செவ்வாய், 7 டிசம்பர், 2010

ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை துவங்கியது

 ஜெனீவா,டிச.7:ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக ஈரானுக்கும் உலகின் வல்லரசு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்து தலைநகரமான ஜெனீவாவில் துவங்கியது.

ஒரு வருடத்திற்கு பிறகு முதன்முறையாக உலகநாடுகள் ஈரானுடன் பேச்சுவார்த்தை இவ்விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துகின்றன.

ஐரோப்பிய யூனியனின் பிரதிநிதி காதரின் அஷ்டன் தலைமை வகிக்கும் இப்பேச்சுவார்த்தையில் பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.

ஈரானின் பிரதிநிதியாக மூத்த அணுசக்தி மத்தியஸ்தர் ஸஈத் ஜலீல் பங்கேற்கிறார். அணுசக்தி திட்டத்தில் முக்கிய காரணியான செறியூட்டப்படாத யுரேனியத்தை உள்நாட்டில் நிர்மாணிப்பதில் தாங்கள் வெற்றிப் பெற்றிருப்பதாக ஈரான் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தது.

ஈரான் அணு ஆயுதங்களை நிர்மாணிப்பதாக கூறும் மேற்கத்திய நாடுகளின் குற்றச்சாட்டிற்கு அந்நாடு மறுப்புத் தெரிவித்திருந்தது.

கருத்துகள் இல்லை: