திங்கள், 3 மே, 2010

சோமாலியா மசூதியில் குண்டு வெடிப்பு - 34 பேர் பலி 100க்கும் மேற்பட்டோர் காயம்

கடந்த சனிக்கிழமையன்று(மே2) சோமாலியா தலைநகரம் மொகாதிஷுயில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மசூதி ஒன்றில் சக்திவாய்ந்த 2 குண்டுகள் வெடித்ததில் சுமார் 34 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

வழக்கம் போல, அல் கொய்தா தொடர்பிலுள்ள அல்-ஷபாப் என்ற இயக்கத்தை தொடர்புபடுத்தி செய்திகள் வெளியாகின்றன. இந்த குண்டு வெடிப்பில் காயமடைந்த மூத்த உலமா, ஃபுஆத் முஹம்மத் கல்ஃப் என்பவரை குறிவைத்துதான் அமெரிக்க மற்றும் வெளிநாட்டு படைகள் இக்குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளதாக அல் ஷபாப் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.அரசு மற்றும் ஆப்ரிக்கா யூனியனின் படைகளுக்கு எதிராக அல் ஷபாப் போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே நேற்று மற்றொரு மசூதியில் குண்டு வெடித்ததில் சுமார் 2 பேர் உயிரிழந்தனர் ஏராளமானோர் காயமடைந்ததனர்.சோமாலியாவில் சமீப காலமாக மசூதிகளில் மட்டும் குண்டு வெடிப்பது தொடர்ந்து மர்மமாகவே உள்ளது.

கருத்துகள் இல்லை: