திங்கள், 3 மே, 2010

மத்திய கிழக்குப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க இஸ்ரேல், எகிப்து தலைவர்கள் சந்திப்பு

இஸ்ரேல் பிரதமர் பென்ஜெமின் நெதன்யாஹு எகிப்து ஜனாதிபதி ஹொஸ்னி முபாறக்கிடையிலான முக்கிய பேச்சுவார்த்தைகள் நேற்று எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் ஆரம்பமானது.

2008ம் ஆண்டு முறிவடைந்த இஸ்ரேல், பலஸ்தீன் பேச்சுவார்த் தைகளை மீண்டும் ஆரம்பிப்பது சம்பந்தமாகப் பேசும்பொருட்டு இத் தலைவர்கள் சந்தித்துக் கொண் டனர். இஸ்ரேல், பாலஸ்தீனர் க் கிடையில் நடந்த அனைத்து பேச்சுவார்த்தைகளையும் எகிப்தே மத்தியஸ்தராக நின்று நடத்தியது. காஸா இஸ்ரேலிடையே 2008ம் ஆண்டு யுத்தம் ஏற்பட்டதால் இப் பேச்சுக்கள் முறிவடைந்தன.

இதனை மீண்டும் ஆரம்பிப்ப தற் கான சூழலை ஏற்படுத்தவே இத் தலைவர்கள் சந்தித்துக்கொண்டனர். அரபுலீக் இப்பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற் பாடுகளையும் செய்துள்ளதுடன் ஏக மனதாக அங்கீகாரத்தையும் வழங் கியுள்ளது.

பெரும்பாலும் இஸ்ரேல் பலஸ் தீன் பேச்சுவார்த்தைகள் மறை முகமாகவே இடம்பெறவுள்ளன. இம் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காதப்பட்சத்தில் நேரடிப்பேச்சுவார்த்தைக்குச் சந்தர்ப்பமில்லையென அரபுலீக் செயலாளர் அமர்முஸா குறிப் பிட்டார்.

மார்ச் மாதம் இஸ்ரேல் எகிப்து தலைவர்கள் சந்தித்தபோது எடுக்க ப்பட்ட தீர்மானங்களுக்கமையவே தற்போது ஆரம்பமாகவுள்ள பேச்சுக் கள் இடம்பெறவுள்ளன. இதற்கான கால அட்டவணைகளும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளன. மேற்குக் கரையில் இஸ்ரேல் குடியேற்றங் களை நிறுவினால் பேச்சுவார்த்தை யிலிருந்து பலஸ்தீன் விலகிக்கொள் ளலாமென அரபுலீக் அறிவித்தது.

கருத்துகள் இல்லை: