புதன், 8 டிசம்பர், 2010

இஸ்ரேல் குடியேற்ற நிர்மாணத்தை முடக்குவதற்கான முயற்சி தோல்வியைத் தழுவியதாக அமெரிக்கா

வாஷிங்டன்,டிச.9:மேற்காசியாவின் அமைதிக்கான முக்கிய காரணியான ஃபலஸ்தீனின் மேற்குகரையில் இஸ்ரேல் குடியேற்ற நிர்மாணத்தை தடுத்து நிறுவதற்கான தங்களுடைய முயற்சி தோல்வியைத் தழுவியதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பி.ஜெ.க்ரவ்லி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். ஆனால், தங்களுடைய முயற்சியிலிருந்து முற்றிலும் இதுவரை பின்வாங்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
விக்கிலீக்ஸ் அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை வெளியிட்ட சூழலில் அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மட்டத்தில் குழப்பம் ஏற்பட்டதன் காரணமாக பேச்சுவார்த்தையை ஒத்திவைத்துள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யஹூத் பாரக் தெரிவித்துள்ளார்.

வடகொரியா பிரச்சனையும் அமெரிக்காவிற்கு தலைவேதனையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் கூறினார். ஆனால் இதனை மறுத்துள்ள பி.ஜெ.க்ரவ்லி தங்களுடைய செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என தெரிவித்தார்.

இரு பிரிவினர்களுக்கிடையே பேச்சுவார்த்தை துவங்குவதற்கு குடியேற்ற நிர்மாணத்தை தற்காலிமாக முடக்கும் மெரிட்டோரியம் தொடர்வதுதான் ஒரே வழி. ஆனால், எங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றிக்கிடைக்கவில்லை. ஆனாலும், இரு பிரிவினர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தை தொடரும் என பி.ஜெ.க்ரவ்லி தெரிவித்தார்.

அமெரிக்காவின் தீர்மானத்தை படித்த பிறகே பதில் அளிக்க இயலும் என ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸின் செய்தித் தொடர்பாளர் மாஇன் ராஷித் அரீக்கத் தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் ஆன்லைன் இணையதளத்திற்கு மாற்றாக புதிய இணையதளம்


கெய்ரோ,டி.9:கத்தர் நாட்டைச் சார்ந்த நிதி உதவியாளர்களுக்கும் இஸ்லாம் ஆன்லைன் இணையதள இதழின் ஆசிரியர் குழுவிற்கும் இடையே பல மாதங்கள் தொடர்ந்த மோதலுக்கு பின்னர் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லான் ஆன்லைன் இணையதளத்தை உருவாக்கிய ஆசிரியர்குழு மாற்று இணையதளமாக ஆன் இஸ்லாம் டாட் நெட் (onislam.net) என்ற இணையதளத்தை கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி துவக்கியுள்ளது.

ஈரானுடனான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை

ஜெனீவா,டிச.8:சுவிட்சர்லாந்து தலைநகரான ஜெனீவாவில் உலக வல்லரசு நாடுகளுடனான ஈரானின் முதல் கட்ட பேச்சுவார்த்தை நிறைவுப்பெற்றது.

பேச்சுவார்த்தையின் அடுத்தக்கட்டம் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நடைபெற இருக்கிறது. அணுசக்தித் தொடர்பான முக்கிய விஷயங்களில் பூரணமான பேச்சுவார்த்தை நடந்ததாக பேச்சுவார்த்தைக்கு தலைமை வகித்த ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறை தலைவர் பரோணஸ் ஆஷ்டன் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஒன்றும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஐ.நா விதித்துள்ள தடையை நீக்க ஈரான் கோரிக்கை விடுத்தது. அடுத்த ஆண்டு ஜனவரி கடைசியில் நடைபெறவிருக்கும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை சாதாரண விஷயங்களும், பரஸ்பர ஒத்துழைப்பும் நிகழ்ச்சி நிரலாக இருக்கும் என ஈரான் அதிகாரியை மேற்கோள்காட்டி பிரான்சு நாட்டு செய்தி நிறுவனம் கூறுகிறது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்சு, பிரிட்டன் ஆகியவற்றின் பிரதிநிதிகளும், ஜெர்மன் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

ஈரானின் பிரதிநிதியாக மூத்த அணுசக்தி மத்தியஸ்தர் ஸஈத் ஜலீல் பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டார்.