வாஷிங்டன்:இஸ்ரேலிற்க்கு நாங்கள் அளித்து வரும் ஆதரவும், பாதுகாப்பும் எந்த சூல்நிலையிலும் வாபஸ் பெற மாட்டா என்று அமெரிக்க செயலாளர் ஹிலாரி கிளிங்டன் தெரிவித்துள்ளார்.அதிபர் ஒபாமா மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூவிற்க்கும் இடையே சில பிரச்சனைகள் இருந்தாலும், யு.எஸ் உங்களுக்காக என்றும் முன்னிற்க்கும்! உங்கள் இடர்களில் பங்குகொள்ளும்! உங்களின் தோல்களில் உள்ள சுமையை பகிர்ந்துக் கொள்ளும்! இரு நாடுகளும் தங்களுடைய எதிர்காலத்தை சேர்ந்தே சந்திக்கும்!" என்று இஸ்ரேலின் 62ஆம் ஆண்டு விழாவில் கிளிங்டன் சூளுரைத்தார்.
"எனக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஒரு ஆழமான தனிப்பட்ட கடமை ஒன்றுள்ளது. ஆகவே, அது ஒபாமாவிற்க்கும் பொருந்தும். இஸ்ரேலுக்கெதிராக பல சவால்கள் இன்றுள்ளன. ஆனாலும், அது தன் வாக்குறுதிகளை இதுவரை இல்லாதவாறு பேணிவருகிறது" என்றார். அவர் மேலும் கூறுகையில், "இஸ்ரேல் மற்றும் ஃபலஸ்தீன நாட்டின் பிரச்சனைகளை தீர்த்தால், மத்திய கிழக்குகில் அமைதி ஏற்படுத்தும் என்ற ஒபாமா அரசின் நம்பிக்கை இன்னும் சாத்தியம்தான்" என்று தெரிவித்தார்.
"1948ல், வெறும் 11 நிமிடத்தில் அப்போதைய ஜனாதிபதி எடுத்த முடிவுதான் இன்று இஸ்ரேல் என்ற நாடு உருவாக காரணம்" என்று நினைவு கூர்ந்தார்.மேலும் "அன்றிலிருந்து இன்றுவரை, உங்களுடன் யு.எஸ் ஒற்றுமையோடுள்ளது" என்றார் கிளிங்டன். ஆனால், கடந்த மார்ச்சில் யு.எஸ் துணை ஜனாதிபதி பிடேன் இஸ்ரேல் சென்றபோது இஸ்ரேல் 1600 குடியேற்ற்ங்கள் கொண்ட யூத விரிவாக்கத்தை அறிவித்தது. இதை கிளிங்டன், அமெரிக்காவை அவமானப்படுத்துகிற செயல் என்றும் சாடிருந்தார்.இந்த வருடம் அமெரிக்கவிற்கும் இஸ்ரேலிற்க்கும் இடையே ஏற்பட்ட பல பிரச்சனைகளுக்கு மத்தியில், கிளிங்டனின் இந்த புகழாரம் இஸ்ரேல்-அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மேலும் வலுபடுத்தும் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர்.
Read more...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக