செவ்வாய், 21 டிசம்பர், 2010

சவூதி அரேபியாவுடனான நல்லுறவுக்கு முன்னுரிமை


டெஹ்ரான்,டிச.20:சவூதி அரேபியாவுடனான நல்லுறவுக்கு நான் முன்னுரிமை அளிப்பேன் என ஈரானின் புதிய வெளியுறவு அமைச்சர் அலி அக்பர் ஸலாஹி தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்திப் பற்றிய அச்சம் வளைகுடா பகுதியில் நிலவுவதை கருத்திக்கொண்டே இம்முடிவு எனக் கருதப்படுகிறது.
முக்கிய நட்பு நாடான துருக்கியுடனான உறவை பலப்படுத்தவும், ஐ.நாவில் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகளான சீனா மற்றும் ரஷ்யாவுடனான உறவை மேம்படுத்தவும் முன்னுரிமை அளிக்கப்போவதாக அலி அக்பர் ஸலாஹி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: