செவ்வாய், 27 ஏப்ரல், 2010

ஈரானுக்கு எதிராக ஐநாவின் புதிய பொருளாதார தடைகளை விரைவாக அமல்படுத்த ஒபாமா



ஈரானுக்கு எதிராக ஐநாவின் புதிய பொருளாதார தடைகளை விரைவாக அமல்படுத்த வைப்பதில் அமெரிக்க அதிபர் ஒபாமா தீவிரமாக உள்ளதாக அமெரிக்க பொது விவகாரங்களுக்கான அமைச்சர் பி.ஜே.கிரவ்லி தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிரான தடைக்கு ஆதரவு திரட்டுவதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், கடந்த வார இறுதியில் பல்வேறு உலக தலைவர்களுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இத்தகவலை வாஷிங்டனில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்த அமெரிக்க பொது விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் பி.ஜே.கிரவ்லி, "ஈரானுக்கு எதிரான ஐ.நா. தடையை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக அமல்படுத்திட அதிபர் பராக் ஒபாமா விரும்புகிறார். இப்போதைக்கு இவ்விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளுடன் அமெரிக்கா தீவிரமாக பேசி வருகிறது" என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: