ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

காஸ்ஸா நிலைகுலையாமல் இருப்பதற்கு காரணம் என்ன?

ரஃபா:நான்கு ஆண்டுகளாக தொடரும் இஸ்ரேலின் தடையை காஸ்ஸாவாசிகள் எவ்வாறு எதிர்த்து நிற்கின்றார்கள்? என்ற கேள்வி நம் முன்னால் எழுகிறது. அதற்கு பதில் சுரங்கங்கள் மூலமாகத்தான் என்பதாகும்.

காஸ்ஸா-எகிப்து எல்லையில் சுரங்க நிர்மாணம் ஒரு குடிசைத் தொழிலாக வளர்ந்து வருகிறது. இத்தொழில் ஏற்பட்டுள்ள போட்டிக் காரணமாக சுரங்கங்கள் தோண்டுவது அவ்வளவு லாபகரமானதாக இல்லை என்று கூறுகிறார் ஃபலஸ்தீனைச் சார்ந்த இளைஞர் ஒருவர்.

சமீபத்தில் பிரிட்டன் பாராளுமன்றம் தயாராக்கிய ஒரு அறிக்கையின்படி 73 அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே காஸ்ஸாவிற்குள் செல்ல இஸ்ரேல் அனுமதித்துள்ளது. ஆனால் காஸ்ஸாவிலுள்ள கடைகளில் 4000க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனைக்கு உள்ளது. அதுமட்டுமல்ல சமீபத்தில் சிமெண்டின் விலை 90 சதவீதம் குறைந்துள்ளது. இஸ்ரேலால் தகர்க்கப்பட்ட 4000க்கும் மேற்பட்ட வீடுகளின் நிர்மாணம் தற்ப்பொழுது வேகமாக நடைபெற்றுவருகிறது.

இஸ்ரேலால் மேற்குக்கரையில் வழங்கப்படும் பெட்ரோல், டீசல் விலையை விட காஸ்ஸாவில் கிடைக்கும் பெட்ரோல், டீசலின் விலை மிகக்குறைவாகும். இவையெல்லாம் எகிப்திலிருந்து சுரங்கங்கள் வழியாக வருகிறது.

அரபு இளைஞர்கள் தங்கள் திறமையை காட்ட பயன்படுத்தும் ஃபோர் வீல் ட்ரைவ் வரை காஸ்ஸாவில் காணமுடிகிறது. சுரங்கங்கள் நிர்மாணிப்பதை தடுக்க இஸ்ரேல் அடிக்கடி குண்டுவீசும். அமெரிக்காவின் நிர்பந்தம் பொறுக்க முடியாத சூழல் வரும்பொழுது எகிப்திய அதிகாரிகள் கட்டுப்பாட்டை விதிப்பார்கள். தற்ப்பொழுது எல்லையில் ஸ்டீல் சுவர் கட்டுவதற்கான முயற்சியில் எகிப்து ஈடுபட்டுள்ளது. ஆனால் அரசியல் நிர்பந்தம்,மற்றும் சர்வதேச அளவிலான காஸ்ஸா மக்களுக்கான ஆதரவும் காரணமாக தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடாமலிருக்கிறது எகிப்து ஹுஸ்னி முபாரக்கின் அரசு.

இஸ்ரேலிய கொடூரத் தாக்குதலுக்கு பிறகு ஹமாஸ் இடிபாடுகளை மாற்றுவதற்கும், மின்சாரம், நீர் ஆகியவை புனர்நிர்மாணிக்கவும் முக்கியத்துவம் அளித்திருந்தது. அதனால் ஹமாஸுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்தது. அமெரிக்க தடையின் காரணமாக வங்கிகளின் செயல்பாடுகள் ஸ்தம்பித்தாலும் ஹவாலா மூலமாக பட்டுவாடா நடைபெறுகிறது. மஹ்மூத் அப்பாஸின் கட்டுப்பாட்டிலிருக்கும் மேற்குகரையை விட இது பரவாயில்லை என்பது காஸ்ஸா மக்களின் கருத்து.

இதற்கிடையே ஹமாஸை பலகீனப்படுத்துவதற்கான முயற்சிகளும் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் இஸ்ரேல் மீது தொடுக்கப்பட்ட ஏவுகணை தாக்கி ஒரு தாய்லாந்து பிரஜையான விவசாயிக் கொல்லப்பட்டதற்கான பின்னணியும் இதுதான் காரணம் என கருதப்படுகிறது.

சவூதி அரேபியாவின் ஆதரவுடன் தீவிர பிரிவான ஸலஃபி அமைப்பு ஒன்று இஸ்லாமிய கிலாஃபத் நிர்மாணிப்பது குறித்து பிரச்சாரம் செய்துவருகிறது. ஆனால் தாடி மற்றும் ஆடையின் நீளம் பற்றித்தான் அவர்களுக்கு முக்கிய கவலை. ஸல்ஸலா என்ற பிரிவும் சில இடங்களில் செயல்பட்டு வருகிறது. நான்கு வருடங்களாக தளராமல் உறுதியாக நிற்கும் ஹமாஸை தடைகள் மூலம் தோற்கடிப்பது இயலாத காரியம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

மொஸாத்-சி.ஐ.ஏ பாதுகாப்பில் வசித்துவரும் மஹ்மூத் அப்பாஸின் கோமாளித்தனமான விளையாட்டுத்தான ஹமாஸின் ஆதரவை அதிகரிக்கச் செய்கிறது.

காஸ்ஸா நிலைகுலையாமல் இருப்பதற்கு காரணம் என்ன?


ரஃபா:நான்கு ஆண்டுகளாக தொடரும் இஸ்ரேலின் தடையை காஸ்ஸாவாசிகள் எவ்வாறு எதிர்த்து நிற்கின்றார்கள்? என்ற கேள்வி நம் முன்னால் எழுகிறது. அதற்கு பதில் சுரங்கங்கள் மூலமாகத்தான் என்பதாகும்.

காஸ்ஸா-எகிப்து எல்லையில் சுரங்க நிர்மாணம் ஒரு குடிசைத் தொழிலாக வளர்ந்து வருகிறது. இத்தொழில் ஏற்பட்டுள்ள போட்டிக் காரணமாக சுரங்கங்கள் தோண்டுவது அவ்வளவு லாபகரமானதாக இல்லை என்று கூறுகிறார் ஃபலஸ்தீனைச் சார்ந்த இளைஞர் ஒருவர்.

சமீபத்தில் பிரிட்டன் பாராளுமன்றம் தயாராக்கிய ஒரு அறிக்கையின்படி 73 அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே காஸ்ஸாவிற்குள் செல்ல இஸ்ரேல் அனுமதித்துள்ளது. ஆனால் காஸ்ஸாவிலுள்ள கடைகளில் 4000க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனைக்கு உள்ளது. அதுமட்டுமல்ல சமீபத்தில் சிமெண்டின் விலை 90 சதவீதம் குறைந்துள்ளது. இஸ்ரேலால் தகர்க்கப்பட்ட 4000க்கும் மேற்பட்ட வீடுகளின் நிர்மாணம் தற்ப்பொழுது வேகமாக நடைபெற்றுவருகிறது.

இஸ்ரேலால் மேற்குக்கரையில் வழங்கப்படும் பெட்ரோல், டீசல் விலையை விட காஸ்ஸாவில் கிடைக்கும் பெட்ரோல், டீசலின் விலை மிகக்குறைவாகும். இவையெல்லாம் எகிப்திலிருந்து சுரங்கங்கள் வழியாக வருகிறது.

அரபு இளைஞர்கள் தங்கள் திறமையை காட்ட பயன்படுத்தும் ஃபோர் வீல் ட்ரைவ் வரை காஸ்ஸாவில் காணமுடிகிறது. சுரங்கங்கள் நிர்மாணிப்பதை தடுக்க இஸ்ரேல் அடிக்கடி குண்டுவீசும். அமெரிக்காவின் நிர்பந்தம் பொறுக்க முடியாத சூழல் வரும்பொழுது எகிப்திய அதிகாரிகள் கட்டுப்பாட்டை விதிப்பார்கள். தற்ப்பொழுது எல்லையில் ஸ்டீல் சுவர் கட்டுவதற்கான முயற்சியில் எகிப்து ஈடுபட்டுள்ளது. ஆனால் அரசியல் நிர்பந்தம்,மற்றும் சர்வதேச அளவிலான காஸ்ஸா மக்களுக்கான ஆதரவும் காரணமாக தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடாமலிருக்கிறது எகிப்து ஹுஸ்னி முபாரக்கின் அரசு.

இஸ்ரேலிய கொடூரத் தாக்குதலுக்கு பிறகு ஹமாஸ் இடிபாடுகளை மாற்றுவதற்கும், மின்சாரம், நீர் ஆகியவை புனர்நிர்மாணிக்கவும் முக்கியத்துவம் அளித்திருந்தது. அதனால் ஹமாஸுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்தது. அமெரிக்க தடையின் காரணமாக வங்கிகளின் செயல்பாடுகள் ஸ்தம்பித்தாலும் ஹவாலா மூலமாக பட்டுவாடா நடைபெறுகிறது. மஹ்மூத் அப்பாஸின் கட்டுப்பாட்டிலிருக்கும் மேற்குகரையை விட இது பரவாயில்லை என்பது காஸ்ஸா மக்களின் கருத்து.

இதற்கிடையே ஹமாஸை பலகீனப்படுத்துவதற்கான முயற்சிகளும் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் இஸ்ரேல் மீது தொடுக்கப்பட்ட ஏவுகணை தாக்கி ஒரு தாய்லாந்து பிரஜையான விவசாயிக் கொல்லப்பட்டதற்கான பின்னணியும் இதுதான் காரணம் என கருதப்படுகிறது.

சவூதி அரேபியாவின் ஆதரவுடன் தீவிர பிரிவான ஸலஃபி அமைப்பு ஒன்று இஸ்லாமிய கிலாஃபத் நிர்மாணிப்பது குறித்து பிரச்சாரம் செய்துவருகிறது. ஆனால் தாடி மற்றும் ஆடையின் நீளம் பற்றித்தான் அவர்களுக்கு முக்கிய கவலை. ஸல்ஸலா என்ற பிரிவும் சில இடங்களில் செயல்பட்டு வருகிறது. நான்கு வருடங்களாக தளராமல் உறுதியாக நிற்கும் ஹமாஸை தடைகள் மூலம் தோற்கடிப்பது இயலாத காரியம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

மொஸாத்-சி.ஐ.ஏ பாதுகாப்பில் வசித்துவரும் மஹ்மூத் அப்பாஸின் கோமாளித்தனமான விளையாட்டுத்தான ஹமாஸின் ஆதரவை அதிகரிக்கச் செய்கிறது.

சவூதி அரேபியாவில் கனமழை: 50 பேர் மரணம்.

Sunday, April 18, 2010
ஜித்தா:சவூதி அரேபியாவில் பிஷா, அஸீர் மாகாணங்களில் கடந்த நான்கு தினங்களாக பெய்துவரும் கனத்த மழையால் ஏற்பட்ட விபத்தில் 50 பேர் மரணமடைந்தனர். 395 பேருக்கு காயம் ஏற்பட்டது. சிவில் டிஃபன்ஸ் 250 பேரை உயிரோடு மீட்டுள்ளது. வீடுகளை இழந்த 145பேருக்கு சிவில் டிஃபன்ஸ் அதிகாரிகள் வேறு இடத்திற்கு மாற்றியுள்ளனர். யெமன் நாட்டையொட்டிய பிரதேசத்தில்தான் மழைப்பெய்தது.

கிராமங்களையும், அரசு அலுவலகங்களையும் இணைக்கும் ஏராளமான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அப்பிரதேசத்தில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. சவூதி மின்சாரத்துறை ஊழியர்கள் மின்சாரத் தொடர்பை ஏற்படுத்துவதற்காக 24 மணிநேரமும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். 4596 வாகன விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக பதிவுச் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜித்தாவில் கனமழையால் ஏற்பட்ட விபத்தில் ஏராளமானோர் மரணமடைந்திருந்தனர்.
Read more...

இந்தியாவை 'ஹிந்து' நாடாக அறிவிக்க வேண்டும்- பிரவீன் தொகாடியா.

இந்தியாவின் சவால்களை எதிர் கொள்ள இந்தியாவை இந்து நாடக அறிவிக்க வேண்டும் என அறிவித்துள்ளது தீவிரவாத விஷ்வ ஹிந்து பரிஷத். இந்தியா ஹிந்து நாடாக இருந்தால் மட்டுமே இது முடியும் என அது கூறியுள்ளது. இதுகுறித்து தீவிரவாத வி.எச்.பியின் தலைவர் தொகாடியா கூறும்பொழுது "வி.எச்.பி அமைப்பு இந்தியாவை 'ஹிந்து' நாடாக மாற்ற விரும்புகிறது. எப்படி இங்கிலாந்து சீர்திருத்தத் திருச்சபையாளர்கள் (Protestants) மட்டும் ஆட்சி செய்து அதை உலகின் முன்னணி ஜனநாயகமாக திகழ செய்துள்ளார்களோ, அது போல இந்தியாவை 'ஹிந்து'க்கள் மட்டும் ஆட்சி செய்தால் இந்தியா சந்தித்துள்ள தீவிரவாதம், சவால்கள் ஆகியவற்றை எதிர் நோக்க முடியும்." என்று கூறியுள்ளார்.

மேலும் "இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால் தான், இந்தியாவில் பெரிய மாற்றம் உண்டாகும், அது பா.ஜ.க அல்லது காங்கிரஸ் யார் ஆட்சி செய்தாலும் சரி" என கூறிய அவர் "இவ்வாறு அறிவிக்கப்பட்டால் யாரும் சிறுபான்மை இட ஒதுக்கீடு பற்றி பேச மாட்டார்கள், 'வந்தே மாதரம்' பாட எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்." என்றார்."பண்டைய காலங்களில் இருந்து இந்தியா 'ஹிந்து' நாடு தான், அதை மீண்டும் உருவாக்க வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலணாய்வுக் குழு விசுவ இந்து பரிஷத் பொதுச் செயலாளர் தீவிரவாதி பிரவீன் தொகடியாவுக்கு, திங்கள் கிழமை (19-04-2010) அன்று விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியுள்ளது. எங்களுடைய பன்னாட்டுப் பொதுச் செயலாளர் தொகாடியா சிறப்புப் புலனாய்வுக் குழு முன் ஏப்ரல் 19ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று சம்மன் வந்துள்ளதாக விசுவ ஹிந்து பரிஷத் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியன்று 69 நபர்களுடன் கொல்லப்பட்ட மக்களவை முன்னாள் உறுப்பினர் இஹ்ஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி கொடுத்த புகாரின் அடிப்படையில் தொகாடியாவுக்கு சம்மன் அனுப்பப் பட்டுள்ளதாக சிறப்புப் புலனாய்வுக் குழு வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
Read more...

குளச்சல் பள்ளி வாசல் மீது தாக்குதல;

குளச்சல் பள்ளி வாசல் மீது தாக்குதல் நடத்தி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்ய கோரி இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் காவல் நிலையத்தில் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. குளச்சல் அண்ணாசிலை சந்திப்பில் உள்ள மீரானியா பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தி அதன் ஜன்னல் கண்ணாடிகளை கடந்த 8ம் தேதி மர்ம நபர்கள் உடைத்தனர். குற்றவாளிகளை கைது செய்ய கோரி முஸ்லிம்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் இதை செய்திருப்பார்கள் என்று இஸ்லாமிய இயக்கங்களும் பொதுமக்களும் நம்புகிறார்கள். இந்நிலையில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் குற்றவாளிகளை உடனே கைது செய்ய கோரி குளச்சல் காவல் நிலையத்தில் கோரிக்கை மனுக்கள் கொடுக்கும் போராட்டம் நேற்று நடந்தது.

போராட்ட குழு கன்வீனர் நூர்முகமது தலைமையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ, தமுமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மறுமலர்சி முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகிய இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் உட்பட 68 பேர் குளச்சல் இன்ஸ்பெக்டர் கந்த குமாரனிடம் தனித்தனியாக கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் மீரானியா பள்ளிவாசல் மீது கண்ணாடியை உடைத்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். அனைத்து இஸ்லாமிய இயக்கங்களை சேர்ந்தவர்களும் மனு கொடுக்க காவல் நிலையத்திற்கு திரளாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Read more...

கஷ்மீரில்

கஷ்மீரில் இந்திய பயங்கரவாத ராணுவத்தால் சுட்டு கொள்ளப்பட்ட 70 வயது முதியவர்.
ஸ்ரீநகர்: கஷ்மீரில் ஆள்மாறி 70 வயது முதியவரை ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.
ராணுவத்தால் கொல்லப்பட்ட ஹபீபுல்லாஹ் கானுக்கு தீவிரவாதத் தொடர்பு உள்ளது என்றும், அவரிடம் ஏ.கே.47 துப்பாக்கியும், ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றியதாகவும் ராணுவம் கூறியிருந்தது. ஆனால் விரிவான விசாரணையில் கொல்லப்பட்ட ஹபீபுல்லாஹ் கான் குப்வாரா மாவட்டத்தில் வாழ்ந்த ஒரு சாதாரண அப்பாவி மனிதர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அப்பாவி முதியவரை அநியாயமாக சுட்டுக்கொன்ற இந்திய ராணுவம் குற்றவாளிக் கூண்டில் சிக்கியுள்ளது
Read more...

ஸ்பெய்னில்


ஸ்பெய்னில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை
சர்வதேச குழு: ஸ்பெய்ன் பாடசாலையொன்றில் கற்கும் 16 வயதுடைய முஸ்லிம் மாணவி, தான் அணிந்து வந்த ஹிஜாபைக் களையும் படியாகத் தனக்கு விடுக்கப்பட்ட உத்தரவை நிராகரித்ததனால், வகுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.


ஸ்பெய்னிலுள்ள மொரோக்கோ வாசியின் புதல்வியான நவ்ஜா மல்ஹா, மட்ரிட்டிலுள்ள ஜோஸ் செலா பாடசாலையிலிருந்து, ஹிஜாப் தமது பாடசாலையின் ஆடைக் கட்டுப்பாடுகளை மீறுகின்றது என்பதைக் காரணமாகக் கொண்டு, வகுப்பறையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஸ்பெய்னின் பாடசாலைகளில், முஸ்லிம்களது கலாசாரத்தைப் பிரதிபலிக்கின்ற தலையை மறைக்கும் ஆடைகளை அணிவது தொடர்பான சரியான திட்டமோ சட்டமோ இல்லாத நிலையில் இவ்வாறான ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

சுpல தனியார் பாடசாலைகளில், இவ்வாறான ஆடைக் கட்டுப்பாடுகளைத் திணிக்கும் நடைமுறைகள் இல்லை. எனினும், வளர்ந்த பாடசாலைகளிலேயே இவ்வாறான திணிப்புகள் இடம்பெறுவதாக அறியப்படுகின்றது.

நான் மிகவும் கவலையும் அவமானமும் அடைந்ததாக உணர்கிறேன் என மல்ஹா கூறினார். தனது சமயக் கடமை நிமித்தம் இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே தான் ஹிஜாப் அணியத் தொடங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

ஸ்பெய்னின் தேசிய நீதிமன்றத்திலிருந்து முஸ்லிம் பெண் வழக்கறிஞரொருவர், தனது ஹிஜாபை அணிய மறுத்தமைக்காக, நீதிமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நிகழ்வு, கடந்த நவம்பர் மாதம் ஸ்பெய்னில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சிறைக்கைதிகள் நினைவுதினம்


சிறைக்கைதிகள் நினைவுதினம் ஃபலஸ்தீன் மக்கள் போராட்டம் Post under உலகம் நேரம்
காஸ்ஸா:காஸ்ஸா மற்றும் மேற்குகரையில் வாழும் ஃபலஸ்தீன் மக்கள் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி சிறைக்கைதிகள் நினைவு தினத்தையொட்டி இஸ்ரேலிய வெஞ்சிறைகளில் வாடும் ஆயிரக்கணக்கான ஃபலஸ்தீன் மக்களை விடுதலைச் செய்வதற்காக பேரணி மற்றும் போராட்டம் நடத்தினர்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் யஹூத் பாரக்கை கிண்டல் செய்யும் விதமாக அவர்களுக்கெதிரான விசாரணை நாடகத்தை நடத்திக் காட்டினர்.

ஃபலஸ்தீன் செண்ட்ரல் பீரோ ஆஃப் ஸ்டேடிஸ்டிக்ஸ் அறிக்கையின்படி 7 ஆயிரம் ஃபலஸ்தீனர்கள் இஸ்ரேலிய சிறைகளில் வாடுகின்றனர். இதில் 34 பெண் கைதிகளும், 270 குழந்தைகளும், 16 வயதுக்கு கீழ் உள்ள 44 பேரும் அடங்குவர்.

ஈரான் அணுசக்தி விவகாரத்தில் தூதரக நடவடிக்கைகள் மூலம் பரிகாரம் ஏற்படவேண்டும்: பிரேசில் உச்சிமாநாடு


ஈரான் அணுசக்தி விவகாரத்தில் தூதரக நடவடிக்கைகள் மூலம் பரிகாரம் ஏற்படவேண்டும்: பிரேசில் உச்சிமாநாடு

பிரேசிலியா:ஈரான் விவகாரத்தில் சமாதானத்தின் அடிப்படையிலான, பேச்சுவார்த்தை மூலம் பரிகாரம் காணவேண்டும் என இந்தியாவும், பிரேசிலும்,தென்னாப்பிரிக்காவும் வலியுறுத்தின.

பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் நடைபெற்ற இந்தியா,பிரேசில், தென்னாப்பிரிக்கா(IBSA) ஆகிய நாடுகளின் உச்சிமாநாட்டில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

சர்ச்சைக்குரிய விவகாரங்களில் ஐ.நா மற்றும் சர்வதேச அணுசக்திக்கழகத்தின் உத்தரவுகளை பேண ஈரான் தயாராக வேண்டுமெனவும் இம்மாநாடு கேட்டுக்கொண்டது. ஈரானுக்கு அணுசோதனை நடத்துவதற்கு உரிமை உண்டு எனக்கூறிய இந்திய பிரதமர் மன்மோகன்சிங் கூற்றை அங்கீகரித்தது உச்சிமாநாடு. ஆனால் அது ஆபத்தை விளைவிக்க கூடியதாக மாறக்கூடாது எனவும் சர்வதேச சட்டங்களுக்குட்பட்டு செயல்படவேண்டுமெனவும் மன்மோகன்சிங் மேலும் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத்தைக் கண்டித்த உச்சிமாநாடு ஆப்கானிஸ்தானில் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழலுக்கு பரிகாரம் காண சர்வதேச நாடுகள் முன்வர கோரிகை விடுத்தது. பிப்ரவரியில் இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டதை பிரேசிலும், தென்னாப்ரிக்காவும் கண்டித்தன.

தீவிரவாதச் செயல்களை இல்லாமலாக்க இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இருநாடுகளும் ஆதரவு தெரிவித்தன.