ஞாயிறு, 5 டிசம்பர், 2010

வளைகுடா ஒத்துழைப்பு கூட்டமைப்பின்(ஜி.சி.சி) முக்கியத்துவம் வாய்ந்த உச்சிமாநாடு இன்று

அபுதாபி,டிச.6:வளைகுடா ஒத்துழைப்பு கூட்டமைப்பின்(ஜி.சி.சி) அங்க நாடுகளின் 31 வது உச்சிமாநாடு இன்று அபுதாபியில் யு.ஏ.இ அதிபர் ஷேக் கலீஃபா பின் ஸயீத் அல் நஹ்யானின் தலைமையில் துவங்கும்.

இரண்டு தினங்களாக நடைபெறும் இந்த உச்சிமாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என ஜி.சி.சியின் பொதுச் செயலாளர் அப்துல் றஹ்மான் ஆதிய்யா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

மாறுபட்ட தீர்மானங்கள் இம்மாநாட்டில் எடுக்கப்படும் என ஆதிய்யா தெரிவித்தார். ஜி.சி.சி நாடுகள் நடைமுறைப்படுத்தப்போகும் ஒரே நாணயம், கஸ்டம்ஸ், பொதுசந்தை, ஜி.சி.சி நாடுகளை இணைக்கும் ரெயில்வே, சக்தி, சுதந்திர வியாபாரம் உள்ளிட்ட திட்டங்களின் முன்னேற்றத்தைக் குறித்து விவாதிக்கப்படும்.

அபுதாபியில் எமிரேட்ஸ் பேலஸ் ஹோட்டலில் வைத்து இம்மாநாடு நடைபெறுகிறது. ஒரே நாணயம் திட்டத்திலிருந்து விலகி நின்ற யு.ஏ.இ இத்திட்டத்தில் சம்மதம் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானின் அணுசக்தி திட்டம், ஈரான் கைப்பற்றிய யு.ஏ.இயின் மூன்று தீவுகள், ஈராக், ஃபலஸ்தீன் உள்ளிட்ட விவகாரங்கள் இம்மாநாட்டில் விவாதிக்கப்படும்.

சவூதி அரேபியா, யு.ஏ.இ, ஒமான், பஹ்ரைன், குவைத், கத்தர் ஆகிய நாடுகளின் கூட்டமைப்புதான் ஜி.சி.சி.

கருத்துகள் இல்லை: