புதன், 5 மே, 2010

கஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமைக்கான ஆதரவு தொடரும்: பாகிஸ்தான்


இஸ்லாமாபாத்:கஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமைக்கான தார்மீக, ராஜீய, அரசியல் ரீதியான ஆதரவில் உறுதியாக இருப்பதாக பாகிஸ்தான் தேசிய அசம்பிளியில் பாக்.வெளியுறவுத்துறை அமைச்சர் குரைஷி தெரிவித்தார்.

கஷ்மீர் விவகாரத்தில் ஆசுவாசமான தீர்வைத்தான் பாகிஸ்தான் விரும்புகிறது. கஷ்மீரிகளின் விருப்பங்களுக்கும், ஐ.நா தீர்மானத்திற்கும் ஒத்ததாக இருக்கவேண்டும் அந்த தீர்வு. கஷ்மீரிகள் பங்கெடுக்காத ஒரு பரிகாரமும் நிலைக்காது. கஷ்மீரிகளை சேர்க்காமல் நடக்கும் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை பரிபூரணமாகயிருக்காது.

பிரச்சனை தீர்ப்பதற்காக நாங்கள் எல்லைக்கு அப்பாலும் எல்லைக்கு உள்ளும் உள்ள கஷ்மீரி தலைவர்களுடம் உறவை பேணி வருகிறோம். பாகிஸ்தானின் வெளிநாட்டுக் கொள்கையின் ஆணிவேரான கஷ்மீர் பிரச்சனையை மறந்துவிட்டு முன்னே செல்ல சாத்தியமில்லை. அதேவேளையில் பேச்சுவார்த்தைகள் மூலமாகத்தான் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு.

கடந்த ஆண்டு எகிப்தின் ஷரமுஷேக்கில் வைத்து இருநாட்டு பிரதமர்கள் நடத்திய ஒருங்கிணந்த பிரகடனத்தில் இதனை அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டது. இவ்வாறு குரைஷி கூறினார்.

கருத்துகள் இல்லை: