புதன், 5 மே, 2010

ஜெருசலம்:சிறைக்கைதியான ஃபலஸ்தீன் முஸ்லிமின் குர்ஆனை கிழித்தெறிந்த இஸ்ரேலிய வார்டன்

ஜெருசலம்:இஸ்ரேலின் சிறைக்கொட்டகையில் அடைக்கப்பட்டுள்ள ஃபலஸ்தீனைச் சார்ந்த ஒருவரிடமிருந்து கைப்பற்றிய புனித குர்ஆனை இஸ்ரேலிய வெறிப்பிடித்த வார்டன் ஒருவன் கிழித்தெறிந்துள்ளான். அஷ்கலன் சிறையில்தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த கைதியான ஃபலஸ்தீன் முஸ்லிமிடமிருந்து கத்திக்கொண்டு வந்த இஸ்ரேலி வார்டன் குர்ஆனை பலவந்தமாக கைப்பற்றி கிழித்தெறிந்துள்ளான்.

இச்சம்பவம் ஃபலஸ்தீனில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே அல் அரூப் அகதிகள் முகாமிலும் மெஜிதோ சிறையிலும் குர்ஆனை பலவந்தமாக கைப்பற்றி கிழித்தெறிந்துள்ளனர் யூத பயங்கரவாதிகள்

கருத்துகள் இல்லை: