புதன், 16 பிப்ரவரி, 2011

மத்திய கிழக்கில் ஒரு பார்வை


1.துனிசியா: பின் அலி ஆட்சி அகற்றம். ஊர் அடங்கு உத்தரவு நீக்கம். அவசரகால சட்டம் நடைமுறையில். மக்கள் போராட்டத்தை தடுக்க தேசிய கவுன்சில் அமைக்கத் திட்டம். நகரங்களில் ஆளுநர்கள் மாற்றம் மற்றும் வதந்திகளை கிளப்பி குழப்பம் உண்டாக்கும் நபர்களை கைது செய்ய அல்லது சுடுவதற்கு அனுமதி.

2.எகிப்து: முபாரக் ராஜினாமா. உடல் நிலைக் கவலைக்கிடம். பொருளாதார சரிவில் எகிப்து, வங்கிகள் மூடல். வெளிவரும் பெண்களின் பிரச்சனைகள். இக்வான்களின் அரசியல் விரைவில் துவக்கம்.

3. அல்ஜீரியா: மக்கள் போராட்டம் அதிகரிப்பு. மக்களை அடக்க நினைக்கும் அரசு, அதற்கு துணைபோகும் ராணுவம் மற்றும் போலீஸ். ல் இருந்து நிலவும் அவசரகால சட்டத்தை நீக்க பிரமர் ஒப்புதல். வீடுகள், வேலைவாய்ப்பு, பசிப்பட்டினி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான பிரதமர் வாக்குறுதி.
4.பஹ்ரைன்: ஆட்சிக்கெதிராக மக்களின் போராட்டங்கள் தீவிரம். போராட்டங்களில் போலிசிற்கும் மக்களுக்கும் சண்டை மூண்டது. இதுவரை நான்கிற்கும் மேற்பட்டோர் மரணம். தொடர்ந்து அரசியல் கொந்தளிப்பு. மக்களை அடக்க அமெரிக்க ராணுவம் சவூதியிலிருந்து ஹெலிகாப்டர்கள் மூலமாக வந்துதுள்ளதாக தகவல். பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. எகிப்து போராட்டத்தில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தலைநகர் மனாமாவில் நேற்று பேரணி. கலவரம் ஏற்படும் என்பதால் வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவை மனாமாவில் மூடப்பட்டிருந்தன.

5.எமன்: 5 வது நாளாக தீவிர போராட்டம். துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி. அதிபர் அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக தலைநகர் ஸன்ஆவில் மக்கள் ஆர்ப்பாட்டம். ஆயிரக்கணக்கான பல்கலை மாணவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தலைநகர் சனாவில் உள்ள அதிபர் மாளிகை நோக்கிச் செல்லும் தெருக்களில் ஏகப்பட்ட சோதனைச் சாவடிகள் . பல இடங்களில் கம்பி வலைகள் குறுக்காக போடப்பட்டுள்ளன.

6.ஈராக்: ஆங்காங்கே மக்கள் போராட்டம். அரசு அலுவலகங்கள் தீவைத்து தகர்ப்பு. மக்கள் கோஷங்கள் அதிகரித்தவண்ணம் உள்ளது. மேற்கத்திய ராணுவம் மக்களை அடக்கும் முயற்சியில்.
7.ஈரான்: இங்கு ஒரு வித்தியாசமான நிகழ்வு. மற்ற நாடுகளில் மக்கள் முன்வந்து போராடுகிறார்கள். ஆனால் இங்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தூண்டுதலின் படி எதிர்க்கட்சி மூலம் போராட்டம். எதிர்க்கட்சி தலைவர் வீட்டுக்காவலில். திங்கட்கிழமை நடந்த போராட்டத்தில் போலிசிற்கும் போராட்டக்காரர்களுக்கும் மத்தியில் கலவரம் மூண்டது. இரண்டு பேர் கொல்லப்பட்டனர். மீடியாக்கள் ஈரான் விவகாரங்களை பெரிதாக்குகின்றது

ஈரான் மக்களோடும் மக்கள் ஈரான் அரசோடும் உள்ளது ஈரானில் அமெரிக்கா இஸ்ரேலி கூழிப்படைககள் ஈரானுக்குள் பிரச்சனை இருப்பதாக காட்ட முணைகிறது. ஆனால் அங்கு ஷீஆக்கள் சுன்னாக்கள் என்ற வேறுபாடு இன்றி ஒற்றுமயாக இருப்பதை ஆய்வுகள் சொல்கின்றன. ஈரானில் புரட்சி என்கினற குழப்பத்தை எதிர் பார்க்கின்ற அமெரிக்கா ஏன் கிழக்காசியாவில் தனது ஜனநாயக ஆதரவை தெரிவிப்பதில்லை. காரணம் இரானுடைய வளர்ச்சி அமெரிக்கா தொடக்கம் அமெரிக்கா சார் அரபு நாடகளுக்கும் எச்சரிக்கையாகவே இருக்கிறது. இதனால் ஈரானில் குழப்பத்தை ஏற்படுத்துவதில் இரவு பகலாய் உழைக்கிறது அமெரிக்க இஸ்ரேலிய அரசு. மேலும், மத்திய கிழக்கு பகுதுகளில் அமெரிக்கா தனது ஆளுமையை ஜனநாயகம் என்ற போர்வையில் நிலைநிறுத்த முயல்வதகாவும் முன்னதாக, ஈரானில் கலவரங்களின் பின்னணியில் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் உள்ளதாக அதன் எம்.பிக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மத்திய கிழக்கு பகுதிகளில் மக்கள் போராட்டங்களை ஈரான் ஆதரித்ததினால் அவர்கள் இவ்வாறு நடந்துகொள்வதாக ஈரான் மக்களவை தலைவர் தெரிவித்துள்ளார்.

லெபனான:தெற்கு லெபனானில் மீண்டும் ராணுவத்தை அனுப்புவோம் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யஹூத் பாரக் மிரட்டல் விடுத்துள்ளார்.

ஹிஸ்புல்லாஹ் போராளிகளை துரத்துவதற்காக எதிர்காலத்தில் தாக்குதல் நடத்துவோம். புதிய ராணுவத் தலைவராக பொறுப்பேற்றுள்ள பென்னி காண்ட்சுடன் லெபனானின் எல்லையில் நடத்திய சந்திப்பின்போது யஹூத் பாரக் இந்த மிரட்டலை விடுத்துள்ளதாக இஸ்ரேலின் ஹாரட்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு இஸ்ரேல் லெபனானின் மீது 33 தினங்களாக நடத்திய தாக்குதலில் 1200 லெபனான் அப்பாவி குடிமக்கள் கொல்லப்பட்டனர். ஹிஸ்புல்லாஹ்வை அழித்தொழிக்க இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பிறகும் லட்சியம் நிறைவேறவில்லை. ஆனால், ஹிஸ்புல்லாஹ்வுக்கு பலத்த அடி கிடைத்ததாக யஹூத் பாரக் கூறுகிறார்.

லெபனான் கடல் எல்லையை கடக்கும் முன்பு இஸ்ரேலின் கடற்படை கப்பலை தாக்குவோம் என ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை விடுத்துள்ளது

கருத்துகள் இல்லை: