திங்கள், 26 ஏப்ரல், 2010

எகிப்தில் அடுத்த வருடம் தேர்தல் ;

அவசர காலச் சட்டம் நீடிக்கப்படமாட்டாது
ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் திட்டவட்டமாகத் தெரிவிப்பு

எகிப்தில் 2010ம் ஆண்டு தேர்தல் நடைபெறும் என அந்நாட்டின் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் தெரிவித்தார். விசேட வைபவ மொன்றில் சென்ற சனிக்கிழமை உரையாற்றிய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் இதனை தெரிவித்தார்.
விசேட வைபவமொன்றில் சென்ற சனிக்கிழமை உரையாற்றிய ஜனாதிபதி ஹொப்னி முபாரக் 2011ம் ஆண்டு தேர்தல் இடம் பெறும் வெளிநாடுகளின் தலை யீடுகள் அனுமதிக்கப்பட மாட்டாது. எதிர்க்கட்சிகள் கூறுவதைப் போல அரசியமைப்பு மாற்றம் செய்யப்பட மாட்டாதென தெரிவித்தார்.
1981ம் ஆண்டிலிருந்து எகிப்தின் ஜனா திபதியாக ஹொஸ்னி முபாரக் பதவி வகிக்கின்றார். 82 வயதான இவர் அண்மையில் பிரிட்டன் சென்று சிகிச்சை பெற்று வந்தார். எனினும் அடுத்த ஆண்டு நடை பெறவுள்ள தேர்தலில் போட்டி யிடும் நோக்கம் ஹொஸ்னி முபா ரக்கிற்குண்டென்பது அவரின் பேச்சிலிருந்து தெளிவாகியது.
இது வரைக்கும் உதவி ஜனாதிபதி ஒரு வரை ஹொஸ்னி முபாரக் நியமிக்கவில்லை. 2005 ஆம் அண்டு இவரது மகன் உதவி ஜனாதி பதியாக நியமிக்கப்படுவாரெனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இவர் மீண்டும் போட்டியிட விரும் புவதையே இந்நடவடிக்கை காட்டு வதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எகிப்தின் சினாய் பகுதியிலிருந்து இஸ்ரேல் இரா ணுவம் வெளியேறிய 28 ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய் யப்பட்ட வைபவத்திலே ஹொஸ்னி முபாரக் உரையாற்றினார். அவசர காலச் சட்டத்தையும் நீக்க முடியா தென ஹொஸ்னி முபாரக் தனதுரை யில் குறிப்பிட்டார்.
அரசிய லமை ப்பை மாற்றி அவசர காலச் சட்ட த்தை நீக்கினால் மாத்திரமே தேர்த லில் போட்டியிடலாம் என எதிர்க் கட்சிகள் அடம்பிடிக்கின்றன. எகிப் தின் தற்போதைய அவசர காலச் சட்டம் 1981ம் ஆண்டு அமுலுக்கு வந்தது எகிப்தின் அப்போதைய ஜனாதிபதி அன்வர் சதாத் படுகொலை செய்யப்பட்ட பின் இச்சட்டம் அமுலாக்கப்பட்டது. இஸ்ரேலுடன் இரண்டு வருட சமாதான ஒப்பந்தம் செய்யப் பட்டதால் அன்வர் சதாத் படு கொலை செய்யப்பட்டார்

கருத்துகள் இல்லை: