திங்கள், 31 ஜனவரி, 2011

அல் பராதியை எகிப்தின் தலைவராக முன்னிறுத்தும் பணியை அமெரிக்கா செய்து வருவதாகவும் ஈரான் கூறியுள்ளது.

எகிப்தின் அதிபராக கடந்த 30 ஆண்டுகளாகப் பதவி வகித்து வரும் ஹோஸ்னி முபாரக் பதவி விலகக் கோரி நடைபெற்று வரும் மக்கள் புரட்சி 7ஆம் நாளாகத் தொடர்கிறது.

எகிப்தில் நிலவி வரும் வேலை வாய்ப்பின்மை மற்றும் ஏழ்மையால் அதிருப்தியில் இருந்த மக்கள் அண்டை நாடான துனீசியாவில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து வீதிக்கு வந்து போராட்டத்தில் குதித்தனர். கடந்த 24 ஆம் தேதி ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக ஆரம்பித்த இந்த மக்கள் புரட்சி, இன்றும் ஏழாவது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.

யெமன் நாட்டில் போராட்டம் உச்சக்கட்டம்


ஸன்ஆ,ஜன.31:யெமன் நாட்டின் சர்வாதிகாரி அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் ராஜினாமாச் செய்யக்கோரி நடைபெறும் மக்கள் திரள் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. தலைநகரான ஸன்ஆவில் எகிப்து நாட்டு தூதரகத்தை நோக்கி பேரணியாக புறப்பட்ட புரட்சியாளர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். ஆனால் எவரும் காயமடைந்ததாக தகவல் இல்லை.

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

எகிப்தில் சர்வாதிகார அரசுக்கெதிரான மக்கள் திரள் போராட்டம்

ஆட்சிமாற்றத்தை கோரி ஊரடங்கு உத்தரவை மீறியும்,பாதுகாப்புப் படையினருக்கு சவால் விட்டும் ஆறாவது நாளாக களமிறங்கிய எகிப்து நாட்டு மக்கள் கெய்ரோவின் கட்டுப்பாட்டை தங்கள் வசம் கொண்டுவந்துள்ளனர்.

ராணுவ உடையை களைந்துவிட்டு ராணுவ வீரர்களும் மக்களோடு போராட்டத்தில் கலந்துகொண்டனர். போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கு இடையே நடந்த மோதலில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 150 ஐ தாண்டியுள்ளது. நான்காயிரத்திற்கும் அதிகமானோருக்கு காயமேற்பட்டுள்ளது. போலீஸ் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய வேளையிலும் மக்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை.

திங்கள், 3 ஜனவரி, 2011

மேற்கத்திய நாடுகளின் உளவு விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்

தெஹ்ரான்,ஜன:வளைகுடா நாடுகளில் மேற்கத்திய நாடுகளுக்காக உளவு வேலைப் பார்த்த இரண்டு ஆளில்லா விமானங்களை ஈரானின் புரட்சிப் படையினர் சுட்டு வீழ்த்தியதாக மூத்த கமாண்டர் அறிவித்துள்ளார்.

கடந்த சில காலங்களுக்கிடையே பல விமானங்களையும் சுட்டு வீழ்த்தியுள்ளதாக பார்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.