை போரின் விளிம்பிற்கு கொண்டு செல்லும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை துவங்கவிருக்கும் கூட்டு ராணுவ பயிற்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்க விமானந்தாங்கி கப்பலான யு.எஸ்.எஸ் வாஷிங்டன் உள்ளிட்ட கப்பல்கள் கொரிய கடற்பகுதியை நோக்கி விரைந்துக் கொண்டிருக்கின்றன.
வடகொரியா மற்றும் தென்கொரியாவுக்கிடையே நேற்று முன்தினம் நடந்த பீரங்கித் தாக்குதல் இப்பிராந்தியத்தில் போர்சூழலை உருவாக்கியது. இத்தாக்குதலில் இரண்டு ராணுவத்தினரும், இரண்டு சிவிலியன்களும் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே ராஜினாமாச் செய்த தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் கிம்ரேயங்குக்கு பதிலாக முன்னாள் கூட்டுப்படை கட்டளைப் பிரிவு பிரதிநிதி தலைமை அதிகாரியாக பணியாற்றிய லீஹீவோன் புதிய பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

யோன்பியோங் தீவில் வடகொரியா நடத்திய தாக்குதலுக்கு உடனடியாக பதிலடிக் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சர் கிம்ரேயங் ராஜினாமாச் செய்திருந்தார்.

வடகொரியாவுக்கெதிரான போர் பயிற்சி நடத்த திட்டமிட்டுள்ள முட்டாள்தனமான முடிவு பிராந்தியத்தை போரின் விளிம்பிற்கு கொண்டு செல்வதாக வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கெ.சி.என்.எ செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளையில் யோன்பியோங் தீவில் நேற்றும் பீரங்கி சப்தம் கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனைக் குறித்து விசாரித்து வருவதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வடகொரியாவின் எல்லைக்கு அருகில் நடந்த குண்டுவெடிப்பின் சப்தமாக இது இருக்கலாம் என பி.பி.சி கூறுகிறது. தென்கொரியாவின் போர் பிரியர்கள் கோபத்தை தூண்டினால் இனிமேலும் தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

குவைத்-ஈராக் எல்லை முடிவுக்கு வந்தது

ஈராக் மற்றும் குவைத் நாடுகளுக்கிடையே பல ஆண்டுகளாக நிலவி வந்த எல்லைத் தகராறுக்கு பரிகாரம் ஏற்பட்டுள்ளது.தகராறு தொடர்பாக இருநாடுகளும் ஒப்பந்தம் செய்துள்ளதாக குவைத் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அரப் வேர்ல்ட் துறை தலைவர் ஜாஸிம் அல் முபாரக்கி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின்படி இருநாடுகளும் எல்லையில் 500 மீட்டர் இடத்தை ஆளில்லா நிலமாக ஒதுக்கும். ஈராக்கி விவசாயிகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என அல்ஸெயாஸாஹ் தின இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

எல்லையில் வசிக்கும் விவசாயிகளுக்காக ஈராக்கின் உள்புறம் குவைத் 50 வீடுகளை நிர்மாணித்து வழங்கும். இரு நாடுகளும் ஒதுக்கும் 500 மீட்டர் இடத்தில் எல்லை போலீசாரின் செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

இருநாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகங்களின் கமிஷனுகளுக்கிடையே சமீபத்தில் நடந்த சந்திப்பின்போது இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஈராக்கின் குவைத் ஆக்கிரமிப்பிற்கு பிறகு 1993 ஆம் ஆண்டு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானத்தில் இரு நாடுகளின் எல்லையை நிர்ணயித்திருந்தது.

ஈராக் கைப்பற்றிய சில பிரதேசங்கள் குவைத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. இருநாடுகளும் நிபந்தனைகளை கடைப்பிடிக்காததால் பிரச்சனைகள் நிலவி வந்தன.

விக்கிலீக்ஸ் வெளியிடப்போகும் ரகசிய ஆவணங்கள்: பீதியில் அமெரிக்கா



வாஷிங்டன்,நவ.27:விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிடவிருக்கும் ரகசிய ஆவணங்கள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதன், 24 நவம்பர், 2010

ஆப்கன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலி தாலிபான் கமாண்டர்

வாஷிங்டன்,நவ.24:மூத்த தாலிபான் கமாண்டர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ஆப்கான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர் போலி என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சனி, 20 நவம்பர், 2010

39 சதவீத அமெரிக்கர்களுக்கு திருமணம் புளித்துப் போய்விட்டது

வாஷிங்டன்,நவ.20:அமெரிக்கா திருமணத்தை மறந்துவிடுமா? என்றதொரு கேள்வி எழுந்துள்ளது.

இந்த சந்தேகத்திற்கு காரணம், சமீபத்தில் டைம் இதழுடன் இணைந்து அமெரிக்காவில் வியூ ரிசர்ச் செண்டர் நடத்திய ஆய்வில் 39 சதவீத அமெரிக்கர்களுக்கும் திருமணம் புளித்துப்போன பழங்கஞ்சியாக மாறிவிட்டது தெரியவந்துள்ளது.

தாரிக் அஸீஸை தூக்கிலிடக் கோரும் உத்தரவில் கையெழுத்திடமாட்டேன் -

பாக்தாத்,நவ.20:முன்னாள் ஈராக் அதிபர் சதாம் ஹுசைனின் வலங்கரமாக செயல்பட்ட கிறிஸ்தவ சமூகத்தைச் சார்ந்த தாரிக் அஸீஸை தூக்கிலிடக் கோரும் ஈராக் அரசின் உத்தரவில் கையெழுத்திட மாட்டேன் என அந்நாட்டு அதிபர் ஜலால் தலபானி அறிவித்துள்ளார்.

ஈரானுக்கெதிரான ஐ.நா தீர்மானம் - வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளாத இந்தியா

ஐ.நா,நவ.20:ஈரான், மியான்மர் மற்றும் வடகொரியாவில் நடைபெறுவதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களை கண்டிப்பதற்காக ஐ.நா வின் மனித உரிமை அமைப்பு தயாராக்கிய தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்கவில்லை.

சனி, 13 நவம்பர், 2010

ஈராக்கின் புதிய அரசு உருவாக்கம்: கட்சிகள் சம்மதம்

 பாக்தாத்,நவ.12:தேர்தல் முடிவடைந்து 8 மாதங்கள் கழித்து புதிய அரசை உருவாக்க ஈராக் அரசியல் கட்சிகள் ஒப்பந்தம் மேற்கொண்டன.

ஷியா பிரிவு தலைவரான நூரி அல் மாலிகி பிரதமராக தொடர்வார். சுன்னி பிரிவினருக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படும். சுன்னி தலைவர் இயாத் அல்லாவி தேசிய கொள்கை வகுக்கும் கமிட்டியின் தலைவராக பதவி வகிப்பார். அதிபராக குர்து இனத்தைச் சார்ந்தவர் பதவி ஏற்பார். இந்த ஒப்பந்தம் ஈராக் மக்களின் வெற்றி எனக்கூறிய பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தராக பணியாற்றிய குர்துகளின் உள்ளூர் தலைவரான மஸ்ஊத் பர்ஸானி இறைவனுக்கு நன்றி தெரிவித்தார்.

முன்னாள் பிரதமரும் சுன்னி பிரிவு தலைவருமான அல்லாவியின் ஆதரவு கிடைத்தது மூலம் நூரி அல் மாலிக்கிக்கு பிரதமராக தொடரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏதேனும் பிரிவு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றதா? திருப்தியாக உள்ளதா? என்பதை பரிசோதிக்கவும் தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒப்பந்தம் அனுமதியளித்துள்ளது.

குர்து தலைவரும் தற்போதைய அதிபரான ஜலால் தலபானி அதே பதவியில் தொடர்வார் எனத் தெரிகிறது. சபாநாயகரையும், துணை சபாநாயகரையும் பாராளுமன்றம் கூடி தேர்ந்தெடுக்கும். அமைச்சரவை உறுப்பினர்களை தீர்மானிக்க ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அரசு உருவாக்கத்தில் ஈரான் முக்கிய பங்கு வகித்ததாக மாலிக்கியின் எதிராளிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். பாராளுமன்றத்தில் 40 இடங்களைக் கொண்ட ஷியா போராளி பிரிவு தலைவர் முக்ததா அல்ஸத்ர் அரசு உருவாக மாலிக்கியை ஆதரிப்பதாக கடந்த மாதம் இறுதியில் அறிவித்ததைத் தொடர்ந்து அரசு உருவாக்கம் எளிதானது

புஷ்ஷை விசாரணைச் செய்யவேண்டும்: ஆம்னஸ்டி இண்டர்நேஷனல்

லண்டன்,நவ.12:சிறைக்கைதிகளை சித்திரவதைச் செய்ய அனுமதி வழங்கிய அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் w புஷ்ஷை விசாரணை செய்யவேண்டும் என சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் ரகசிய சிறைகளில் அடைக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தும் வேளையில் வாட்டர் போர்டிங் என்றழைக்கப்படும் தண்ணீரில் முகத்தை கட்டி ஆழ்த்தி மூச்சுமுட்டச் செய்யும் சித்திரவதைச் செய்தலுக்கு அனுமதியளித்ததாக ஜார்ஜ் w புஷ் சமீபத்தில் வெளியிட்ட டிவிசன் பாயிண்ட் என்ற நினைவுக் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 11 ஆம் தேதிக்கு பிறகு ஆறு தினங்கள் கழித்து அமெரிக்காவிற்கு வெளியே சி.ஐ.ஏ ரகசிய சிறைக் கொட்டடிகளை நிர்மாணித்தது.

பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற பெயரில் சி.ஐ.ஏ சிறைக் கைதிகளுக்கெதிராக மனித உரிமை மீறல்களை கட்டவிழ்த்துவிட்டதாக ஆம்னஸ்டி குற்றஞ்சாட்டுகிறது. கடந்த மாதம் எட்டாம் தேதி ஒரு நேர்முகத்தில் ஜார்ஜ் w புஷ் இதனை ஒப்புக்கொண்டிருந்தார்.

சித்திரவதைக்கெதிரான ஐ.நா கன்வென்சனின் தீர்மானத்தின் படி புஷ்ஷையும், அவரது கூட்டாளிகளையும் விசாரணைச்செய்ய வேண்டுமென ஆம்னஸ்டி கோரியுள்ளது. புஷ்ஷே இதனை ஒப்புக்கொண்டதால் சர்வதேசச் சட்டத்தின்படி விசாரணை மேற்கொள்ள இயலும் என ஆம்னஸ்டி விளக்கமளித்துள்ளது

ஜி-20 உச்சிமாநாடு:சியோலில் ஆயிரக்கணக்கானோர் கண்டனப் போராட்டம்

சியோல்,நவ.12: ஜி-20 உச்சிமாநாட்டிற்கு வருகைத் தந்த உலகத் தலைவர்களுக்கெதிராக ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. தங்களின் நீண்டகால கோரிக்கைகளைக் குறித்து அரசு பாராமுகமாக உள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர். வளர்ச்சி தொடர்பான சச்சரவுகளையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

ஃபிடல் காஸ்ட்ரோவைக் கொலைச் செய்யும் வீடியோ கேமிற்கெதிராக கியூபா

ஹவானா,நவ.12:ஃபிடல் காஸ்ட்ரோ அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கியூபாவின் 84 வயது கம்யூனிச தலைவர்.

வியாழன், 11 நவம்பர், 2010

இஸ்ரேலின் அடாவடி:ஹமாஸ் எம்.பி கைது

ரமல்லா,நவ.11:ஃபலஸ்தீனின் மேற்குகரையில் ஹமாஸ் இயக்கத்தைச் சார்ந்த எம்.பி ஒருவரை இஸ்ரேல் ராணுவம் கைதுச் செய்துள்ளது.

ஃபலஸ்தீன் சட்டமியற்றும் கமிட்டியின் பொதுச் செயலாளர் மஹ்மூத் ரமாஹினை அவருடைய வீட்டிலிருந்து பிடித்துச் சென்றனர் இஸ்ரேலிய ராணுவத்தினர்.

ஈரானையும், சிரியாவையும் தாக்குவதற்கு திட்டமிட்டோம்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் w புஷ்

வாஷிங்டன்,நவ.11:அமெரிக்க வரலாற்றில் போர்வெறியர் என புகழாரம் சூட்டப்பட்ட அந்நாட்டு முன்னாள் அதிபரான ஜார்ஜ் w புஷ், தன்னால் சாதிக்க முடியாதுபோன தாக்குதல்கள் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.