செவ்வாய், 28 டிசம்பர், 2010

ஈரான் அணுசக்தி நாடு - அஹ்மத் நஜாத் பிரகடனம்

டெஹ்ரான்,டிச.29:ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகளை தாண்டி அந்நாடு அணுசக்தி நாடாக மாறியுள்ளது என ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் பிரகடனப்படுத்தியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் நிர்பந்தத்தாலும், பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டும் ஈரானுக்கெதிராக ஐ.நா தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், அவர்கள் அனைவரின் முயற்சிகளையெல்லாம் தோற்கடித்து ஈரான் அணு சக்தி நாடாக மாறியுள்ளது என கரஜில் தெற்கு நகரத்தில் கூடியிருந்த மக்களிடையே அஹ்மத் நஜாத் பிரகடனப்படுத்தினார்.